முகப்பு

samedi 13 février 2016

சாப்பாட்டு தத்துவம்

Photo de Jayaraman Venu.


    இது சாப்பாட்டு நேரம் !.... அதனால சாப்பாட்டு தத்துவம் !.. #
    "தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !
    # ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
    ...
    # லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!
    # சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
    வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
    # பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
    # கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
    ‪#‎தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.
    ‪#‎தன்னம்பிக்கைச்‬ சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!
    ‪#‎வெற்றி‬ என்பது இட்லியை போல வேகுவது தெரியாது...
    வெந்தபின் தான் தெரியும்...
    # வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
    நட்பு என்ற சட்னி வேண்டும்..

Aucun commentaire:

Enregistrer un commentaire