முகப்பு

mardi 27 septembre 2016

கடவுள்




    நினைத்தது நடக்கும்வரை
    அறிவே பெரிதாகத் தெரியும் !
    நினைத்தது நடக்காதவரை
    நம்பிக்கையே பெரிதாகத்
    தெரியும்!...
    எதிர்பாராதது நடந்துவிட்டால் 
    தெய்வம் பெரிதாகத் 
    தெரியும் !
    எதிர்பார்த்தது இடறப்பட்டால் 
    ஞானம் பெரிதாகத் தெரியும் !
    திறமை எப்போது செயல்இழந்து போகிறதோ ஊழ்வினை பெரிதாகத் தெரியும் !
    பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்குத் தெரியும் !
    உன்னை உனக்குள் தெரியும்போது கடவுள் உன்னிடம் 
    பெரிதாகத் தெரிவார்!

Aucun commentaire:

Enregistrer un commentaire