முகப்பு

samedi 29 octobre 2011

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்

நீரிழிவு நோய்கான அறிகுறிகள்



நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை கடந்த ஐந்து வருடங்களில் 50 சதவீதம் அதிகரித்து வருவதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரம்பரையினால் நீரிழிவு நோய் ஏற்படுவது ஒரு வகை என்றாலும், அதிகளவு இனிப்புப் பதார்தம், மாவுப்பொருள் போன்றவை அதிக அளவு உண்பதனால் உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியகாரணம் என்று தற்போதைய மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுப் பொருட்களளை அதிகளவு உண்பதனாலும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும். நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களுக்கு வெளியே தெரியக்கூடிய அறிகுறிகளாவன அதிக நீர்தாகம் ஏற்படல், உடல் பலவீனம் அடைதல், களைப்படைதல் போன்றவையாகும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பிரித்தானிய தேசீய வைத்தியத் துறை 9 பில்லியன் பவுண்ஸ் நிதியை செலவு செய்கின்றது. 3 மில்லியன் இளைஞர்களும், சிறுவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்ற 12 மாதங்களுக்குள் 11,7000 அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நீரிழிவு நோயிற்காக அரசாங்கம் தனது நிதிச்செவில் பத்தில் ஒரு பகுதியை செலவிடுகின்றது.



செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கினர்.

இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.

இவை இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய ஆபரேசன், இருதய மாற்று ஆபரேசன் மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.



உயிர் வாழவேண்டும்



பூசுகின்ற மஞ்சளாய்

நான்வர வேண்டும்

உன்முகம் தொட்ட சுகத்தில்

நான் கவியெழுத வேண்டும்

உன்னிரு கைகளுக்குள்

உயிர் வாழவேண்டும்

dimanche 23 octobre 2011

"AMMA" Enralaikka.


Amma

Nee parkkum pothu solla ninaikirean...!

Nee pesum pothu solla ninaikiren...!

Nee ennai mutham idum pothu solla ninaikiren...!

anal ennal solla mudiyavillai.

kaduvule..!

Enakku seekiram pesum sakthiyai kodu avalai

"AMMA" Enralaikka.

The feelings of the three month old baby....

..

jeudi 13 octobre 2011

இன்பம்


காதல் இன்பம் கடுகளவு தான் அதனால் ஏற்படும் போராட்டமோ வாழ் நாள் முழுவதுமே..(சவுந்தா)

பலம்


ஒரு கணவனின் பலம் அவன் கையிலிருக்கும் பணத்தில் இருக்கிறது.ஒரு மனைவியின் பலம் அவள் கண்ணீரில் இருக்கிறது..சவுந்தா

vendredi 7 octobre 2011

நண்பர்


ஆண்டுகள் பல ஆனாலும் சிறந்த நண்பர்களை பெற முடியாது:

ஆனால் ஒரு நொடியில் அவர்களை இழந்து விட முடியும்....சவுந்தா

lundi 3 octobre 2011

மனத்தில்


ஒரு பெண்ணின் ஒரு பெண்ணின் மனத்தில் பணத்தால் நுழைவதைவிட அன்பால் இடம்


பெறுவது நிரந்தரமாகும் - சவுந்தா

vendredi 23 septembre 2011

உன்னதமானவை.


எல்லா உறவுகளிலும் வீட்டிலும் குடும்பத்திலும் உள்ள உறவுதான் அதிக முக்கியமானவை. காதலும், கல்யாணமும், பெற்றோராக இருக்கும் குடும்ப உறவுகளில் உள்ள சந்தோஷங்கள்தான் வாழ்வின் சிறந்தவற்றுக்கெல்லாம் அடிப்படையானவை, உன்னதமானவை.




ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :


அ. அடுத்தவனிடம் எவ்வளவு செல்வங்கள் அதிகாரங்கள் இருந்தாலும் அதில் எனக்கு ஆர்வமில்லை.

ஆ. என் குடும்பத்திற்கும் எனக்கும் தேவையான பாதுகாப்பும், கௌரவமும் சம்பாதித்தால் போதுமானது.

