முகப்பு

dimanche 30 janvier 2011

ஞானமுள்ள வார்த்தை



போராட்டமான நேரத்தில் மனிதனுக்கு உதவக்கூடிய வாசகத்தை கண்டு பிடிக்கும்படி ஒரு ராஜா ஐந்து அறிஞர்களை கேட்டார். அவர்கள் கண்டறிந்து சொன்ன மந்திரம் இதுதான் – இது கூட கடந்து சென்றுவிடும் - இதோ அந்த மந்திரப் பாடல் :

துயரத்தில் இருக்கிறாயா தோழா ?

உனக்காக நான் பிரார்த்திக்கிறேன்

ஆறுதல் கொள் இதுகூட கடந்து சென்றுவிடும்.


மேன்மையடைந்துவிட்டாயா சந்தோஷத்தில் தள்ளாடாதே

மனதைக் கட்டுப்படுத்து இதுகூட கடந்து சென்றுவிடும்.

ஆபத்தில் இருக்கிறாயா ? மனம் அலை பாய்கிறதா ?

நம்பிக்கை கொள்..! இதுகூட கடந்து சென்றுவிடும்.

போரிலும் புகழிலும் மமதை கொள்கிறாயா ?

ராஜாபோல திரிகிறாயா ? இதுகூட கடந்து சென்றுவிடும்.

நீ யாராக இருந்தாலும், உன் பாதம் எங்கு சென்றாலும்

இந்த ஞானமுள்ள வார்த்தையைக் கேள் இதுகூட கடந்து சென்றுவிடும்.



Aucun commentaire:

Enregistrer un commentaire