முகப்பு

mardi 24 juillet 2018

பிடி சாம்பல் வாழ்வு.


பிடி சாம்பல் வாழ்வு.
ஊர்வன நிற்பன நடப்பன பறப்பன
எல்லாம் பிடித்து உணவாக்கி
உலகாரோடு தன் கர்வம் காட்டி
உயிரான உறவில் வன்முறை செய்து
தானே பெரியவனென மகுடம் சூடி
வாழும் நாளில்
அருவருப்பாய்
அடுத்தவரை நோகடித்து
தான் மகிழ்ந்து -
இறந்த பின் தீயிட்டு
தருவார்கள்
பிடிச் சாம்பல்....

Aucun commentaire:

Enregistrer un commentaire