முகப்பு

vendredi 20 janvier 2012

என் அன்னையின் அன்புக்கு......!!


தன்உயிரை எனக்கு தந்து ,
உயிர் கொடுத்தவள் !!
தன் ரத்தத்தை பாலாய் தந்து ,
பாசத்தை ஊட்டியவள் !!
மசக்கையிலும்,வாந்தியாலும் ,
தான் துவண்டலும் !!
மனதாலும்,வார்த்தைகளாலும் ,
மற்றவர்களை சந்தோஷபடுத்தியவள் !!
நான் உதைத்த உதைகளை
வயிற்றுக்குள் வாங்கி
நெஞ்சத்தில் மகிழ்ந்தவள் !!
நான் அழுத நொடி ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
நான் சிரித்த நொடியிலும் ,
அவள் கண்ணீர் விட்டவள் !!
ஆனந்த கண்ணீராக...
வளர்ந்துதான் இருக்கிறேன்
உடலளவில்,
நானும் குழந்தைதான் மனதளவில்,
பாசத்துடன் தலை கோதும்
என் அன்னையின் அன்புக்கு......!!

Aucun commentaire:

Enregistrer un commentaire