முகப்பு

dimanche 19 février 2012

வைக்குது....!

ஒரு பெண்ணின் அழகு
பல ஆண்களை திரும்பி பார்க்க
வைக்குது...!
  ஓர் ஆணின் அறிவு பல
பெண்களை திரும்பி பார்க்க
வைக்குது....! 

மறக்காமல் இருக்கவேண்டுகிறேன்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
 நடந்த நினைவுகள் இல்லாமல் போகலாம்
நடந்ததை மட்டும் நினைத்திருந்தால்
 மனம் நிறைவில்லாமல் போகலாம்..
நடந்த வந்த தூரம் மறந்து போகலாம்
கடந்த வந்த துயரத்தை
 மறக்காமல் இருக்கவேண்டுகிறேன்

samedi 18 février 2012

அன்னையாய்.


மீண்டும் ஒருமுறை நான் பிறந்தால்....?
எனக்குள்...நீ...எனக்குள்
எல்லாமுமாய் எப்போதும்.
என்றாலும்
என் ஆசை
நான் உனக்கு அன்னையாய்.


கல்லறை

வெளியே வந்த பிறகு ,
உள்ளே செல்ல முடியாதது , "கருவறை " ...
உள்ளே சென்ற பிறகு ,
வெளியே வர "முடியாதது , "கல்லறை.........
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

சொந்தம்

 தாகம் கொண்ட
பெண்ணுக்கு
தண்ணீர் மட்டும்
சொந்தம் .
மோகம் கொண்ட
பெண்ணுக்கு ,
காமம் மட்டும்
சொந்தம் .


யாவும் பேரழகு..!

திருமணம் அழகு -
மனமிரண்டும்
ஒன்றாயின்
இல்லறம் அழகு
துன்பம்நீக்கும்
துறவறம் அழகு
மானம்காக்கும்
மறம் அழகு
மகுடம்கொண்ட
சிரம் அழகு
வாரிவழங்கும்
கரம் அழகு
மனம் அழகு -
எனின்,
யாவும் பேரழகு..! 

அப்பா

   

அன்று உன் மூலம் எனக்கு உயிர் கொடுத்த இறைவன்

இன்று என் உயர்வை காண உன்னை உயிரோடு விட்டு வைக்கவில்லையே !!!
   

vendredi 17 février 2012

இத‌ய‌ம்

நான்
இருக்கும் வ‌ரை
என் இத‌ய‌ம்
துடித்துக்கொண்டிருக்கும்!
நான் இற‌க்கும்வ‌ரை
அவ‌ள் நினைவுக‌ளும்
துடித்துக்கொண்டிருக்கும்!



jeudi 16 février 2012

தலைவணங்குகிறேன்


அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி
போய்விட்டதென்ற
இந்த உண்மையை
உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன்
அம்மா...!


mercredi 15 février 2012

வார்த்தைகளால் சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்

அன்பான வார்த்தைகள்
தன்னம்பிக்கையை கொடுக்கும்,
அறுதலான வார்த்தைகளால்
தற்கொலையையும் தவிர்க்கலாம்.
 இனிமையான வார்த்தைகள்
நற்சூழலை வளர்க்கும்,
எழுச்சியான வார்த்தைகள்
வெற்றியைத் தரும்.
ஊக்கமான வார்த்தைகள்
சோகத்தை விரட்டும்.
கனிவான வார்த்தைகள்
உயிரையே காப்பாற்றும்.
காலமறிந்து சொன்ன வார்த்தைகள்
கஷ்டத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள்
மனச்சோர்வை விரட்டும்.
தன்மையான வார்த்தைகள்
மனச்சலிப்பை நீக்கும்.
 நகைச்சுவையான வார்த்தைகள்
இறுக்கத்தை; தளர்த்தும்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால்
தொடங்க முடியும். அதுபோல வார்த்தைகளால்
சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்.