இ. காற்றைத் துரத்தி கஷ்டப்பட்டு என் அமைதியை குலைக்கமாட்டேன்.

ஈ. மற்றவரிடம் என்ன இருக்கிறது என்று ஒப்பிடும் மாயச் சூழலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வேன்.



பூ பூக்க


சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.



mercredi 21 septembre 2011

இதயம் இருக்குமிடம்


அன்பாய் புன்னகைக்கும் தந்தையின் அருகே அமர்வது எவ்வளவு இனிமை, அன்பாக அம்மா ஆறுதல் சொல்வது எவ்வளவு இனிமை, சன்னலால் நிலவைப் பார்க்கும் சுகம் இனிமை. இத்தனையையும் தரும் என் வீடுபோல இனிமை உலகில் எதுவும் இல்லை.

 ராஜாவானாலும், கிராமத்தவனானாலும் வீட்டில் நின்மதி காண்பவன்தான் சந்தோஷமானவன். ஏனென்றால் வீடுதான் வாழ்வின் இதயம் இருக்குமிடம்

நன்றி


நல்ல குடும்பங்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு நன்றி கூறுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளின் பாசம் இவைகள்தான் துன்பத்தில் இருந்து முக்கிய பாதுகாப்பாக அமையும்.
 குடும்பத்தை ஆக்குவதும் அழிப்பதும் பெண்தான் அவள் அதன் விதியை தன் முந்தானை முடிச்சில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.



மனித குலம்


மனித குலம் சிறப்பாக வாழவேண்டும் என்றால் குடும்பங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சமுதாயத்தை சிறப்பாக்க வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் நாகரிகத்தின் அடிப்படையே குடும்பம்தான்

samedi 17 septembre 2011

குறுக்கிடாதவரை.......


இரண்டு நண்பர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அழகான ஒரு பெண் அவர்கள் வாழ்வில் குறுக்கிடாதவரை.......


நண்பர்


ஆண்டுகள் பல ஆனாலும் சிறந்த நண்பர்களை பெற முடியாது; ஆனால் ஒரு நெடியில் அவர்களை இழந்து விடமுடியும்

mardi 13 septembre 2011

திருமண வாழ்வில்


சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.


திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.

இருவரும் பரஸ்பர முயற்சி செய்யாவிட்டால் ஒரு நாள் நம்பிக்கையோடு ஆரம்பித்த திருமணம் திடீரென உதிர்ந்து போய்விடும்.

உலகின் உயர்ந்த சந்தோஷம் திருமணத்தில்தான் இருக்கிறது. வேறு எதில் தோற்றாலும் சந்தோஷமான திருமண வாழ்வில் இருப்பவன் ஒரு வெற்றிகரமான மனிதனே.



lundi 12 septembre 2011

சூரியன்


நேற்றின்மேலே ஒளி அடிப்பதற்காகவும் நாளையின் மேலே ஒளி வீசுவதற்காகவும் இன்று சூரியன் உதிப்பதில்லை. நேற்றையையும், நாளையையும் இன்றோடு சேர்த்து ஒளிபடுத்த சூரியனாலும் முடியாது. அது ஒவ்வொரு நாளையும் தனித்தனியாகவே கணித்து செயல்படுகிறது, தனது கடமைகளை எளிதாக செய்கிறது, அதனால் நெடுங்காலம் வாழ்கிறது

அழகான வாழ்வை


மக்கள் இயற்கையை நேசிப்பதில்லை..! வீடுகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார இலாபத்தைத் தேடி அலைந்து இயற்கையோடு இணைந்த அழகான வாழ்வை தொலைத்துவிடுகிறார்கள்

samedi 27 août 2011

நீ பூக்கும் நேரத்தை


பூ பூக்கும் நேரம்

தாமரைப் பூ சூரிய உதயத்தில் பூக்கும்

செண்பக பூ காலை 6 - 7 இல் பூக்கும்

வாழைப் பூ மாலை 5 - 6 இல் பூக்கும்

மல்லிகை பூ இரவு 7 - 8 இல் பூக்கும்

பெண்ணே நீ பூக்கும் நேரத்தை

யாரால் கணிக்க முடியும்