முகப்பு

vendredi 29 novembre 2013

ஆயுதம் இல்லை.


Photo : பொறுமையில் உயர்ந்த தவமில்லை..
 திருப்தியில் உயர்ந்த இன்பமில்லை.. 
ஆசையிலும் பெரிய தீமையில்லை.. 
கருணையிலும் பெரிய அறம் இல்லை..
 மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.


பொறுமையில் உயர்ந்த தவமில்லை..
திருப்தியில் உயர்ந்த இன்பமில்லை.. 
ஆசையிலும் பெரிய தீமையில்லை.. 
கருணையிலும் பெரிய அறம் இல்லை..
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.

இழப்பதில்லை.


Photo : சந்தர்ப்பம் சூழ்நிலையை காரணம் காட்டி உங்கள் குற்றங்களை நியாயப்படுத்தாதீர்கள். மனச்சாட்சி நீங்கள் செய்த குற்றத்தை தொடர்ந்து கண்டித்துக்கொண்டே இருக்கும். காரணங்களை அடுக்குவதால் குற்றங்கள் வீரியம் இழப்பதில்லை.

சந்தர்ப்பம் சூழ்நிலையை காரணம் காட்டி உங்கள் குற்றங்களை நியாயப்படுத்தாதீர்கள். மனச்சாட்சி நீங்கள் செய்த குற்றத்தை தொடர்ந்து கண்டித்துக்கொண்டே இருக்கும். காரணங்களை அடுக்குவதால் குற்றங்கள் வீரியம் இழப்பதில்லை.

உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

Photo : உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

உயிர் விளக்குகளை ஏற்றி உலக நாடுகளின் வஞ்சக இருளை அகற்ற நடந்த போர் எதுவென்று கேட்டால் அது வன்னியில் நடந்த போர் என்பதுதான் விடை.. அதை நடாத்தியவர்கள் நமது மாவீரர்களே..
சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது.
இது சாதாரண ஒளியல்ல, ஈழத் தமிழினத்தைச் சூழ்ந்துள்ள கொடிய சிங்கள இனவாத இருளை விலக்கும் ஒளிப்போர்..
அந்த ஒளிப்போர் இந்த ஆண்டு பெற்ற வெற்றி மகத்தானது..
தன்னை இழந்தவன் உண்டு..
தன் உயிரை இழந்தவன் உண்டு..
தன் சமாதியையும் இழந்தவன் இந்த உலகில் உண்டா..?
இருக்கிறான்.. அவன்தான் மாவீரன்..!
ஆம்.. இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..
கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.
மாவீரர் தீபத்தை ஏற்றிவிட்டு தியாகமே வடிவாக நின்ற திருமகன் பிரபாகரனிடம்,” உங்கள் அரசியல் கொள்கைதான் என்ன..? ” வென்று சிலர் வினவினார்கள்..
” என்னுடைய அரசியல் பாதை இந்தத் தீபங்களின் வெளிச்சத்தில் தெரிகிறது, இந்தத் தீபங்களே எனக்கு வழிகாட்டிச் செல்கின்றன..” என்றார்..
அன்று உலகத்தால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை..
அகலித்துக்கொண்டே அசுர வேகத்தில் ஓடும் இந்த ஒளி ஒரு கட்டத்தில் வளைகிறது, அது ஒரு நாள் புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வருகிறது அதுதான் இந்த ஆண்டு மாவீரர்நாளில் நடந்திருக்கிறது, ஒளி புறப்பட்ட இடத்திற்கே வந்திருக்கிறது.
ஓயாத அலைகள் மூன்றில் சிங்கள இராணுவம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் போல பலாலி முகாமிற்குள் முடக்கப்பட்டது.
அவர்களை நயவஞ்சகமாக அழித்திருக்கலாம்… ஆனால் அது போர் விதியல்ல.. அவர்களை மன்னித்து விட்டார்கள்.. போர் நெறி காத்தார்கள்.. ஆனாலும் ஈழத்தின் இதயத்தை இந்த உலகத்தால் பார்க்க முடியவில்லை.
அந்த மகத்தான முடிவை உலகம் மதித்ததா..? இல்லை..
பதிலுக்கு உலகத்தின் வல்லரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து புலிகளை வேரோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றன.
அப்போதுதான் சிங்களத்தின் இதயம் மட்டுமல்ல உலகத்தின் இதயமே இருட்காட்டில் கிடப்பதை பிரபாகரன் கண்டு கொண்டார்.
மாவீரர்நாள் உரையில்.. ” சின்னஞ்சிறிய ஓர் இனத்தை அழிக்க இத்தனை உலக வல்லரசுகள் ஒன்று திரண்டு நிற்கிறீர்களே.. இது நீதியா..?” என்று கேட்டார்.
உலகத்தால் புரிய முடியவில்லை..
சரணடையுங்கள் என்றார்கள்..
சரணடைபவனை தன்னைவிட உயர்வாக மதிக்க வேண்டுமென்ற கொள்கை சிங்களக் கலாச்சாரத்திலேயே கிடையாதே..?
இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..
கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.
உள்ளத்தில் இருக்கிறான் உயர்ந்த மாவீரன் என்பதை அவனெங்கே அறியப்போகிறான்.. பேதை..

காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!



உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

உயிர் விளக்குகளை ஏற்றி உலக நாடுகளின் வஞ்சக இருளை அகற்ற நடந்த போர் எதுவென்று கேட்டால் அது வன்னியில் நடந்த போர் என்பதுதான் விடை.. அதை நடாத்தியவர்கள் நமது மாவீரர்களே..
சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது.
இது சாதாரண ஒளியல்ல, ஈழத் தமிழினத்தைச் சூழ்ந்துள்ள கொடிய சிங்கள இனவாத இருளை விலக்கும் ஒளிப்போர்..
அந்த ஒளிப்போர் இந்த ஆண்டு பெற்ற வெற்றி மகத்தானது..
தன்னை இழந்தவன் உண்டு..
தன் உயிரை இழந்தவன் உண்டு..
தன் சமாதியையும் இழந்தவன் இந்த உலகில் உண்டா..?
இருக்கிறான்.. அவன்தான் மாவீரன்..!
ஆம்.. இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..
கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.
மாவீரர் தீபத்தை ஏற்றிவிட்டு தியாகமே வடிவாக நின்ற திருமகன் பிரபாகரனிடம்,” உங்கள் அரசியல் கொள்கைதான் என்ன..? ” வென்று சிலர் வினவினார்கள்..
” என்னுடைய அரசியல் பாதை இந்தத் தீபங்களின் வெளிச்சத்தில் தெரிகிறது, இந்தத் தீபங்களே எனக்கு வழிகாட்டிச் செல்கின்றன..” என்றார்..
அன்று உலகத்தால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை..
அகலித்துக்கொண்டே அசுர வேகத்தில் ஓடும் இந்த ஒளி ஒரு கட்டத்தில் வளைகிறது, அது ஒரு நாள் புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வருகிறது அதுதான் இந்த ஆண்டு மாவீரர்நாளில் நடந்திருக்கிறது, ஒளி புறப்பட்ட இடத்திற்கே வந்திருக்கிறது.
ஓயாத அலைகள் மூன்றில் சிங்கள இராணுவம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் போல பலாலி முகாமிற்குள் முடக்கப்பட்டது.
அவர்களை நயவஞ்சகமாக அழித்திருக்கலாம்… ஆனால் அது போர் விதியல்ல.. அவர்களை மன்னித்து விட்டார்கள்.. போர் நெறி காத்தார்கள்.. ஆனாலும் ஈழத்தின் இதயத்தை இந்த உலகத்தால் பார்க்க முடியவில்லை.
அந்த மகத்தான முடிவை உலகம் மதித்ததா..? இல்லை..
பதிலுக்கு உலகத்தின் வல்லரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து புலிகளை வேரோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றன.
அப்போதுதான் சிங்களத்தின் இதயம் மட்டுமல்ல உலகத்தின் இதயமே இருட்காட்டில் கிடப்பதை பிரபாகரன் கண்டு கொண்டார்.
மாவீரர்நாள் உரையில்.. ” சின்னஞ்சிறிய ஓர் இனத்தை அழிக்க இத்தனை உலக வல்லரசுகள் ஒன்று திரண்டு நிற்கிறீர்களே.. இது நீதியா..?” என்று கேட்டார்.
உலகத்தால் புரிய முடியவில்லை..
சரணடையுங்கள் என்றார்கள்..
சரணடைபவனை தன்னைவிட உயர்வாக மதிக்க வேண்டுமென்ற கொள்கை சிங்களக் கலாச்சாரத்திலேயே கிடையாதே..?
இது கல்லறைகளும் இல்லாத மாவீரர்களுக்கு உள்ளத்தில் விளக்கு வைக்கும் உன்னதக்காலம்..
கல்லறைகளை இடித்து மாவீரனைத் தேடுகிறான் பகைவன்.
உள்ளத்தில் இருக்கிறான் உயர்ந்த மாவீரன் என்பதை அவனெங்கே அறியப்போகிறான்.. பேதை..

