முகப்பு

mercredi 20 février 2013

சிந்தனைகள்....

 
 
ஏற்கனவே எனது இணையத்தளத்தில் வெளிவந்தது மீண்டும் உங்களுக்காக
 
சிந்தனைகள்....
காலை எழுந்ததும் கைகளைப் பார்த்து வணங்குங்கள். விரல் நுனிப்பகுதியில் லக்சுமியும் மையப்பகுதியில் சரஸ்வதியும் மணிக்கட்டில் கோவிந்தனும் இருப்பதாகக் கூறுவார்கள். ஆலய தரிசனத்திற்கு உங்கள் கைகள் உள்ளன.

சிந்தனைகள்....
தன் தவறுகளை திருத்திக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில்தான் மனிதனின் நல்ல குணம் இருக்கிறது. ஒரு மனிதனின் மனம்தான் அவனுடைய நண்பன்இ அதை அவன் தனது எதிரியாக மாற்றிவிடக் கூடாது.
 
சிந்தனைகள்....
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சிந்தனைகள்....
தன் கிணற்றில் குளிக்கவிடாது..
தன் வாங்கில் படுக்க விடாது..
தனக்கு தேவையற்ற உணவை மற்றவருக்கு கொடுக்க மனமில்லாது..
வாழும் மனிதனாக புவியில் ஒருவன் காணப்பட்டால் அவனால் கடவுளும் கண்ணீர் வடிக்கிறார்.
பணத்தையும் உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.

சிந்தனைகள்....
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

சிந்தனைகள்....
நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உருவாக்காமல் நாம் எவரையுமே கவர இயலாது. செல்வத்தைச் சேமிப்பதைவிட நல்ல பெயரை உருவாக்குவதே சிறப்பானது.
 
சிந்தனைகள்....
சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
 திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்

சிந்தனைகள்....
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்;
ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை....

சிந்தனைகள்....
எத்தனை நாள் பழகினோம் என்பது முக்கியமில்லை ;
எத்தனை நாள் உண்மையாக பழகினோம் என்பதே முக்கியம் ! 

1 commentaire:

  1. நல்ல சிந்தனை தொடர்..மேலும் படிக்க பதிவு செய்யுங்கள்.

    RépondreSupprimer