வார்த்தைகள்

 
இனிமையான வார்த்தைகள்
நற்சூழலை வளர்க்கும்,
எழுச்சியான வார்த்தைகள்
வெற்றியைத் தரும்.
ஊக்கமான வார்த்தைகள்
சோகத்தை விரட்டும்.
கனிவான வார்த்தைகள்
உயிரையே காப்பாற்றும்.

lundi 13 février 2012

என் காதலர் தின வாழ்த்துக்கள் ....

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது,
சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்...
கலங்கமில்லா காதலர்களுக்கு என் காதலர் தின
வாழ்த்துக்கள் ....

நீதானம்மா

என் வலிக்கு
என் சோகத்திற்கு
என் சோர்வுக்கு
நீதானம்மா
மருந்தாய் இருந்தாய்!!!


dimanche 12 février 2012

என் அம்மா

என்னையும் ரசிக்க வைத்த முதல் கண்கள்
என்னையும் நேசிக்க வைத்த முதல் இதயம்
என்னையும் கவிதை எழுத வைத்த முதல் பெண் நீ தான்
என் அம்மா.



வெற்றி

வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.
 வெற்றி என்பது கொடுப்பது பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.
 வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.
வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.
பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.


samedi 11 février 2012

கல்வியின் அடிப்படை

குரங்கு தன் குட்டியை மடியில் காவிச் செல்லும். மடியை விட்டு இறங்கிய குட்டி தாயின் செயல்களை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய் பாயும் போது சரியாகப் பாய்ந்து அதன் வயிற்றைப் பற்ற வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் குரங்கு குட்டியை மறுபடியும் வயிற்றில் ஏற அனுமதிக்காது. கவனத்தை குலையாமல் வைத்திருப்பதுதான் கல்வியின் அடிப்படை என்பது குரங்குகள் சொல்லும் உண்மையாகும்.

vendredi 10 février 2012

வரம் கொடு

விரிந்த மலரிடம்
  விசாரித்தேன்
 ... வாழ்க்கை என்றால் என்ன ?
  ஒரு நாளில் எல்லோர்க்கும்
  ஒளி வீசும் புன்னகை காட்டி
  தும்பிக்கு தேன் கொடுத்து
  துடியிடையாளின் கூந்தலிலோ
  தூங்கா இறை சிலையிலோ
  தூரிகையாய் தூங்கி முடித்துக் கொள்வது வாழ்க்கை என்றது
  வாயடைத்து நின்றேன்
  வாய் பேசாத பூ வாழ்க்கை கண்டேன்
  எத்தனை இனிமை இதனிடம் ?
  மனிதனை மட்டுமல்ல
  கடவுளையும் மணக்க வைக்கும்
  மலரே உன் வாழ்க்கை எனக்கு வேண்டும் -
வரம் கொடு என்றேன்
 
(படித்ததில் பிடித்தது........)
 
 


காணப்போகிறோம்.

.
 1890 ம் ஆண்டு விஞ்ஞானிகள் பௌதிகத்தில் இனி புதிதாக வர எதுவும் இல்லை என்றார்கள். ஆனால் 1895 ல் எக்ஸ்ரே கண்டு பிடிக்கப்பட்டது. 1897 ல் எலக்ரான் கண்டு பிடிக்கப்பட்டது. அதுபோல 1940 ல் விஞ்ஞானிகள் புதியது எதுவும் வர இனி இடமில்லை என்றனர் ஆனால் அவர்கள் கூறியபோதே அணுப்பிளவு கண்டறியப்பட்டு அணு யுகம் தோன்றிவிட்டது.

இன்றிலிருந்து பத்து அல்லது இருபது வருடங்களின் பின் இன்று நாம் காணாத அதிசயங்களை எல்லாம் காணப்போகிறோம்.