காவிய நாயகர்களுக்கு கல்லறை எதற்கு..? உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!

நம்பிக்கை.


Photo : மிகவும் மரியாதைக்குரியவர் அன்னை.. 
மிகவும் துயரமானது மரணம்..
 மிகவும் அழகானது அன்புணர்வு..
 மிகவும் கொடுமையானது பழிவாங்குதல்..
 மிகவும் கவலை தருவது செய்த நன்றியை மறப்பது…
 மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு..
 மிகவும் ரம்மியமானது நம்பிக்கை..


மிகவும் மரியாதைக்குரியவர் அன்னை.. 
மிகவும் துயரமானது மரணம்..
மிகவும் அழகானது அன்புணர்வு..
மிகவும் கொடுமையானது பழிவாங்குதல்..
மிகவும் கவலை தருவது செய்த நன்றியை மறப்பது…
மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு..
மிகவும் ரம்மியமானது நம்பிக்கை..

காதலுக்கும் காதலிக்கும் மரியாதை


Photo : தோல்விக்கு அடிப்படையான ஆறு விடயங்கள் : 
01. அளவுக்கு மிஞ்சிய தூக்கம்
 02. போதை மயக்கம்
 03. தேவையில்லாத பயம்
 04. ஆத்திரம்
 05 சோம்பல் 
06. தாமதமாக செய்தல்.


போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ?

ஹாலோ என்பது ஒரு பெண்ணின் பெயர்.மார்கரெட் ஹலோ தான் அந்த பெண் .

டெலிபோனை கண்டுபிடித்தாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் மார்கரெட் ஹலோ.

அவர் போனை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹலோன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.

போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரை நியாபகம் வைத்து கொள்ளம்படி செய்துவிட்டார்.

அந்த காலத்துலையே தன் காதலுக்கும் காதலிக்கும் மரியாதை செய்து இருக்கிறார்! ! ! !

மருந்து!!!!!


Photo : இரவின் அணைப்பில் ..
இனிமையான நினைவுகளுடன் ..
நித்திரைக்கு செல்லும் என் அன்பு உள்ளங்களுக்கு ..
இரவு வணக்கம் ..!



பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா அவன் "அகதி" .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம­்
மருந்து!!!!!

அன்பின் தினமே..!...

Photo : அன்பின் வேதம் கொண்டு..
அழகாய் காதல் கொண்டு..
வேசமில்லா நேசம் கொண்டு..
வாழ்வின் இறுதிவரை இந்தஅன்பை 
தினமும் பரிமாறிக் கொண்டால்.
நமக்கு..தினமும் அன்பின் தினமே..!...

அன்பின் வேதம் கொண்டு..
அழகாய் காதல் கொண்டு..
வேசமில்லா நேசம் கொண்டு..
வாழ்வின் இறுதிவரை இந்தஅன்பை 
தினமும் பரிமாறிக் கொண்டால்.
நமக்கு..தினமும் அன்பின் தினமே..!...

dimanche 10 novembre 2013

நேசியுங்கள்.

 
Photo : யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட,
 யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்.
 
யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட,
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்.

இதயம் கல்லுக்கு ஒப்பானது

 
 
Photo : ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால் அந்தச் சமுதாயத்தின் குடிமக்கள் அக்கறையற்றவர்களாக இருப்பதுதான்.
  சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.
 
 
ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால் அந்தச் சமுதாயத்தின் குடிமக்கள் அக்கறையற்றவர்களாக இருப்பதுதான்.
சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.

