முகப்பு

lundi 18 janvier 2016

எதிர்மறை எண்ணம்

    ஒருநாள் ஒரு குழந்தை, குளத்தில் தவறி விழுந்து விட்டது. ஒரு மாலுமி அதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் குழந்தையைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
    மாலுமிக்குக் குழந்தையைக் காப்பாற்றியதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. சிறிதுநேரத்தில் அந்தக் குழந்தையின் தந்தையும் தகவலறிந்து வந்து சேர்ந்தார்.
    "யார் என் குழந்தையைக் காப்பாற்றியது?'' என்று பரபரப்புடன் கேட்டார். தனக்கு வெகுமதி கிடைக்கப் போகிறது என்று நினைத்து ...அந்த மாலுமி, "நான்தான்'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
    "என் குழந்தை அணிந்திருந்த தொப்பி எங்கே?'' என்று கேட்டார், அந்த தந்தை.
    மாலுமி திகைத்துப் போனார்.
    சர்ச்சில் கூறிய இந்தக் கதையைப் போன்ற சம்பவம் நம்முடைய வாழ்விலும் சில நேரங்களில் நிகழ்ந்திருக்கும். நாம் ஒன்றை நினைத்திருப்போம். நடந்தது வேறு ஒன்றாக இருந்திருக்கும்.
    பாராட்டை எதிர்பார்த்திருப்போம். அவமானம்தான் மிச்சமாக இருக்கும்.
    நல்ல விருந்தை எதிர்பார்த்துப் போயிருப்போம், கடைசியில் பட்டினியோடு திரும்பியிருப்போம்.
    வழக்கமாக எடுத்துச் செல்கிற குடையை ஒருநாள் வீட்டில் வைத்துவிட்டுப் போயிருப்போம். அன்றைக்குப் பார்த்து மழை கொட்டி இருக்கும்.
    பேருந்துக்காக நாம் போகிற திசையை நோக்கிக் காத்திருப்போம். எதிர் திசையில் வரிசை வரிசையாய் பேருந்து வந்து கொண்டே இருக்கும்.
    திருமண நிகழ்ச்சிக்காகப் போயிருப்போம். வரவேற்பில், `எங்க சார்... அவங்க வரவில்லையா?' என்று கேட்பார்கள். இத்தனை பேர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியாது. வராதவர்களைத்தான் கேட்பார்கள்.
    இப்படித்தான் பலநேரங்களில் எதிர்மறையான நிகழ்வுகளும், எண்ணங்களும் மனதில் சலனங்களை ஏற்படுத்தும். மனம், மற்றவர்களிடமிருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த முயன்று கொண்டே இருக்கும். ஒருமுறை அத்தகைய உணர்வு ஒருவருடைய மனதில் புகுந்து விட்டால் அதன் பிறகு அவ்வளவு சுலபத்தில் அதிலிருந்து மீண்டு விட முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும். பின்னர் அதைத் தாண்டி எதுவும் நம் உள்ளத்திற்குள் நுழைய முடியாது.
    படிப்பு சில நேரங்களில் சிலருக்கு எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு வருகிறது, குறுக்கு வழிகளைத் தேடச் சொல்கிறது. இந்த மாதிரியான தருணங்களில்தான் மனதை சரியாக வைத்திருக்கப் பழக்கப்படுத்த வேண்டும்.
    எதை எடுத்தாலும் குற்றம் காண்கிற மனப்போக்கு இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன அழுத்தம் அதிகமாவதற்கு இது காரணமாக அமைகின்றது. அடுத்தவன் நம்மை விட நன்றாக வாழ்கிறானே என்கிற எதிர்மறை எண்ணம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire