முகப்பு

mercredi 4 novembre 2015

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.



 
1) வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !!!!
2) தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.
கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும் ....!
3) பணத்திற்காக அன்பு வைக்காதே அது பாதியிலே விலகி விடும்.
அழகுக்காக அன்பு வைக்காதே அது அர்த்தமின்றி போய்விடும்.
அன்புக்காக அன்பு வை அது அஜந்தா ஓவியம் போல் நிலைத்திருக்கும்...
4) அழகை நேசிக்காதே அறிவை நேசி,
பணத்தை நேசிக்காதே பாசத்தை நேசி,
ஆடம்பரத்தை நேசிக்காதே அடக்கத்தை நேசி,
ஆணவத்தை நேசிக்காதே அன்பை நேசி
ஏனெனில் ஆணவம் அழிவுப்பாதையை விரைவில் நோக்கி செல்லும்...!!
5) துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
6) அலட்சியமாக விடும் சிறு சிறு தவறுகள்
நேசிக்கும் ஒருவர் உறவையே பிரித்திடும்...
7) துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்.......
8) கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்
9) கோபம் உன்னை நேசிப்பவர்களை கூட வெறுக்க வைக்கும்...
ஆனால் அன்பு உன்னை வெறுப்பவர்களைக் கூட நேசிக்க வைக்கும்.....

Aucun commentaire:

Enregistrer un commentaire