முகப்பு

mardi 19 janvier 2016

நிறம் தரும் பலன்


நிறம் தரும் பலன்

காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் அணியும் உடைக்கு ஒரு சங்கேத மொழி இருக்கிறது. தங்கள் உடை மூலம் அதை தெரியப்படுத்துவார்கள். அதேபோல் உங்களுக்கு பிடித்த கலரை சொன்னால் அதை வைத்து ஒரு ஜோதிடமே சொல்கிறார்கள்.

வெள்ளை
நிறத்தை விரும்புகிறவர்கள், இளமை விரும்பிகள். எல்லா செயலிலும் முழுமையாக எதிர்பார்பார்கள். ஆனால் அது நடக்காது. ஆழம் பார்த்து காலை விடுபவர்கள். அதனால் சாமான்யத்தில் ஏமாற மாட்டார்கள்.

சிவப்பு நிற விரும்பிகள் எப்போதும் ஆக்டீவாகவே இருப்பார்கள். வேகமாக செயல்படுவார்கள். இந்த கலர் பிடித்தவர்களுக்கு ஒரே வித வாழ்க்கை என்றால் கசப்பு. அதனால் துணைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்களுக்கு அதிகமான மனவலிமை இருக்கும். அதுதான் இவர்களின் பலமும் பலவீனமும்.

பிங்க் நிறம் பிடித்தவர்கள் சரியான சுயநலவாதிகள். எப்போதும் தன்னை யாரவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்பவர்கள். இதற்காக பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாக நடிப்பார்கள்.

மெரூன் நிறம் பிடித்தவர்கள் மெச்சூரிட்டி தெரிந்தவர்கள், வாழ்க்கையில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் அனுபவித்த கஷ்டங்களை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள்.

ஆரஞ்சு நிறம் விரும்பிகள் சுகவாசிகள். அவர்களுக்கு எப்போதும் சந்தோசம் வேண்டும். சந்தோஷத்துக்காக நிலை இல்லாமல் அலைவார்கள்.

மஞ்சள் நிறம் பிடித்தவர்கள் புத்திசாலிகளாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சுதந்திரமாக செயல்பட்டால் சாதனை புரிவார்கள்.

பச்சை நிறம் பிடித்தவர்கள் மென்மையானவர்கள். அதே வேளையில் எப்போதும் நேர்மை தவற மாட்டார்கள். அன்பு தான் இவர்களின் ஆயுதம். அன்பு தான் இவர்களின் சாய்ஸ். அதனால் சுற்றிலும் இருப்பவர்கள் எப்போதும் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள்.

கறுப்பு நிறம் பிடித்தவர்கள் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார்கள். மற்றவர்களை சுலபமாக நண்பர்கள் ஆக்கிக் கொள்வார்கள். மரியாதை என்பது இவர்களுக்கு மரணம் போல அவர்கள் விரும்பாவிட்டாலும் தேடி வரும்.

லேவண்டர் நிறம் பிடித்தவர்கள் கலாச்சாரக் காவலர்கள். பழமை விரும்பிகள். புதுமையை ரசிக்க முடியாதவர்கள். ஏற்றுக் கொள்ள முடியாமல் தயங்குபவர்கள். கட்டம் போட்ட பேண்ட் இவர்களுக்கு அலர்ஜி. எண்ணம் எல்லாமே உயர்வாக இருக்கும். ஆனால் வேலை என்று வந்து விட்டால் விழுந்தடித்து ஓடுவார்கள். ஓடிப்போய் குறட்டை விட்டு தூங்குவார்கள். வேலைக்கும் இவர்களுக்கும் ஆகாது

இப்படி நிறங்களை வைத்து ஒருவரின் கேரக்டரை சொல்லி விட முடியும். கேரக்டருக்கு ஏற்றார் போல் மனித மனம் அந்த கலரை விரும்பும். வாழ்க்கை முழுவதும் ஒரே கலர்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அவ்வபோது பிடித்த கலர்களின் பட்டியல் மாறும். அதற்கு ஏற்றாற்போல் அவர்களின் கேரக்டர்களும் மாறும் என்று அடித்துச் சொல்கிறார்கள், நிற ஜோதிடர்கள்.                    

Aucun commentaire:

Enregistrer un commentaire