இதயம் இருக்குமிடம்

 
Photo : அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.
 ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்
 
அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.
ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்

எதுவும் வேண்டாம்

 
Photo : அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....
 பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....
 எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"
 
அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....
பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"

தமிழாய் இரு

Photo : வாழும் வரை தமிழனாய் இரு
 வாழ்தபின் தமிழாய் இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

இதயம் கல்லுக்கு ஒப்பானது

 
Photo : சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.
 
சமுதாயத்தின் துன்பங்களையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ளாத இதயம் கல்லுக்கு ஒப்பானது.

நமது கடமை

 
Photo : பிறருடைய துன்பத்தைப் பார்க்கும்போது மனம் இளகாமல் இருந்துகொண்டு அதை பற்றற்ற நிலை என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயலாகும். குரல் கொடுக்க முடியாதவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை.
 
பிறருடைய துன்பத்தைப் பார்க்கும்போது மனம் இளகாமல் இருந்துகொண்டு அதை பற்றற்ற நிலை என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயலாகும். குரல் கொடுக்க முடியாதவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை.

"மரணம்"

 
 
Photo : மனிதர்களுக்கு வழங்கப்படும்
 கட்டாய
 விடுதலைப் பத்திரம்
 "மரணம்"
 
மனிதர்களுக்கு வழங்கப்படும்
கட்டாய
விடுதலைப் பத்திரம்
"மரணம்"

பொய்களே

Photo : வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் வாய் திறந்து சொன்ன பொய்களைவிட வாய்திறக்காமல் மௌனமாக அங்கீகரிக்கப்பட்ட பொய்களே அதிகம். பேசும் பொய்யரைவிட உலகம் மௌனப் பொய்யர்களால்தான் நிறைந்து கிடக்கிறது.
 
 
வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் வாய் திறந்து சொன்ன பொய்களைவிட வாய்திறக்காமல் மௌனமாக அங்கீகரிக்கப்பட்ட பொய்களே அதிகம். பேசும் பொய்யரைவிட உலகம் மௌனப் பொய்யர்களால்தான் நிறைந்து கிடக்கிறது.
 

சமுதாயம் துடிப்புடன் விளங்குகிறது



சிறு நீரோடைகளை ஒன்று சேர்த்துத்தான் மகாநதிகள் உருவாகின்றன, அதுபோல சுய பரித்தியாகம் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடும்போதுதான் சமுதாயம் துடிப்புடன் விளங்குகிறது.

dimanche 22 septembre 2013

வெளிப்படும்

 
Photo : நல்ல தலைவர்கள் தலைமையேற்று நடக்கிறார்கள் ஆனால் தீய தலைவர்களோ தவறாக வழி காட்டுகிறார்கள்.
 தலைமை என்பது நெருக்கடி நேரங்களின்போதோ அல்லது போர்க்களத்தில் மட்டுமோ வெளிப்படும் ஒன்றல்ல. அது நம் அன்றாடச் செயல்களில்தான் வெளிப்படும்.
 
நல்ல தலைவர்கள் தலைமையேற்று நடக்கிறார்கள் ஆனால் தீய தலைவர்களோ தவறாக வழி காட்டுகிறார்கள்.
தலைமை என்பது நெருக்கடி நேரங்களின்போதோ அல்லது போர்க்களத்தில் மட்டுமோ வெளிப்படும் ஒன்றல்ல. அது நம் அன்றாடச் செயல்களில்தான் வெளிப்படும்


ஆயுள் நீண்டதல்ல

 
Photo : எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதிக புத்திசாலிகள் பிறருடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் நாம் நம்முடைய தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்ளுமளவுக்கு நம்முடைய ஆயுள் நீண்டதல்ல.
 
எப்போதும் உண்மை பேசுகிறவர்கள் முதற்தடவை பொய் பேசும்போது பிடிபடுகிறார்கள், எப்போதும் பொய் பேசுகிறவர் முதற்தடவையாக உண்மை பேசும்போது பிடிபடுகிறார்.
யாரும் உங்களை பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் நியாயமானதையே செய்யுங்கள். சொந்த நெறிகளில் உயர்ந்த தரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதிக புத்திசாலிகள் பிறருடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் நாம் நம்முடைய தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்ளுமளவுக்கு நம்முடைய ஆயுள் நீண்டதல்ல.


இருப்பது மேலானது

 
Photo : ரோஜா பூ 
காதலிக்க தெரியாத 
பெண்ணின் கூந்தலில் 
இருப்பதை விட, 
காதலிக்க தெரிந்த 
ஆணின் கல்லறையில் 
இருப்பது மேலானது…
 
 
ரோஜா பூ
காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட,
காதலிக்க தெரிந்த
ஆணின் கல்லறையில்
இருப்பது மேலானது…


அம்மா அம்மா தான் !"

 
Photo : "உள்ள சொந்தம் எல்லாமே 
சும்மா சும்மா தான்! 
"உண்மையான சொந்தம் -உன் 
அம்மா அம்மா தான் !"
 
"உள்ள சொந்தம் எல்லாமே
சும்மா சும்மா தான்!
"உண்மையான சொந்தம் -உன்
அம்மா அம்மா தான் !"


தலைக்கனம்

 
Photo : ஒரு மனிதனின் உண்மையான சொத்து அவன் இந்த உலகிற்கு செய்த நன்மைதான்.
 
தகுதி இல்லாதவர்களைப் புகழ்ந்தால் அவர்களுக்கு தலைக்கனம் ஏறிவிடுகிறது, அவர்களை பகட்டுக்காரர் ஆக்கிவிடுகிறது. இப்படியான பகட்டு முட்டாள்தனம் என்ற காற்று நுழைவதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகிறது

சேரும்

 
நம்மில் எவரும் குறைகள் இல்லாதவர்கள் இல்லை. குறை நிறைகளை பரஸ்பரம் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். நேசிக்கப்படும் ஒருவர் திசைமாறிப் போனால் அவரை திருத்த முயலவேண்டும், இல்லையேல் அந்த உறவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தைகளை நல்ல பண்புடன் வளர்த்தால் அந்தப் பழக்கம் உங்கள் பேரக்குழந்தைகளிடமும் போய்ச் சேரும்


lundi 2 septembre 2013

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.





நாம் நமது நோக்கங்களை வைத்துத்தான் நம்மை மதிப்பிடுகிறோம் ஆனால் உலகமோ நமது செயற்பாடுகளை வைத்தே நம்மை மதிப்பிடுகிறது. – சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.

காட்டும்.



சரியென்று உறுதி செய்யாமல் எந்தப் படிவத்திலும் கையெழுத்து வைக்கக்கூடாது. ஆனால் சரியென்று தெரிந்தும் அதை செய்யாமல் இருப்பது உறுதியின்மையைத்தான் காட்டும்.

பெயரெடுக்கக் கூடாது.



இன்று ஒன்றைப் பேசுவோர் நாளை இன்னொன்றைப் பேசுவார்கள் இதை ஊசலாட்ட நடத்தை என்பார்கள். இத்தகைய தெளிவில்லாதவர்களால் மாண்புகளை பேணி வாழ முடியாது. ஊஞ்சல் இந்தப்பக்கமும் போகும் அந்தப்பக்கமும் போகும் அதற்கு எங்குபோவதெனத் தெரியாது. உலகில் 90 வீதமானவர்கள் ஊசலாட்டக்காரரே, அவர்களில் நாமும் ஒருவர் என்ற பெயரெடுக்கக் கூடாது.

நன்மை – தீமை




நன்மை – தீமை இரண்டும் நம் வாழ்வில் மோதிக்கொண்டே இருக்கின்றன. அதில் எதை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முடிவு நமது கையிலேயே இருக்கிறது. தீமையை வெற்றிபெறச் செய்வது இலகு, அதனால்தான் உலகம் தீயவர்களால் நிறைந்து கிடக்கிறது. ஆகவே நன்மையை வெற்றிபெறச் செய்யவே போராட வேண்டும்.

தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.



நீங்கள் நீங்களாகவே இருங்கள் நடிக்காதீர்கள், போலியாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். இதற்கு உங்கள் மறுபக்கத்தையும் காட்ட வேண்டும் என்பது பொருள் அல்ல. உங்கள் குறைகளைப் பற்றி பெருமைப்படாதீர்கள், முன்னேற முயற்சி செய்யுங்கள், ஆனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.




