முகப்பு

dimanche 16 août 2015

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை….?


ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை….?
அது மாணவர்களின் தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம் என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும் பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால் 30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள் தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம் விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும் விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).
10. சினிமா, உறவினர் திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும். மீதி ஒரு நாள்
(3-2=1).
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்….?

Aucun commentaire:

Enregistrer un commentaire