முகப்பு

jeudi 6 avril 2017

uravu


kai


ematam


thavaru


valkai


nahu


poothu


kopam


nesam


mercredi 8 mars 2017

anpu


அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள்!!.........


  1. அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள்!!.........
    1908ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தை கண்டு அமெரிக்க ஜனாதிபதி பியோடர் ரூஸ்ரெல்ட்டே அஞ்சினார். 1910ம், ஆண்டு ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது. இத...்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர். பிரான்ஸில் பிரஷ்யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.
    1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்ட காரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான். சமீபகாலமாக ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சார்பில், மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். சுமார் 226 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.-sountha




anpu


kan


nilavu


uravu


nelal


vesam


alavu


jeudi 2 février 2017

manithan





suvai





natpu




poo



பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?



பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.
ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.
ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்.
மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும்.
இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு.
அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும்.
அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு.
இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம்.
இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

mardi 24 janvier 2017

வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான்!



வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான்!
20வயசுக்கு அப்புறம், வெளிநாடும், தன்நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)
30வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)
...
40வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)
50வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் வந்துரும்)
60வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)
70வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( முட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்சம் இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)
80வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)
90வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)
100வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)
என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப்படுறத விட்றுவோம்!

jeudi 19 janvier 2017

கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்



கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்.


வாய்மூடி மெளனியாக இருக்கும் அரசியல்வாதிகள்

மக்களின் வாழ்வை சரிப்படுத்தவே சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை


இன்று தமிழகம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு.

ரோம் நகர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்து கொண்டிருந்த மன்னன் போல, தமிழகமே போர்க்களமாகியுள்ள இந்த நேரத்தில் முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவில்லை
கடந்த இரண்டு ஆண்டுகளை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்துவது ஒருசில தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினமே களத்தில் இறங்கியுள்ளது. ஐடி ஊழியர்கள் முதல் நர்சுகள் வரை, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் தமிழ் உணர்வுடன் களத்தில் இறங்கியுள்ளனர். ஒருவகையில் தமிழர்கள் அனைவரையும் ஒற்றுமையாக்கிய நமது எதிரிகளுக்கு நாம் நம்முடைய நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும்

பீட்டா அமைப்பு கொடுத்த ஒருசில வீடியொ ஆதாரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆயிரக்க்கணக்கான வருடங்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் உணர்வுகள் ஏதேனும் அந்த நீதிபதிகளுக்கு தெரியுமா? இவற்றையெல்லாம் தெரிந்த ஒரு நீதிபதி தடை போட முன்வருவாரா? என்ற கேள்வியே பலருக்கு எழுகின்றன
சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து தீர்ப்பு அளித்த நீதிமன்றம், விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தடை கேட்ட வழக்கில் வழிபாட்டு வழிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம், தற்போது கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தடை போட்டது ஏன் என்பதுதான் ஆறு கோடி தமிழர்களின் கேள்வியாக உள்ளது.

திவாகரன் கட்சிக்கு என்ன செய்தார்? என்று ஒரு அமைச்சர் கேள்வி கேட்டவுடன் 32 அமைச்சர்களும் மாறி மாறி அவருக்கு பதில் கூறி கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த அமைச்சர் பதவியில் ஓட்டு போட்டு உட்கார வைத்த தமிழக மக்கள் போராட்டம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அனைத்து அமைச்சர்களும் மெளனம் காப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறும் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தண்ணீர் தரமுடியாது என்று கூறிய கர்நாடக அரசை ஏன் கலைக்கவில்லை? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசை ஏன் கலைக்க சொல்லவில்லை சுப்பிரமணியன்சுவாமி?

