முகப்பு

lundi 24 janvier 2011

வெகுமதி


ஏழ்மையால் வருந்திய பாடகன் ஒருவன் தற்கொலை செய்ய மரக்கிளையில் தூக்கிட்டுத் தொங்கினான். அவனை அந்த வழியால் வந்த அரசன் காப்பாற்றினான். உயிர் தப்பிய அவன் அரசனைப் புகழ்ந்து இனிய குரலில் பாடினான். பாடலைக் கேட்டும் அரசன் அவனுக்கு எதையும் கொடுக்கவில்லை. நீ என்னைவிட பணக்காரன், உன் குரலால் பாடினால் உலகம் முழுவதற்கும் நீயே முடிசூடா மன்னன் என்றான். தற்கொலை செய்யச் சென்றவன் பெரிய பாடகனாக மாறினான். உயிரின் வெகுமதியை உணர்த்தவே அரசன் தனக்கு வெகுமதி எதையும் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தான்.




Aucun commentaire:

Enregistrer un commentaire