வதந்திகள் பரப்புவோர், வம்பளக்கும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உரையாடும்போது உங்கள் பேச்சில் பொறாமையோ, இகழ்ச்சியோ தொனிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டிப்பேச்சு வீண் விதண்டாவாதங்களில் இருந்து விலகியிருங்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டத்தை பேசி சிரிக்காதீர்கள், அதில் மகிழ்ச்சியடையாதீர்கள், எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை கேலி பேசாதீர்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள் செயற்பட்டுக்கொண்டே இருங்கள். அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சமுதாயத்தை உருவாக்குங்கள். ஒரு பொழுதுபோக்கு அல்லது சேவையை தேர்வு செய்யுங்கள் அது நின்மதி தரும்.
வாரத்திற்கு ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். அது உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.

உயிர் வாழவேண்டும்



பூசுகின்ற மஞ்சளாய் 
நான்வர வேண்டும் 
உன்முகம் தொட்ட சுகத்தில் 
நான் கவியெழுத வேண்டும் 
உன்னிரு கைகளுக்குள் 
உயிர் வாழவேண்டும்

நாட்கள்



  நாட்கள் இருந்தபொழுது
நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை இருந்தபொழுது
நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை

vendredi 2 août 2013

நமது பொறுப்பாகும்.



வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.

நண்பராக நீங்கள் முதலில் இருந்து காட்டுங்கள்.




நம்புங்கள், ஒருவர் உங்களை நம்பலாம் அல்லது உங்களிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதீர்கள்.
எப்படிப்பட்ட நண்பர் உங்களுக்கு அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படிப்பட்ட நண்பராக நீங்கள் முதலில் இருந்து காட்டுங்கள்.

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.




இதயத்தில் உள்ளவைதான் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்ற பழைய கோட்பாட்டை இன்றைய மனோதத்துவம் உறுதி செய்துள்ளது.
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

lundi 29 juillet 2013

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.



இதயத்தில் உள்ளவைதான் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்ற பழைய கோட்பாட்டை இன்றைய மனோதத்துவம் உறுதி செய்துள்ளது.
அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

mercredi 24 juillet 2013

பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.



ரொட்டித் துண்டுதானே என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள், ஒரு ரொட்டித் துண்டு உருவானதற்கு பின்னே எவ்வளவோ உழைப்பும் வியர்வையும் இருக்கிறது. ஆகவே உணவை விழுங்காதீர்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

திருப்தி



தனக்குத்தானே திருப்தியாக இருக்க முடியாத ஒரு மனிதனால் சந்தோஷமாக இருக்க முடியாது, சந்தோஷத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியாது.

mardi 23 juillet 2013

கல்லறை



பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, வேலை செய்யாமல் காலம் தள்ள எண்ணினால் வாழ்க்கை வீணாகிப் போகும், சீக்கிரமே கல்லறைப் பயணமும் ஆரம்பித்துவிடும்.

மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.




அறையில் அழுகிய பொருள் இருந்தால் அதன் நாற்றம் உடனே அறையெங்கும் பரவுவதைப்போல பொறாமை, வெறுப்பு, தீமை ஆகியன இதயத்தில் இருந்தால் அவை உடனே வார்தையாக வெளி வந்துவிடுகின்றன.
உங்கள் வாய் நாக்கு, உதடு என்பன ஒரு வாய்க்கால் போல அமைக்கப்பட்டுள்ளன அவற்றால் நல்ல வார்த்தைகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம்.
கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே அதைக் கையைவிட்டுவிட்டு மகிழ்ச்சியான விடயங்களையே பேசுங்கள்.

கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.



கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை.


பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.
ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.
கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கிய

vendredi 19 juillet 2013

குறைகளை




உங்கள் குறைகளை நீங்கள் உணரத் தொடங்கிவிட்டால் மற்றவர் குறைகள் உங்கள் கண்களில் படாது.
ஒருவரிடம் எந்தக் குறையைக் காண்கிறீர்களோ, அந்தக் குறை உங்களிடம் இல்லையா என்று சோதித்துப் பாருங்கள். அப்போது உங்களிடம் உள்ள குறைகள் என்னவென்பது உங்களுக்கு தானாகவே விளங்கிவிடும்.