முகப்பு

mardi 15 mars 2011

பொருள்.



பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.

dimanche 13 mars 2011

அம்மா


உனக்குள் என்னை உருவாக்கி ..எனை உலகத்துக்கு அறிமுக படுத்திய உன்னை ...உதாசீனம் செய்தபோது கூட சுமைகளை சுகமாய் ஏற்று ...உன் இறுதிவரை என்னை உன் மனசெனும் கருவில் மறுபடியும் என்னை சுமந்தவள் நீ ....அம்மா

அம்மா


♥ எனக்கு இதுவரை நீ

தாயாக இருந்து விட்டாய் ...

அம்மா இது போதும்

இந்த ஜென்மத்தில் ..

இரக்கமில்லா முதுமை முழுமையாய்

ஆட்கொண்டு விட்டதே உன்னை...

இன்று என் கண்ணிற்கு நீ குழந்தையாய் தெரிகிறாய் ...

வேறுவழியில்லை பெற்றவளே....

இனி நான் உனக்கு தாயாக போகிறேன்

samedi 12 mars 2011

வாக்கை


உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள்,

வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்

சிந்தனை


தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது

வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

vendredi 11 mars 2011

அன்றே சொன்னார் கவியரசர்.


அன்றே சொன்னார் கவியரசர்.


கருணாநிதி பற்றி கண்ணதாசன் கவிதை

அஞ்சாதா சிங்கமென்றும்

அன்றெடுத்த தங்மென்றும்

பிஞ்சான நெஞ்சினர் முன்

பேதையர்முன் ஏழையர் முன்

நெஞ்சாரப் பொய்யுரைத்து



தன்சாதி

தன்குடும்பம்

தான்வாழ‌ தனியிடத்து

பஞ்சாங்கம் பார்த்திருக்கும்

பண்புடையான் கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌



பகுத்தறிவை ஊர்க்குரைத்து

பணத்தறிவை தனக்குவைத்து

தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்

சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி

நாள்முழுதும் வேடமிட்டு

மடத்தில் உள்ள சாமிபோல்

மாமாய‌ கதையுரைத்து



வகுத்துண‌ரும் வழியறியா

மானிடத்து தலைவரென்று

பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

பேதையனே கவிஞ‌னெனில்

நானோ கனவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.

நட்பின் அருமை


நாட்கள் இருந்தபொழுது
 நட்பின் அருமை புரியவில்லை .....
நட்பின் அருமை புரிகின்ற போது 
நாட்கள் நம் கையெல் இல்லை 

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்


தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -???!!!!!

jeudi 10 mars 2011

கல்வி


குரங்கு தன் குட்டியை மடியில் காவிச் செல்லும். மடியை விட்டு இறங்கிய குட்டி தாயின் செயல்களை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய் பாயும் போது சரியாகப் பாய்ந்து அதன் வயிற்றைப் பற்ற வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் குரங்கு குட்டியை மறுபடியும் வயிற்றில் ஏற அனுமதிக்காது. கவனத்தை குலையாமல் வைத்திருப்பதுதான் கல்வியின் அடிப்படை என்பது குரங்குகள் சொல்லும் உண்மையாகும்.




சிறந்தது


கண்டிப்பிற்குப் பின்னால் இனிமையாக இருக்கும் தந்தை, இனிமைக்குப் பின்னால் கண்டிப்பாக இருக்கும் ஒரு தாய் இவர்களின் சேர்க்கையே சிறந்தது

மன அமைதி


சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.




தன்னம்பிக்கை


தோற்கடிக்கப்பட்டு,

கீழே தள்ளப்பட்டு அழிவில்

சிக்கிக் கிடந்தாலும் கவலைப்படாதே..!

காரணம் நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாய்..!

தன்னம்பிக்கையுடன் நின்றால்

மீண்டும் வென்றுவிடலாம்.

...உலகில் உள்ள மிக வலிமை உள்ள ஆயுதம்

தன்னம்பிக்கை தான்

அது உன்னிடம் இருக்கிறது கவலைப்படாதே.

mercredi 9 mars 2011

காட்சி..........


உலகின் கண்கள்

ஊனமானதால்

ஊர் பிரிந்த உறவுகள்

உடைமைகள் உறவிழந்து

உண்ணத்தானும் ஏதுமின்றி

இவர்கள் நடைபிணமாய்

நடக்கும் அந்தக் காட்சி..........

நெஞ்சை .........

எழுதமுடியவில்லையே............

காதல் வித்தை


உன்னைக் காணும் முன்

என் இதழ்கள கூட

பேசியதில்லை

உன்னைக் கண்ட பின்

என் இமைகளும் பேசுகிறதே

இது தான் காதல் வித்தையா

lundi 7 mars 2011

வாழ......


கற்றுக் கொடுத்தாய்

மலர்களுக்கு மணம் வீச

பறவைகளுக்கு

சிறகை விரிக்க

மேகங்களுக்கு

வான் மழை பொழிய

மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவில்லையே

மனித நேயத்துடன் வாழ......

dimanche 6 mars 2011

நிலவு



நிலவுக்கு ஒளியை
கொடுத்த கடவுள்
அதை இரவில் 
மிதக்கவிட்டான்...!!


வசந்ததின் 
வாசல்வரை 
வழிகாட்டி சென்றவளே!
வழியில் நான் காத்திருக்க 
வழித்துனையோடு 
சென்றதேனோ.????

தேன்



செந்தமிழ் 
தேன் 
சொட்ட சொட்ட
பேசும் 
உன் நாவில்... 
என் பெயர் 
சொல்லி... 
பேசக்கூடாதா......? 

நீ பூவாகப் பூப்பாய்


உன்னை உணவூட்டி வளர்த்த பூமி உன் வளர்ச்சியை நிறுத்தி மறுபடியும் பூமிக்குள்ளேயே அனுப்பிவிடும். ஒரு நாள் ஒரு மரம் நாற்புறமும் வேர்களை பரப்பி உன் உடலைத் துளைக்கும். அப்போது அந்த மரத்தில் நீ பூவாகப் பூப்பாய்.

jeudi 3 mars 2011

தோழியே



தென்றல் தழுவும் 
மலராய் உன்னை 
இன்பங்கள் தழுவட்டும்...

தோழியே 
என் ஓவ்வோர்
அசைவிலும் 
உன் விம்பம்....

என் ஆயுளின்
கடைசிவரை 
எமக்குள் இருக்கும் 
இந்த உயிர்ப் பந்தம்..

mardi 1 mars 2011

காதல்


கண் அசைவில்

வருவதல்ல காதல்

காலம் முழுவதும்

வருவது தான் காதல்

உறக்கம் இழப்பதல்ல காதல்

உறுதியாய் இருப்பதே காதல்

அழகில் மலர்வதல்ல காதல்

அன்பால் பூப்பதே கா...த...ல்

தமிழெங்கள்



தமிழை அமுதென்று சொன்னார் - நீ

தமிழைப் படித்துப்பார் புரியும்!

தமிழெங்கள் உயிரென்றும் சொன்னார் - தாசன்

கவிதை படித்துப்பார் தெரியும்!

பயன்



விருட்சம் ஒன்று

விறகுக்காக...வெட்டப்பட்டு

அடுப்பில் எரிந்து சாம்பலானது

விதை ஒன்று

சிதையில் விழுந்து

விருட்சமாகாமலேயே

சாம்பலானது

பயனாகி மடிந்தது ஒன்று

பயனின்றி முடிந்தது ஒன்று

இருப்பினும்

சாம்பலின் பயன் ஒன்று தான்

வரை...


நிலவுக்கு காதல் சூரியன் வரும் வரை...

சூரியனுக்கு காதல் இரவு வரும் வரை...

வண்டுக்கு காதல் தேன் எடுக்கும் வரை..

..............."அம்மா"


வெற்றி பெற்றால்

தேடி வந்து வாழ்த்த

ஆயிரம் உறவுகள்.....

