உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
lundi 17 janvier 2011
dimanche 16 janvier 2011
நம்பிக்கை
நம்பிக்கை இருக்கும் இடத்தில் வீரம், மனோபலம், விடாமுயற்சி, வலிமை எல்லாமே இருக்கிறது. அது தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக நினைக்குமேயல்லாது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
இன்றும் நீ உயிருடன் இருக்கிறாய் என்றால் ஒரு நோக்கத்திற்காகவே இறைவன் வாழ வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்.
கூடவே கூடாது
நேரத்தின் உண்மையான மதிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சோர்வு, சோம்பேறித்தனம், தள்ளிப்போடுதல் கூடவே கூடாது. இன்று செய்ய முடிந்ததை நாளை தள்ளிப் போடாதீர்கள்.
mercredi 12 janvier 2011
தை திருநாள்
மங்களம் மலரும் பொங்கல்
மனம் மகிழும் பொங்கல்
இனிக்கின்ற செங்கரும்பாய்
பிறக்கின்ற தைப்பொங்கல்
தமிழர்கள் போற்றி மகிழும்
கதிரவனின் தைப்பொங்கல்
ஆனந்தம் பொங்கி மகிழும்
ஆதவனக்கோர் இனிய பொங்கல்
தரணியெங்கும் பொங்கிடும்
தமிழர்களின் திருநாளாம்
தை திருநாள்.
பொங்கலில் பொங்குதுவே
தைத்திருநாளாம் தமிழர் பொங்கல் தனில்
தரணி எங்கும் பொங்கிடுவோம் வாரீர்
mardi 11 janvier 2011
நண்பன்
*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
*பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
(thank u aarthy)
vendredi 7 janvier 2011
கண்ணே
என் இனிய கண்ணே
உன் நினைவலைகள்
என் இதய குடத்தில்
நிரம்பி வழிகிறது
அதன் மிச்சம் தான்
குளத்தில் விழுந்ததால்
தாமரையாக மலர்கிறது
காற்றுடன் கலந்ததால
தென்றல் ஆகிறது
காகிதத்தில் விழுந்ததால்
கவிதையாகிறது!!!!!!!!!
jeudi 6 janvier 2011
பயன்
விருட்சம் ஒன்று
விறகுக்காக...வெட்டப்பட்டு
அடுப்பில் எரிந்து சாம்பலானது
விதை ஒன்று
சிதையில் விழுந்து
விருட்சமாகாமலேயே
சாம்பலானது
பயனாகி மடிந்தது ஒன்று
பயனின்றி முடிந்தது ஒன்று
இருப்பினும்
சாம்பலின் பயன் ஒன்று தான்
அன்னை
அன்னை என்னும் மூன்றெழுத்து
எம் வாழ்வில் பரிசாய் கிடைத்த உயிரெழுத்து
அவள் பாசம் என்றும் பொய்க்காத மெய்யெழுத்து
உறங்கிய வாழ்க்கையை உசுப்பி
உலகில் எனை மனிதனாக்கிய உறவு அவள்
என்றும் அவள் ஒளிரும் சூரியன்
அம்மா! அம்மா!! அம்மா!!!
அம்மா
அம்மா என்பது ஒரு அற்புதமான வார்த்தை அதில் ஆயிரம் அர்த்தங்கள்
அன்பையும் கருணையையும் நமக்கு கற்றுத்தருபவள்
தோல்வியில் துவளும் போதும் வெறுமையில் வாடும் போதும் எம்மை அணைத்துக்கொள்பவள்
செல்லும் வழியும் தெரியாமல் அடையும் இலக்கையும் அறியாமல் தடுமாறும் எமக்கு கலங்கரை விளக்காய் துணை நிற்பவள்
நம் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியாக தோள் கொடுப்பவள்
எத்தனையோ அதிசயங்கள் ஒரே இடத்தில அது அம்மா
எந்த பெருமையும் இல்லாமல் எந்த விளம்பரமும் இல்லாமல் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரே உலக அதிசயம் அவள், அம்மா
mardi 4 janvier 2011
அமிழ்தம்
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
அன்பே அவனுடை மொழியாகும்.
விரக்தி எனும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சகீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?
dimanche 2 janvier 2011
மகிழ்ச்சி
வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!
எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!