மக்களின் வாழ்வை சரிப்படுத்தவே சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை. மாடுகள் கொடுமைப்படுத்துவதற்காக தடை போட்ட நீதிமன்றம், இன்று மனிதர்கள் மேல் தடியடி நடத்தி கொடுமைப்படுத்தும் காவல்துறையிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை. தடியடி நடத்தும் அளவுக்கு போராட்டக்காரர்கள் என்ன தீவிரவாதிகளா? போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் கிட்டத்தட்ட இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலை போல நேற்று அலங்காநல்லூரில் நடந்துள்ளது. இதற்கு யார் காரணம்?
ஒவ்வொரு வருடமும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து வெளிநாட்டினர் வருவது வாடிக்கை. பொங்கல் சமயத்தின்போது கொடுக்கப்பட்ட விசாக்களை கணக்கிட்டால் உண்மை தெரியவரும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுலாத்துறைக்கு இந்த தடையால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, இதை மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ கவனித்ததா?
கனடா நாட்டின் பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கனடாவில் தாராளமாக ஜல்லிக்கட்டை நடத்துங்கள் என்று கூறுகிறார். ஆனால் இந்திய பிரதமர் மட்டும் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன்?

72 நாட்கள் அப்பல்லோ முன்னாள் விடிய விடிய நின்று செய்தி சேகரித்த தொலைக்காட்சி ஊடகங்கள், தமிழர்களின் உணர்வு பூர்வமான ஒரு போராட்டத்தை இருட்டடிப்பு செய்வது ஏன்? யாருக்கு பயந்து இந்த நடவடிக்கை. தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று ஒரு நடிகரின் பேட்டியை ஒளிபரப்புகிறது என்றால் இந்த போராட்டத்தை அந்த தொலைக்காட்சி என்ன நினைக்கிறது? வெறும் ஆயிரம் உறுப்பினர்கள் நடத்தும் நடிகர் சங்க தேர்தலை காலை முதல் இரவு முடிவு தெரியும் வரை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிகள் இன்று பதுங்குவதற்கு காரணம் பணமா? அல்லது பயமா?

எந்த ஊடகமும் எங்களுக்கு தேவையில்லை, எந்த அரசியல்வாதியும் எங்களுக்கு தேவையில்லை, ஜாதி, மத, இன வேறுபாடின்றி நடைபெற்று வரும் அமைதியான இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த வெற்றியை பகிர்ந்து கொள்ள தயவு செய்து எந்த கட்சியும் வரவேண்டாம். இந்த போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு முழு பொறுப்பு தமிழக இளைஞர் பட்டாளம்தான் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு தடைக்காக மட்டும் அல்ல. பீட்டாவை ஓட ஓட இந்தியாவை விட்டு விரட்டுவதற்கும்தான். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றவுடன் தமிழர்களின் அடுத்த குறி பீட்டாதான். பீட்டாவே இந்தியாவை விட்டு வெளியேற தயாராக இரு…

இணைந்திருக்கிறோம்



தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் (-sountha -France )

ஏறுதழுவுதல்



சங்க காலம் தொட்டே தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்தமைக்கான ஆதாரங்கள் ..
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டுதல்
மாடு தழுவல் , போன்ற பெயர்களால் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளமை ஆதாரப்படுத்த பட்டுள்ளது . சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது.
குலதெய்வம்: பெருமாள் ( மாயோன்)
...
சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல்
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
வரலாறு–
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 3000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது.
சல்லிக்கட்டு பெயர்க்காரணம்–
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது
தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல்
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
கொண்டாட்டங்கள் தமிழர்களின் பரம்பரை அடையாளங்கள்.
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்