அணு

அணு குண்டை ஒரு காலத்தில் எல்லோரும் அழிவு சக்தியாகவே பார்த்தார்கள். அது ஜப்பானில் விழுந்தபோது நாகரிகம் அழிந்துவிட்டதா என்று சந்தேகப்பட்டார்கள். ஆனால் அணுவை போர்க்கருவியாக பார்க்காமல் ஆக்க சக்தியாக பார்த்திருந்தால், பயன்படுத்தியிருந்தால் இரண்டாம் உலகப்போரே தேவையில்லாமல் போயிருக்கும். ஏழைகள் இல்லாத உலகத்தை என்றோ அணுசக்தியால் படைத்திருக்கலாம்.

நினைவு கொள்ளுங்கள்..!

 
நினைவு கொள்ளுங்கள்..! வாழ்வில் எல்லாமே சுமுகமாக இருந்துவிடாது. சில சமயம் நாம் உயரமாக உயர்வோம், பிறகு எல்லாமே தலைகீழாகி, கீழ்நோக்கி செல்வோம். நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் நாகரிகத்தின் இயல்பே எப்போதும் மேல்நோக்கி இருப்பதுதான். நூற்றாண்டுகளின் சிகரங்கள், பள்ளத்தாக்கின் வழியே வரையப்பட்ட கோடுகள் எப்போதும் மேல் நோக்கியே செல்கின்றது. 

இளைஞராக இருக்கிறீர்கள்

உங்கள் நம்பிக்கையைப் போலவே
இளையவராக இருக்கிறீர்கள்,
சந்தேகத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
தன்னம்பிக்கையைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்,
பயத்தைப் போலவே
முதியவராக இருக்கிறீர்கள்,
விசுவாசத்தைப் போலவே
இளைஞராக இருக்கிறீர்கள்

உங்களுக்கு வயதாவதில்லை

வயது என்பது மனதின் தன்மை
உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்
நம்பிக்கை இழந்து விட்டால்
எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்
உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால்
நீங்கள் வயதானவர்தான்.
ஆனால் வாழ்வில் இருந்து சிநந்ததை நீங்கள் எடுத்து
விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால்
அன்பாக இருந்தால்
எவ்வளவு வருடங்கள் கடந்தாலும்
எத்தனை பிறந்த நாள் போனாலும்
உங்களுக்கு வயதாவதில்லை.

jeudi 9 février 2012

காலம் குறுகியது

வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.

வாழ்க்கை குறுகியது


மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.

சந்தோசம்

 
பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்துள்ளார்.
சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

நோயும் ஊனமும் உடலுக்குத்தான் தடை மனதிற்கு அல்ல

தோற்கடிக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு அழிவில் சிக்கிக் கிடந்தாலும் கவலைப்படாதே..! காரணம் நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாய்..! தன்னம்பிக்கையுடன் நின்றால் மீண்டும் வென்றுவிடலாம். உலகில் உள்ள மிக வலிமை உள்ள ஆயுதம் தன்னம்பிக்கைதான் அது உன்னிடம் இருக்கிறது கவலைப்படாதே.
நோயும் ஊனமும் உடலுக்குத்தான் தடை மனதிற்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்.

mercredi 8 février 2012

நேரம்

நமக்கு இனிமேலும் நேரம் இருக்காது, இருக்கும் நேரம் எப்போதுமே நம்மிடம் இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது.
 நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
 சூரிய உதயத்திற்கும் அத்தமனத்துக்கும் நடுவே இரண்டு தங்க மயமான மணி நேரங்கள். ஒவ்வொன்றிலும் அறுபது வைர நிமிடங்கள் பதிக்கப்பட்டிருந்தன. கண்டு பிடிப்புக்களுக்கு பரிசு எதுவும் கிடையாது. ஏனெனில் அவற்றை மீட்க முடியாது.
 நீங்கள் அறிவாளியாக இருந்தாலும் நாளைய விதி பற்றி சொல்ல முடியாது, ஊகிக்க முடியாது. அதனால் இன்றைய பொழுதை வீணாக்காதீர்கள் ஏனென்றால் அது வரவே வராது.
 நேரத்தின் உண்மையான மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு கணத்தையும் பறித்து, பற்றி, அனுபவியுங்கள். சோர்வு, சோம்பேறித்தனம், தள்ளிப்போடுதல் கூடவே கூடாது. இன்று செய்ய முடிந்ததை நாளை தள்ளிப் போடாதீர்கள்.

ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.


வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. நேரம் ஒருபோதும் நிற்காது, உன் துக்கத்திற்காக அது தாமதிக்காது. உன் துக்கத்தினால் ஓடும் நேரத்தை கோட்டைவிட்டுவிடாதே.

அளக்கப்படுகிறது.


 ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களிலோ செய்த வேலையிலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.


மனித மனம் ஒரு தோட்டம் போன்றது. அதை புத்திசாலித்தனமாக உழுது பயிரிட வேண்டும். பலர் புறம்போக்காக விடுகிறார்கள், உங்கள் மனத்தோட்டம் எப்படி உள்ளதோ அதற்கான அறுவடையும் அப்படியே இருக்கும்.
ஒரு மனிதன் தன் எண்ணங்களை தூய்மையாக்க பாடுபட வேண்டும். தூய்மையான எண்ணங்களோடு தன் சுயத்தில் லயித்திருந்தால் அழிவில்லாத ஆனந்தத்தை அவன் அடைவான். தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து வாழும் வாழ்வே ஆனந்தமானது.
 தன்னை கையாள்வதில் உண்மை இல்லாத எவனாலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க இயலாது.

அது நீதானே அம்மா!

"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!

யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!

mardi 7 février 2012

இனிமை வேண்டும்

 

தனிமை வேண்டும் - அதில்
இனிமை வேண்டும்

ஆற்றல் வேண்டும் - யாருமதை
போற்றல் வேண்டும்

நேர்மை வேண்டும் - எப்போதும்
உண்மை பேசவேண்டும்

கனிவு வேண்டும் - என்றும்
பரிவு யாரிடத்திலும் வேண்டும்

ஏற்றமிகு எண்ணம் வேண்டும் - அதை
எப்போதும் காத்தல் வேண்டும்

பெருங்கனவொன்று வேண்டும் - அதுவும்

பொய்க்காது நடவவேண்டும்

மனையாளொருத்தி வேண்டும் - என்றும்
அவளிடமே காமம்வேண்டும்

நண்பனொருவன் வேண்டும் - அவன்மேல்
நம்பிக்கை எப்போதும் வேண்டும்

பகைவன் வேண்டும் - அவன்
தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும்

இறைவனை புரிய வேண்டும் - அவன்
ஒருவனே என்றுலகறிய வேண்டும்

நல்லோரை எல்லோரும் காணவேண்டும் - நாம்
இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும்


எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் - அதில்
நம்செந்தமிழே உயர்ந்ததென போற்றவேண்டும்

மொழிப்பற்று நாட்டுப்பற்று இருக்கவேண்டும் - அனால்
இனவெறியை மதவெறியை அறுக்கவேண்டும்


யாரும் தான்யாரென்றறிய வேண்டும் - யாரும்
மனிதன்தானென்று எல்லோருக்கும் புரியவேண்டும்..!


lundi 6 février 2012

பயணம்

 ஒவ்வொரு வருடமாக என் வாழ்வை வாழ்கிறேன்
எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன்
பரபரப்பின்றி இலட்சியத்தை விட்டு விலகாமல்
மறைந்து போனவற்றுக்காக புலம்பாமல்
கடந்த காலத்தின் பயத்தில் பின்னடையாமல்
எதிர்காலம் அதை மறைக்கலாம் ஆனால் முழுமையான
சந்தோஷமான இதயத்துடன் இறுதியை அடையும்
இளமையிலும் முதுமையிலும் சந்தோஷத்துடன் பயணமாகும்
எனவே வழி மலைமேல் ஏறட்டும், இறங்கட்டும்
கரடுமுரடாக வழுவழுப்பாக இருக்கட்டும்
பயணம் சந்தோஷமாக இருக்கும்
சிறுவனாக நான் தேடியதை இன்றும் தேடுவேன்
புதிய நட்பு, பெரிய சாகசம், மணி மகுடம்
எனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழக்கமாட்டேன்
ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்த வளைவு.


samedi 4 février 2012

ஏங்குகிறது இந்த மனது..!