“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.
samedi 1 janvier 2011
2011 ஆம் ஆண்டு
2011 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரத்தில் 4ஆம் பாதத்தில் பிறக்கிறது. விசாகம் நட்சநத்திரத்தை தீதுரு விசாகம் என்று சொல்வார்கள். அதாவது தீமையைத் தரக்கூடியது. அதன்பிறகு அந்தத் தீமையை அழிக்கக் கூடியது என்று சொல்வார்கள்.
பாய்தனில் படுத்தோர் தேறார், பாம்பின் வாய் தேரைதானே, வழிநடை போனார் மேலார் இவர்களெல்லாம் விசாக நட்சத்திரத்தில் புதிய பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு பயணம் மேற்கொண்டால் விபத்துகள் வந்து சேரும். அல்லது அந்தப் பயணம் வெற்றிகரகமாக இருக்காது. ஒரு குறிக்கோளுக்காக பயணம் செய்தால், அந்தக் குறிக்கோள் நிறைவடையாது. தோல்வியில் முடியும். அதனால்தான் வழிநடை போனோர் மேலார்.
அதற்கடுத்தது பாய்தனில் படுத்தோர் தேறார். உடம்பு முடியாமல் விசாக நட்சத்தில் படுத்தால் அவர்களை நிச்சயமாக காப்பாற்ற முடியாது. விசாக நட்சத்திரம் நடக்கும் நாளில் மருத்துவமனையில் சென்று படுத்துவிட்டால், பிழைப்பது கடினம். இதுபோன்ற நட்சத்திரத்தில்தான் இந்த வருடம் பிறக்கிறது. இது பெரிய பாதிப்புகளையெல்லாம் உண்டாக்கக்கூடியது. எங்கு பார்த்தாலும் சச்சரவுகள், பிரச்சனைகள் என்று எல்லா இடங்களிலும் மாறி மாறி இருக்கும்.
அதற்கடுத்தது, நீதி கிடைப்பது என்பது கடினம். நீதியின் கரங்கள் வளைக்கப்படும். நீதிக்கும், அதிகாரத்திற்கும் இடையே யுத்தம் நடக்கும். நீதிபதிகளுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடக்கும். நீதிபதிகள் கடுமையாகப் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். பல அச்சுறுத்தல்களையும் தாண்டி அவர்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். இது எல்லோராலும் முடியாது. வலுவான கிரக அமைப்பு உள்ள நீதிபதிகளால்தான் அதிகாரத்தில் இருப்பவர்களில் அத்துமீறல்களையும் தாண்டி நீதியை நிலைநாட்ட முடியும். இதுபோன்று, இந்த வருடத்தில் பிறக்கக்கூடிய யுத்த நட்சத்திரமான விசாக நட்சத்திரம் கொடுக்கும்.
முருகப் பெருமான் கார்த்திகை, உத்திரம், விசாகம் என்று மூன்று அவதாரங்கள் உண்டு. அதில் சூரனை சம்காரம் செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த நட்சத்திரம் விசாக நட்சத்திரம். சம்கார நட்சத்திரம். என்னதான் அதிகார பலம், பண பலம் வந்து ஒரு பக்கம் மோதினாலும் இறுதியில் நீதி ஜெயிக்கும். அதனை இந்த 2011ல் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அது கொஞ்சம் காலம் கடந்து நடக்கும், ஆனால் நடக்கும்.
அதற்கடுத்ததாக மழை போன்றதெல்லாம் வழக்கம் போல இருக்கும். பருவம் தவறிய மழைதான் இருக்கும். மகசூல் ஒரு பக்கம் அதிகரித்தல், இன்னொரு பக்கத்தில் இயற்கை சீற்றங்களால் மகசூல் அழிவது போன்றதெல்லாம் இருக்கும். கார்த்திகை போனால் கடும் மழை இல்லை என்றெல்லாம் சொல்வார்களே, அதெல்லாம் போய், மார்கழியிலும் கடும் மழை பொழியும்.
இதுபோன்ற பழமொழிகள் ஏன் பொய்த்துப் போகிறது?