vendredi 23 décembre 2016

ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்



ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்
(அகவைகள் பதின்மூன்றில் ஒரு ஏதிலியின் அவலக்குரல்)
எம்மிடையே இரு உலக மகா யுத்தங்கள் வந்து போனாலும், இன்னமும் பல்வேறு யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் எம்மிடையே தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்பட்டாலும், ஆழிப்பேரலையின் கொடூரச் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.
பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் கடற்கரையோரங்களைத் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூரமாகப் பலியெடுத்த “சுனாமி” எனப்படும் பயங்கர அரக்கனான ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
பயங்கரக் கொடூரம் நிறைந்த சுனாமியால், கணவனை, மணைவியை இழந்தோர், பெற்றோரைப், பிள்ளை களைப் பறிகொடுத்தோரெனப் பல இலட்சக் கணக்கானோரின் பதறியழும் சோகக்கதைகள் சொல்லிலோ அல்லது எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப்புக்களோடு, பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் மிகப்பெரிய அழிவோடு, பொருட்சேதமும் ஏற்பட்டது.
கடல் நீர் கழுத்தளவு வருவதனைக் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது மட்டுமல்ல, மரணித்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கொடூரச் சோகம் நிறைந்த அழியாத உண்மையாகிவிட்டது.
தென் ஆசியப் பிராந்தியத்தில் இப்பேரலையால், ஒருசில மணித்துளிகளில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் அநியாயமாகக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறி உள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்ததில் தவறேதுமில்லை.
குடியிருந்த வீட்டோடும், கூண்டோடும் மட்டுமல்ல, ஊரோடு சேர்ந்து இலட்சக் கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பார்க்குமிடமெல்லாம் பல்வேறு திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?
கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது என்பது உண்மை.

lundi 19 décembre 2016

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?



  1. நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
    ***********
    நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
    ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
    மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்....
    மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
    அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
    பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
    அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
    இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
    மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
    நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
    இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
    நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......



  1. எரிவதில் தீபம் அழகானது.....
    சுடுவதில் *சூரியன்*அழகானது.....
    சுற்றுவதில் புவி அழகானது.....
    வளர்வதில் பிறை அழகானது......
    மின்னுவதில் விண்மீன் அழகானது........
    தவழ்வதில் குழந்தை அழகானது......
    குதிப்பதில் கடல் நீர் அழகானது.....
    விழுவதில் அருவி அழகானது.........
    உறைவதில் பனி அழகானது......
    விளைவதில் பயிர்கள் அழகானது.....
    தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது.....
    குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது......
    உழைப்பதில் வியர்வை அழகானது......
    பாடுவதில் குயில் அழகானது......
    பறப்பதில் புறா அழகானது.......
    கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......
    உறவினில் நட்பு அழகானது.....
    மொழிகளில் மழலை மொழி அழகானது...
    மலர்களில் ரோஜா அழகானது......
    மலர் வாசனையில் மல்லிகை அழகானது....
    நிறங்களில் கறுப்பே
    அழகானது.....
    கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது
    இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
    எப்போதும் தாய்மை அழகானது.......
    இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது....
    இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
    *குறை ஒன்றும்*இல்லையே......
    அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......

கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்…… (ஓரு மனிதக் கண்ணோட்டம்)



கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்……
(ஓரு மனிதக் கண்ணோட்டம்)

அன்று 2016 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசு வின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கி றோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.

தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதி யில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்த தால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி. நாமும் அத்திருத்தலத்திற்கு யாத்திரையும் சென்றிருக்கலாம். ஆயினும், ஆண்டவர் இயேசு எமது உள்ளமெனும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்திட நாம் இடம் ஒதுக்காவிட்டால், எமது யாத்திரை மட்டுமல்ல, நாங்களும் பெறுமதியற்ற ஈனப்பிறவிகளே என்பதனை உனருகிறோமா?

இஸ்ராயேல் மக்கள் பல்லாயிரம் வருடங்களான தமது அடிமைத்தனத்திலிருந்து மீட்க மெசியா பிறப்பாரென எதிர்பார்த்ததாகத் திருவிவிலியம் பல இடங்களில் தெரிவிக்கின்றது. இன்றும் அதே மனிதன் தனது இனத்தின் விடியலைத்தேடி சொந்த நாட்டிலேயே அகதியானது மட்டுமல்ல, புலம் பெயர்ந்தும் அகதியாக அலைவது வரலாறாகப் பதிவாகவில்லையா?

மார்கழி நள்ளிரவில் பிறந்த குழந்தை தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட இடையரும், ஞானிகளும் தெண்டனிட்டு வணங்கினர். கடைசி இரா உணவில், “இது எனது உடல் வாங்கி உண்ணுங்கள்“ என்று தரப்படும் தீவனத் தொட்டி யின் ஆன்மீக உணவில் தகுதியோடு பங்கெடுக்கி றோமா? அந்தத் திரு உடலை ஈரைந்து மாதம் சுமந்த “அருள் நிறைந்த பேழை“க்கு மதிப்பளிக்கிறோமா?, அல்லது, நற்கருனைப் பேழையில் வீற்றிருப்பவரை பக்தியோடு பணிந்து, வணங்குகிறோமா?