தோற்றுப் போனால்

தேடி வந்து அணைக்க

உன்னைத் தவிர யார்

எனக்குவெற்றி பெற்றால்

தேடி வந்து வாழ்த்த

ஆயிரம் உறவுகள்.....

தோற்றுப் போனால்

தேடி வந்து அணைக்க

உன்னைத் தவிர யார்

எனக்கு..............."அம்மா"


dimanche 27 février 2011

நிழல்


நீரில் விழுந்த நிழல்

நனைந்து விடுமா?

நெருப்பில விழுந்த நிழல்

வெந்து விடுமா??

குழியில் விழுந்த நிழல்

புதைந்து விடுமா???

நான் உனக்கொரு நிழலல்லவா...

நீ தான் என்றும்

என் நிஜமல்லவா.......

குற்றம


நிலவு இரவை எதிர்பார்கிறது

சூரியன் பகலை எதிர்பார்கிறது

மேகம் காற்றை எதிர்பார்கிறது

பூமி மழையை எதிர்பார்கிறது

நான் உன்னிடம் காதலை எதிர்பார்ப்பதில்

...மட்டும் என்ன குற்றம.!!!

samedi 26 février 2011

நினைவில் வை


ஆசை அளவாக வை..

அழகை விலையாக வை..

மனதை நிலையாக வை..

பாசத்தை உறுதியாய் வை..

நட்பை உண்மையாக வை..

ஆனால் அதில் என்னை மட்டும்..

உன் உயிராய் வை..

இதை என்றும் நினைவில் வை ...!!!

- புவனேஷ்..

பூக்கும்


காதலுக்கு

கவுரவம் கொடுத்துப் பார்

பூமத்திய ரேகையின் மத்தியிலும்

உன் முகவரி

பூவாய் பூக்கும்

அன்பே


அன்பே

என் கவிதை வரிகள்

வசீகரமானது உணமையானால்

எனது முயற்சி

மகுடம் சூட்டியது உண்மையானால்

என் இதயம் உன்னால்

ஒளிபெற்றது உண்மையானால்

நீ மட்டும் போதும்

என் இதயத்துக்கு

நினைத்ததெல்லாம் சாதிக்க...

vendredi 25 février 2011

என் இதய


என் இனிய கண்ணே

உன் நினைவலைகள்

என் இதய குடத்தில்

நிரம்பி வழிகிறது

அதன் மிச்சம் தான்

குளத்தில் விழுந்ததால்

தாமரையாக மலர்கிறது

காற்றுடன் கலந்ததால

தென்றல் ஆகிறது

காகிதத்தில் விழுந்ததால்

கவிதையாகிறது!!!!!!!!!

மகிழட்டும்......


வருகின்ற காலம்

வசந்த காலம் ஆகட்டும்

வீசுகின்ற காற்றெல்லாம்

தென்றல் காற்றாகட்டும்

வருகின்ற மழையால்

மரங்களெல்லாம் சிரிக்கட்டும்

வருடுகின்ற மகிழ்ச்சியால்

மனமெல்லாம் மகிழட்டும்......

jeudi 24 février 2011

வாழ்க்கை


புன்னகைத்துப் பார்...

பூமி வசப்படும்!

முயற்சித்துப் பார்...

வானம் வசப்படும்!

காதலித்துப் பார்...

கவிதை வசப்படும்!

துணிந்து பார்...

வெற்றி வசப்படும்!

வாழ்ந்து பார்...

வாழ்க்கை வசப்படும்!

அவளுக்காக.....


பிறந்தது முதல்

பெற்றோருக்காக

திருமணம் முதல்

கணவருக்காக

தாய்மை முதல்

...பிள்ளைகளுக்காக

எப்போது அவளுக்காக.....???

வெற்றி


ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது.




முயற்சி


முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.




mercredi 23 février 2011

பொருள்


பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.