என் விரல்களைப் பற்றிக் கொண்டு
நடந்து செல்ல..
என் தலை முடியைக்
கோதி விட..
நீ சொல்லும் குட்டிக் குட்டி கதைகளை
... தலையாட்டியவாறு கேட்க..
உன் மடியில்
தலை சாய..
மீண்டும் குழந்தையாய் மாற
ஏங்குகிறது இந்த மனது..!



vendredi 3 février 2012

மனிதனாக வாழ வழிகள்


மனிதனாக வாழ வழிகள்
 
மிகவும் மதிப்புக்குரியவர்கள் ........தாய் ,தந்தை

மிகமிக நல்ல நாள் ........................இன்று

மிகப்பெரிய வெகுமதி ..................மன்னிப்பு

மிகவும் வேண்டியது ....................பணிவு

மிகவும் வேண்டாதது ..................வெறுப்பு

மிக பெரிய தேவை .......................நம்பிக்கை

மிகக்கொடிய நோய் ......................பேராசை

மிகவும் சுலபமானது ...................குற்றம் காணல்

தரமற்ற குணம் ............................பொறாமை

நம்பக்கூடாதது .............................வதந்தி

ஆபத்தை ஏற்படுத்துவது .............அதிக பேச்சு

செய்யக்கூடாதது .........................நம்பிக்கை துரோகம்

செய்யக்கூடியது ..........................உதவி

விளக்க வேண்டியது ..................சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி............................உழைப்பு

நழுவவிடக்கூடாதது .................வாய்ப்பு

பிரியக்கூடாதது ..........................நட்ப

மறக்கக்கூடாத்து .......................நன்றி
  
ஓவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது .....இறை பயம்


jeudi 2 février 2012

அது நீதானே அம்மா!



"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!

யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!

mercredi 1 février 2012

முடியாதது



வெளியே வந்த பிறகு , உள்ளே செல்ல முடியாதது , "கருவறை " ...
உள்ளே சென்ற பிறகு , வெளியே வர "முடியாதது , "கல்லறை


அரோகரா

அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா
வண்ணமயில் ஏறிவரும்
வடிவேலனுக்கு
அரோகரா

 

கண்ணீருக்கு மதிப்பு அதிகம்...!

இணைவதும்
பிரிவதும் இயல்பே...!
இணைந்திருப்பதும் ,
பிரிந்திருப்பதும் நிரந்தமல்ல..!
இணைவதின்
பரிசு-சந்தோஷம்
பிரிவதின்
பரிசு -கண்ணீர்
சந்தோஷத்தை விட
கண்ணீருக்கு மதிப்பு அதிகம்...!

சிந்தித்து பார்ப்பார்களா மனிதர்கள்...?


மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்..
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன ..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை
... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது ...

இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக
மனிதனுக்கு ஆணவம்,கோபம், கௌரவம்,கொலைவெறி ,ஜாதி,மத சண்டைகள் தேவையா..?
சிந்தித்து பார்ப்பார்களா மனிதர்கள்...?


அற்புத கடிகாரம்!


அவசிய வேலைகளால்

அதிகாலை எழுவதற்கு

அலாரம் வைத்த‌

அன்றைய உறக்கத்தில்!

அலட்சியம் செய்த‌

அத்தனை முறையும்!

அக்கறையாய் ஒலித்து

அன்புடன் எழுப்பியது!

அம்மா எனும்,

அற்புத கடிகாரம்!

(~நம்பிக்கைபாண்டியன்)



mardi 31 janvier 2012

இதயம்

இதயத்தை இரும்பாக தான் வைத்து இருந்தேன் …
யாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பால் என்று ...!

lundi 30 janvier 2012

"இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

அலைகின்றார்


கஷ்டப் படாமல் வாழ வேண்டும் எண்பதற்காக
கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார்...

நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக வீடு கட்டி நித்திரையின்றி திரிகின்றார்

... படித்தால் வேலை கிடைக்கும் என்று படித்துவிட்டு வேலையின்றி திரிகின்றார்

அலங்காரமாக வாழ வென்று ஆபரணம் வாங்கி
லொக்கரில் வைத்து விட்டு அலங்காரமின்றி அலைகின்றார்

அவசர தேவைக்கு வாகனம் வாங்கி
அவசியமற்ற தேவைக்கும் பயணிக்கின்றார்

முடியும் முடியும் என்றவர்கள் முடிந்தவர்களையும்
முடியாமல் இருக்க செய்கின்றார்

மறக்காதே..வெறுக்காதே..ஏமாற்றாதே...


* உனக்கு உதவி செய்தவரை மறக்காதே..!! - கீதை

* உன்னை நேசித்தவரை வெறுக்காதே..!! - பைபிள்

* உன்னை நம்பியவரை ஏமாற்றாதே..!! - குரான்

திருப்பி வராது


வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
நீ பிறருக்கு உதவும் வரை......
வாழ்க்கை ஒரு புனித ஸ்தலம்
மற்றவர் உன்னை விரும்பும் வரை.....
வாழ்க்கை ஒரு சுதந்திர பறவை
நீ வாழ விரும்பும் பொழுது.......
வாழ்க்கை ஒரு இனிய பயணம்
நீ வாழ புறப்படும் நேரம்.......
வாழ்ந்து பார் நண்பனே(பியே) வாழ்க்கை
ஒரு வராகடன் - சென்றால்
திருப்பி வராது...........

dimanche 29 janvier 2012



மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்.

 
நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடா முயற்சி, வலிமை எல்லாமே இருக்கும். கடவுள் நம்மோடு இருந்தால் எவரால் நம்மை எதிர்க்க முடியும் ?
நம்பிக்கையே வாழ்வின் பிரச்சனைகள் ஏமாற்றங்களை கடந்து மேலேறும் தைரியத்தைத் தருகிறது. அது தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக நினைக்குமே அல்லாது அதை ஏற்றுக் கொள்ளாது.
தெளிவுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள், மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்.
எல்லையற்ற வானில் நீங்கள் பறந்து செல்ல வழி நடாத்துபவன்தான், தனித்தே செல்லும் உன் நீண்ட பாதைக்கும் வழியைக் காட்டுகிறான் கவலைப்படாமல் நட…

பிறவிஇருந்து என்ன பயன் ?


உலகில் உயிருடன் வலம்வரும் அனைவரும் பூமிக்கு அடியில் உறங்குவோருடன் ஒப்பிட்டால் மிகவும் ஒரு சிலர்தான். இயற்கையின் போதனையை அமைதியாகக் கேட்டால் இந்த உண்மை உங்களுக்கு அழகாக விளங்கும்.
 இயற்கையின் விதிப்படி உங்கள் குறுகிய வாழ்வை கழியுங்கள். பழுத்த ஆலிவ் இலை தன்னை சுமந்து நின்ற கிளையை வாழ்த்தி, அதற்கு உயிர் கொடுத்த மரத்திற்கு நன்றி கூறிவிட்டு உதிர்வதைப்போல பயணத்தின் முடிவுக்கு சாந்தத்துடன் நன்றி கூறுங்கள்.
பயமின்றி இந்தப் பூமியில் வாழுங்கள். மரணத்தை எண்ணி அஞ்ச வேண்டாம். அவன் ஒரு நண்பன்தான் எவனும் குறித்த நேரத்திற்கு முன் இறப்பதில்லை.
 இந்தப்பிறவியில் நம்மை நேசிப்பவரை அறிந்து அன்பு செய்யாவிட்டால் நமக்கு இன்னொரு பிறவி இருந்து என்ன பயன் ?