முகப்பு

mercredi 1 juin 2016

விலை மதிக்க முடியாத ஓரே சொத்து


வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ, அதே போல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி மிக அவசியம்..!!

தன்தேவைக்காக தேனொழுகபேசிவிட்டு தேவைகள் முடிந்தபின்னே தேளினைபோல் கொட்டுகிறார்கள்,தேகமெங்கும் நஞ்சினை வைத்துக்கொண்டுள்ள சில மனித விஷஜந்துக்கள்

மனம் நிறைந்த சிரிப்பில் எல்லோரிடமும் இருப்பது... அழகு மட்டுமே !!!
என் இதயம் அழகான பூஞ்சோலை .... அதில் அழகான நட்பூக்கள் பூத்திருக்கிறது அன்புதான் இதன் பசளை

தனிமையை விரும்பிகிறேன் அது என்னை புரிந்து கொண்ட அளவிற்கு கூட மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை..

பணத்தை தேடி ஓடுகிறவன் ஒரு நாள் அதை விட வேகமா திரும்ப வருவான்.. அப்பொழுது அனுபவிக்க வாழ்க்கை மீதம் இருக்காது..!

பூக்கள் அழகானவைதான் அதன் வாழ்நாள் குறைவு ஆனால் செடிகள் அப்படி இல்லை எனவே பூக்களாக இருக்க ஆசைபடாமல் செடிகளாகஇருப்போம்
விட்டு கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மை தேடி வரும்

மனசுக்கு பிடித்த ஒரு சொந்தம் இருக்கும் வரை இதயத்தில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்

ஆழமான அன்பிற்கு ஆணிவேராக அமைவது கடுகளவும் சந்தேகமில்லாத நம்பிக்கை மட்டுமே.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு., தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் "சுயநலம்".,

வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஓரே சொத்து இந்த "நொடி" மட்டுமே... நற்காலை வணக்கம்

Aucun commentaire:

Enregistrer un commentaire