முகப்பு

mardi 6 décembre 2011

வேரில் இருந்துதான் பூ வருகிறது.


பூவிலிருந்து வேர் வருவதில்லை, வேரில் இருந்துதான் பூ வருகிறது. காற்றிலோ, விண்ணிலோ அழகாக மலரும் எதுவுமே தன் அழகை, சக்தியை வேரிலிருந்துதான் பெறுகிறது.

மண்ணில் புதைந்த ஆழமான வேர்களின் சாறினால்தான் உயிருள்ள எல்லாம் பூத்து நிற்கின்றன. கன்னத்தில் மறைந்திருக்கும் வெட்கம் மண்ணின் வேதியல் பொருட்களில் மறைந்திருக்கும் அமைதியான உயிர் சக்தியில் இருந்துதான் வருகிறது. மண்ணைப் பிரிந்து வானில் பூக்க முடியாது
மண்ணில் இருந்து, பூமியின் அமைதியான மடியில் இருந்துதான் வாழ்வின், சக்தியின் ஊற்று வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து, மக்களின் அமைதியான இதயத்தில் இருந்து நம்பிக்கையும், உறுதியும் சந்தோஷத்தோடு வெளிப்பட்டு பூமியின் அழகை புதுப்பிக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire