முகப்பு

mardi 19 avril 2016

சகுனம் ::



சகுனம் ::
அவன் வீட்டை விட்டுப்...
புறப்பட்ட ஒரு காலை வேளையில்
குறுக்கே வந்தது
குட்டிகளை ஈன்று
இரண்டு நாட்களே ஆன
சாம்பல் நிற தாய்பூனை ஒன்று
பூனை குறுக்கே வந்ததால்
கெட்ட சகுனமெனப் பரபரத்த
அவன் கோபமுற்றுக்
கிழேக்கிடந்த கூரானக்
கல்லெடுத்து
பூனை மீது வீச
கல்லடிப்பட்ட பூனை
துள்ளிக்குதித்து பாய்ந்தோடி
சாலையில் விரைந்த
பேருந்து சக்கரத்தில் நசுங்கி
துடிதுடித்து
இறந்துபோனது.
தாய்பூனையைக் காணாத
குட்டிகள் ஏக்கத்தில்
சுணங்கலாம்
பசியால் வாடலாம்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து போகலாம்
இரைத்தேடி புறப்பட்ட
பூனைக்கும்
வீட்டிலிருந்து புறப்பட்ட
அவனுக்கும் யாருக்கு யாரு கெட்ட சகுனம்?
பூனைக்கு அவனா?
அவனுக்கு பூனையா?
இதில் யார் யாருக்கு ஜெமன்???

Aucun commentaire:

Enregistrer un commentaire