நிஜம்


இறந்த காலம் என்பது முடிவடைந்துவிட்டது, எதிர்காலம் என்பது கானல் நீர்போல விரட்ட விரட்ட நகர்ந்து போவது என்றுமே கைகளுக்கு வராதது. நிஜம் என்பது நிகழ்காலம் ஒன்று மட்டும்தான் (ஆகவே எதிர்காலம் ஒப்படைக்கப்பட முடியாதது என்பது பல மகான்களின் நூல்களில் காணப்படும் எளிமையான செய்தியாகும்.)


மகிழ்ச்சி


மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!

எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை

எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!



...“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.

வீடு


திருக்குறளில் அறம் – பொருள் – இன்பம் – வீடு ஆகிய நான்கு விடயங்களையும் பேசவந்த வள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று விடயங்களை மட்டும் பேசுகிறார். அவர் வீடுபேற்றைப்பற்றி ஒரு குறள்கூட எழுதவில்லை..

ஏன் ?

அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நெறிகளையும் நீங்கள் சிறுவயது முதலே சரிவரக் கடைப்பிடித்தால், வீடுபேறு தானாக உங்களுக்கு வரும். அது ஒரு நாளில் வழங்கப்படும் அட்சய பாத்திரமல்ல.. அது ஒரு நெடிய பணி..



தன்னம்பிக்கை


வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே.


lundi 21 février 2011

உண்மை


உள்ளம் முழுதும்

உண்மை வைத்தால்

உன்னை வெல்ல

உலகில் எவருமில்லை

வெள்ளம் போலே

இன்பம் பொங்கும்

வேறு வாழ்வில்

ஏதுமில்லையே

பார்வதி அம்மா


நம் தமிழீழ தாயான

பார்வதி அம்மா

முந்தித்தவமிருந்து

முந்நூறு நாள்

சுமந்து

அந்தி பகலாய்

ஆதரித்த

எங்கள் அம்மா..

போய்வா…!



முன்னையிட்ட தீ

முப்புரத்திலே..

பின்னையிட்ட தீ

தென்னிலங்கையிலே..

அன்னையிட்ட தீ

அடிவயிற்றிலே..

நானுமிட்ட தீ

மூழ்க மூழ்கவே..

எங்கள் அம்மா –

கண்ணீர் அஞ்சலிகள்

dimanche 20 février 2011

கண்ணீர் அஞ்சலிகள்


தாய் மண்ணின் பெருமை ஊட்டிய

நம் தமிழீழ தாயான பார்வதி அம்மையே

உனக்கு கண்ணீர் அஞ்சலிகள்

vendredi 18 février 2011

காலப் புயல்!


உயிரிலே பின்னி

உறவில் கலந்து

பயிர்போல வாழ்ந்தோமே

தயிர்திரிந்து

கெட்டதுபோல் நம்

காதல் கெட்டழிந்து

மண்மீது

சட்டென

மாண்டதே சாய்ந்து!

எரிந்த மெழுகாய்

இதயம் உருகிப்

பிரிவை நினைத்துப் பிதற்ற

கரித்துண்டாய்

ஆனதடி நெஞ்சு;

அதிலே நெருப்பிட்டுப்

போனதடி காலப் புயல்!

இனிய செயலே

உனது இனிய வாழ்க்கை !

பொறுமையே

உனது ஆஸ்த்தி

நேர்மையே

உனது வெற்றி !

கோபம்

உனது எதிரி !

உழைப்பே

உனது உயர்வு !

அமைதியே

உனது ஆறுதல் !



வெற்றி


எப்போதும் முக மலர்ச்சியோடு இரு !

உன்னை வாட்டும் கவலைகளை சிரிப்பால் ஒழி.

எதையும் பரபரப்புடன் செய்யாதே !

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி

இவை மூன்றும் வெற்றியின் முக்கிய படிகளாகும்.



சுமை


புத்தகமும் ஒரு சுமைதான்

படிக்காத போது

குடையும் ஒரு சுமைதான்

மழை இல்லாத போது

பட்டமும் ஒரு சுமைதான்

வேலை இல்லாத போது

அழகும் ஒரு சுமைதான்

இரசிகன் இல்லாத போது

வாழ்வும் ஒரு சுமைதான்

சுவை இல்லாத போது