அன்றைய மனிதன் பயங்கர விலங்குகளிலிருந்து பாதுகாக்க ஆயுதங்களை உருவாக்கினான். இன்றைய மனிதன் கொடிய மிருகங்களை செல்லப் பிராணி களாக்கி, தனது சொந்தச் சகோதரங்களையே கொண்றொழிக்கப் பல்வேறு ஆயுதங்களை உருவாக்கிப், பாவம் வந்து வீட்டு வாசலில் பாய்விரித்துப் படுத்திருக்க இடமளிக்கவில்லையா?

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:14) என்று வானதூதர்கள் பாடியது, உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் என்பதாகும். அமைதியை உருவாக்குவதே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பதை நாம் உணர்ந்திருந்தால், குழு சேர்த்து, சதி செய்துக் குழிபறிக்கும் முயற்சிகள், சாதிய முரண்பாடுகள் எம்மிடையே எதற்காக?

மார்கழிக் கடுங்குளிரில், பிரசவ வலியில் மரி அன்னை துடி துடித்தும், சத்திரத்திலும் இடம் கொடாது கதவை மூடிய மனிதர்களாக நாம் இன்றும் வாழவில்லையா? கொட்டும் மழையிலும், கொதிக்கும் வெய்யிலிலும், பனியின் குளிரிலும், பசியின் கொடுமையிலும் அபயம் தேடும் ஏழைகளின் உருவில் வரும் மரி அன்னை களுக்காக இதயக் கதவைத் திறப்போர் எத்தனை பேர்?

புனித நள்ளிரவில் மந்தைகளைப் பாதுகாக்க ஏழை இடையர் விழித்திருக்க, வரலாற்றை முன்னும் பின்னு மாகப் பிரித்த இறைமகன் இயேசு எமது வழிகாட்டும் விடிவெள்ளியாகப் பிறந்தார். ஆயினும், சொந்த உறவு களையே பிரித்தாளும் மனிதனின் கொடூர உள்ளத்தில் இரக்கம், கருணை,பரிவு, பாசம் என்ற “மனித நேய விடிவெள்ளி“ பிறந்துள்ளதா?

குழந்தை இயேசு, “உலகமெங்கும் சென்று என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்” என்று கூறவில்லை. மாறாக, தெருவோரப் பிச்சைக்காரரிலும், தனிமையில் வாடும் முதியவரிலும், கவனிப்பாரற்ற நோயாளியிலும், துன்பங்களோடும், வேதனைகளோடும் சிறைகளில் சித்திர வதைப்படுவோர் மத்தியிலும் இன்றும் பிறப்ப தாகப் போதித்ததனை நாமுணருகிறோமா?

குழந்தை இயேசு பிறந்ததும் கொல்லத் தேடிய ஏரோது, இரு வயதிற்குட்பட்ட அப்பாவிக் குழந்தைகளைக் கொலை செய்தான். வேண்டாக் கர்ப்பத்தால் உருவாகும் பச்சிளம் சிசுக்களைக் கருவறையிலேயே கல்லறைக்கு அனுப்பும் ஏரோதுக்கள் எம்மிடையே இல்லை யென்போமா?

தனக்கு நிகரான அரசன் பிறந்ததாக ஏரோது கேள்விப்பட, முழு எருசலேமுமே அவனோடு கலங்கியது. இன்றும் பல நாடுகளில் அதிகாரம் செலுத்தும் ஆளும் இனம், தமது சிறுபாண்மை இனத்தவரைப் படுகொலை செய்வதைக் கேள்விப்பட்டு ஐக்கிய நாடுகளே கலங்கவில்லையா?

குழந்தை இயேசுவைத் தரிசிக்க ஞானிகள் வழிதேடி ஏரோதுவிடம் சென்றபோது, உதவி செய்வதாக ஏமாற்றி னான். இன்றும் எம்மிடையே நல்ல செயல்களைத் தடுக்க வெனப் பல ஏரோதுக்கள் இணைந்து, நல்ல முயற்சி களைத் திசை திருப்பிக் குழப்புவதில்லையா?

