முகப்பு

lundi 14 novembre 2011

இனிமையானவை


கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்கள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.

வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.

vendredi 11 novembre 2011

துடிப்பது .......


விழியோரம் நீர் துளிகளுடன்

உன் வருகைக்காய் ஏங்கும்

என் இதயம்.......
 
துடிப்பது .......
 
உனக்காய் காத்திருக்கிறேன்




உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ


உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ


குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.


உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.



அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் மறைந்து விடும்


அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் மறைந்து விடும்: சுவாரஸ்ய தகவல்


ஒரு ஆண் அப்பா ஆகும் போது கெட்ட பழக்கங்கள் இல்லாமல் போவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முதன் முறையாக அப்பா ஆகும் ஆண்கள் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதாக Oregon மாநிலப் பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு கடந்த 19 வருடங்களாக இடம்பெற்றுள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட தீய பழக்கம் உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் நடத்தைகள் காலப்போக்கில் குறிப்பாக திருமணம் ஆன பின்னரும் எவ்வாறு மாறுகின்றது என்பதை தீவிரமாக கண்காணித்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.


திருமணமாகி அப்பா ஆன பின்னர் நல்ல பழக்க வழக்கங்கள் உடன் சமூகத்தில் இணைந்து பயணிக்கிற தன்மையை காண முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் Journal of Marriage என்ற இதழில் வெளியாகியுள்ளது.



பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்


பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்


மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.

1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.


3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.


6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.


7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.


8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.

9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.


10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.




mardi 8 novembre 2011

அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்


மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்

samedi 29 octobre 2011

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்



நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை கடந்த ஐந்து வருடங்களில் 50 சதவீதம் அதிகரித்து வருவதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரம்பரையினால் நீரிழிவு நோய் ஏற்படுவது ஒரு வகை என்றாலும், அதிகளவு இனிப்புப் பதார்தம், மாவுப்பொருள் போன்றவை அதிக அளவு உண்பதனால் உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியகாரணம் என்று தற்போதைய மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுப் பொருட்களளை அதிகளவு உண்பதனாலும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும். நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களுக்கு வெளியே தெரியக்கூடிய அறிகுறிகளாவன அதிக நீர்தாகம் ஏற்படல், உடல் பலவீனம் அடைதல், களைப்படைதல் போன்றவையாகும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பிரித்தானிய தேசீய வைத்தியத் துறை 9 பில்லியன் பவுண்ஸ் நிதியை செலவு செய்கின்றது. 3 மில்லியன் இளைஞர்களும், சிறுவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்ற 12 மாதங்களுக்குள் 11,7000 அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நீரிழிவு நோயிற்காக அரசாங்கம் தனது நிதிச்செவில் பத்தில் ஒரு பகுதியை செலவிடுகின்றது.



செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கினர்.

இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.

இவை இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய ஆபரேசன், இருதய மாற்று ஆபரேசன் மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.



உயிர் வாழவேண்டும்



பூசுகின்ற மஞ்சளாய்

நான்வர வேண்டும்

உன்முகம் தொட்ட சுகத்தில்

நான் கவியெழுத வேண்டும்

உன்னிரு கைகளுக்குள்

உயிர் வாழவேண்டும்

dimanche 23 octobre 2011

"AMMA" Enralaikka.


Amma

Nee parkkum pothu solla ninaikirean...!

Nee pesum pothu solla ninaikiren...!

Nee ennai mutham idum pothu solla ninaikiren...!

anal ennal solla mudiyavillai.

kaduvule..!

Enakku seekiram pesum sakthiyai kodu avalai

"AMMA" Enralaikka.

The feelings of the three month old baby....

..

jeudi 13 octobre 2011

இன்பம்


காதல் இன்பம் கடுகளவு தான் அதனால் ஏற்படும் போராட்டமோ வாழ் நாள் முழுவதுமே..(சவுந்தா)

பலம்


ஒரு கணவனின் பலம் அவன் கையிலிருக்கும் பணத்தில் இருக்கிறது.ஒரு மனைவியின் பலம் அவள் கண்ணீரில் இருக்கிறது..சவுந்தா

vendredi 7 octobre 2011

நண்பர்


ஆண்டுகள் பல ஆனாலும் சிறந்த நண்பர்களை பெற முடியாது:

ஆனால் ஒரு நொடியில் அவர்களை இழந்து விட முடியும்....சவுந்தா

lundi 3 octobre 2011

மனத்தில்


ஒரு பெண்ணின் ஒரு பெண்ணின் மனத்தில் பணத்தால் நுழைவதைவிட அன்பால் இடம்


பெறுவது நிரந்தரமாகும் - சவுந்தா

vendredi 23 septembre 2011

உன்னதமானவை.


எல்லா உறவுகளிலும் வீட்டிலும் குடும்பத்திலும் உள்ள உறவுதான் அதிக முக்கியமானவை. காதலும், கல்யாணமும், பெற்றோராக இருக்கும் குடும்ப உறவுகளில் உள்ள சந்தோஷங்கள்தான் வாழ்வின் சிறந்தவற்றுக்கெல்லாம் அடிப்படையானவை, உன்னதமானவை.




ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


அ. அடுத்தவனிடம் எவ்வளவு செல்வங்கள் அதிகாரங்கள் இருந்தாலும் அதில் எனக்கு ஆர்வமில்லை.

ஆ. என் குடும்பத்திற்கும் எனக்கும் தேவையான பாதுகாப்பும், கௌரவமும் சம்பாதித்தால் போதுமானது.

இ. காற்றைத் துரத்தி கஷ்டப்பட்டு என் அமைதியை குலைக்கமாட்டேன்.

ஈ. மற்றவரிடம் என்ன இருக்கிறது என்று ஒப்பிடும் மாயச் சூழலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வேன்.



பூ பூக்க


சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.



mercredi 21 septembre 2011

இதயம் இருக்குமிடம்


அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.

 ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்

நன்றி


நல்ல குடும்பங்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு நன்றி கூறுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளின் பாசம் இவைகள்தான் துன்பத்தில் இருந்து முக்கிய பாதுகாப்பாக அமையும்.
 குடும்பத்தை ஆக்குவதும் அழிப்பதும் பெண்தான் அவள் அதன் விதியை தன் முந்தானை முடிச்சில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.



மனித குலம்


மனித குலம் சிறப்பாக வாழவேண்டும் என்றால் குடும்பங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சமுதாயத்தை சிறப்பாக்க வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் நாகரிகத்தின் அடிப்படையே குடும்பம்தான்