முகப்பு

dimanche 16 août 2015

ஓடிப்போனது யாருடா…?



என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­..
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­.
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. ­…
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..­..
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ­..
ஏன்டா…?
அவமானத்தில்தான் ­…
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.­..?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்.­.

Aucun commentaire:

Enregistrer un commentaire