பாலகன் இயேசுவின் பிறப்பு மிக எளிமையானதாகும். இன்றைய உலக மயக் களியாட்டங்கள், ஒருபால் திரு மணம், விவாகரத்து, திருமணம் செய்யாது கூடிவாழுதல் என்று கிறிஸ்து பிறப்பின் விழுமியங்களை இழந்த எம்மி டையே கிறிஸ்து ” அர்த்தமுள்ளதாகப் பிறப்பது“ எப்போது?

ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு விடுதலையும், சமாதானமும் மட்டுமல்ல, பாவத்தின் அடிமையில் வாழ்வோர் விடுதலை பெறவும், ஏழைகள், புறந்தள்ள ப்பட்டு ஒதுக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற்று அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதாகும். நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் “நான், என்னுடையது“ என்பது தவிர இவ்வாறான விழுமியங்கள் வாழப்படுகின்றதா?

ஆண்டுகள் பல கடந்தும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இன்று உலகம் முழுவதும் அர்த்தமின்றிக் குடியும் கும்மாளமும், விநோதமுமாகி, கிறிஸ்மஸ் தாத்தாவே பணம் வசூலிப்பவராக மாற்ற மடைந்து, கிறிஸ்து பிறப்பின் அர்த்தமே குழிதோண்டிப் புதைக்கப்படும் நிலையில், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் எமது உள்ளங்கள் மாற்றமடைந்துள்ளதா?

வானளாவக் கிறிஸ்மஸ் மரங்கள் உயர்ந்தாலும், எமது உள்ளங்கள் மனித மான்பை உயர்த்தும் எண்ணக் கருத்துக்களால் உயர்ந்துள்ளதா? ஏழைகள் ஏழைகளாகத் தொடர்ந்து வாழ, செல்வந்தர் செல்வம் பெருக்கும் நோக்கத்தில் முன்னேற, ஒரு நேர உணவுக்காக ஏங்கு வோர் எம்மிடையே இல்லை என்போமா? அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு விழாவைக் காண, எமது வெளிவேடக் கிறிஸ்தவ வாழ்விலிருந்து புதுப்பிறப்பெடுப்போம்.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்“ – (மத்தேயு 25:41)

dimanche 4 décembre 2016

தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்குது.......!!!



ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு பிடி சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்
வந்தாலும்

கருவறையை விடப் பாதுகாப்பான
அறையை

குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப்
போகிறது

பத்து மாதம் சுமந்தாலும்
கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் -

ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம்

எல்லாவற்றையும் விட
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்குது.......!!!

dimanche 13 novembre 2016

நகல்

கனவு காண் அது நற்கனவாயின் நிகழ்த்தி முடி....

sountha

முடியும் என்பவனால் எல்லாமே முடியும்

  1. முடியும் என்பவனால் எல்லாமே முடியும்..முடியாது என்பவனால்..இறுதியில் அவனின் வாழ்க்கையே வீணாகி முடிந்துவிடும்...முயற்சி இல்லாதவர்கள்..முதுகெலும்பில்லாதவனுக்கு சம்மானவன்...நீங்கள்?
    உன்னால் எது முடியாது?
    எதுவரை முடியாது?
    எதற்காக முடியாது?
    எதனால் முடியாது?...
    இத்தனை கேள்விகளுக்கும் விடை தேட நீஎப்போது முடிவு செய்கின்றாயோ,;;;;;;;அந்த நொடிப்பொழுதிலிருந்து அத்தனையும் உன்னால் முடியும்.....

இறைவன்




  1. நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்
    நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....
    "காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....
    ...
    காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!
    இது என்ன நியாயம்.....??? " என்றேன்.
    கலகலவென சிரித்தான் இறைவன்
    "தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;
    தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;
    ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;
    எனக்கான இடத்தை,
    எனக்கான நேரத்தை,
    எனக்கான விழாக்களை,
    என்னை வணங்கும் முறையை
    எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!
    இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.