முகப்பு

samedi 27 août 2011

அவசரவேண்டுகோள்... உடனடியாக..!

அவசரவேண்டுகோள்... உடனடியாக..!




முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.



கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்ற...து.



தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.



பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும் வேதனை என்றே நாம் துடிக்க வேண்டும்.



நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்குதண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.



சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.



காலம் மிகவேகமாக நழுவிக்கொண்டிருக்கிறது.



நாளை என்றும் பின்னர் என்றும் ஒத்திப்போடாமல் இப்போதே,



இந்த நிமிடமே மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் அனுப்புங்கள்.



மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்.



President Prathiba Patil



Fax: (0091) 11 230 172 90 or 230 178 24



presidentofindia@rb.nic.in



---------------------------------------------------



Home Minister P.Chidambaram



Fax: (0091) 11 230 942 21



hm@nic.in



---------------------------------------------------



Prime minister Manmohan Singh



Fax: (0091) 11 230 195 45 230 168 57



manmohansingh@sansad.nic.in



---------------------------------------------------



Tamil nadu CM Jayalalitha



011 91 44 281 33510



011 91 44 24992255



011 91 44 24991414



011 91 44 24992121



cmcell@tn.gov.in

Aucun commentaire:

Enregistrer un commentaire