காலப் போக்கில் கிரகங்களுடைய அமைப்புகள், சுழற்சிகள் எல்லாமே மாறி வருகின்றன. அது மாற மாற இயல்பாகவே இதுபோன்ற மாற்றங்கள் வரும். இது இல்லாமல், மக்கள், ஆள்பவர்கள், உலகெங்கிலும் நாட்டை ஆள்பவர்கள் ஆகிய காரணிகள், தனி மனித ஒழுக்கம் இதையெல்லாம் சார்ந்து ஒவ்வொரு மழை தவறும் என்று சொல்வார்கள். மன்னன் அதவறினால் ஒரு மழை தவறும் என்று சொல்வார்கள். மழை பொய்க்கும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மழை அதிகம் பொழிந்து கெடுக்கும். காய்ந்து கெடுத்தது, பேய்ந்து கெடுக்கிறது என்று சொல்வார்களே அதுபோல நடக்கும்.
மனசாட்சிக்கு குறைவான சம்பவங்கள், பதவியில் இருப்பவர்கள் அந்தப் பதவியை தவறாக பயன்படுத்துவது – யாராக இருந்தாலும் – அதனால்தான் சில விஷயங்களை நாம் பார்த்து செய்ய வேண்டும். நீதித்துறை என்று சொன்னேனே அதற்காகச் சொல்கிறேன். இதுபோன்று இந்த வருடம் முன்னும் பின்னுமாக இருக்கும்.
மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி இருக்கும். உலகெங்கிலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி இருக்கும். கெட்டப் பழக்கங்களில் இருந்து தாண்டி வெளிவருவார்கள். அதற்கடுத்து, போராட்டங்கள் வெடிக்கும். ஏனென்றால், விசாகத்தில் வருடம் பிறப்பதால் எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், ஊர்வலம் போன்றெல்லாம் இருக்கும்.
அதன்பிறகு, ஒடுக்கப்பட்டாகிவிட்டது என்று கூறப்படும் இயக்கங்களெல்லாம் மீண்டும் உயிர்த்தெழும். சில விஷயங்கள் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால் விசாகம் இதுபோன்று மாற்றி மாற்றி அமைக்கும்
பாய்தனில் படுத்தோர் தேறார், பாம்பின் வாய் தேரைதானே, வழிநடை போனார் மேலார் இவர்களெல்லாம் விசாக நட்சத்திரத்தில் புதிய பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு பயணம் மேற்கொண்டால் விபத்துகள் வந்து சேரும். அல்லது அந்தப் பயணம் வெற்றிகரகமாக இருக்காது. ஒரு குறிக்கோளுக்காக பயணம் செய்தால், அந்தக் குறிக்கோள் நிறைவடையாது. தோல்வியில் முடியும். அதனால்தான் வழிநடை போனோர் மேலார்.
அதற்கடுத்தது பாய்தனில் படுத்தோர் தேறார். உடம்பு முடியாமல் விசாக நட்சத்தில் படுத்தால் அவர்களை நிச்சயமாக காப்பாற்ற முடியாது. விசாக நட்சத்திரம் நடக்கும் நாளில் மருத்துவமனையில் சென்று படுத்துவிட்டால், பிழைப்பது கடினம். இதுபோன்ற நட்சத்திரத்தில்தான் இந்த வருடம் பிறக்கிறது. இது பெரிய பாதிப்புகளையெல்லாம் உண்டாக்கக்கூடியது. எங்கு பார்த்தாலும் சச்சரவுகள், பிரச்சனைகள் என்று எல்லா இடங்களிலும் மாறி மாறி இருக்கும்.
அதற்கடுத்தது, நீதி கிடைப்பது என்பது கடினம். நீதியின் கரங்கள் வளைக்கப்படும். நீதிக்கும், அதிகாரத்திற்கும் இடையே யுத்தம் நடக்கும். நீதிபதிகளுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடக்கும். நீதிபதிகள் கடுமையாகப் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். பல அச்சுறுத்தல்களையும் தாண்டி அவர்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கும். இது எல்லோராலும் முடியாது. வலுவான கிரக அமைப்பு உள்ள நீதிபதிகளால்தான் அதிகாரத்தில் இருப்பவர்களில் அத்துமீறல்களையும் தாண்டி நீதியை நிலைநாட்ட முடியும். இதுபோன்று, இந்த வருடத்தில் பிறக்கக்கூடிய யுத்த நட்சத்திரமான விசாக நட்சத்திரம் கொடுக்கும்.
முருகப் பெருமான் கார்த்திகை, உத்திரம், விசாகம் என்று மூன்று அவதாரங்கள் உண்டு. அதில் சூரனை சம்காரம் செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த நட்சத்திரம் விசாக நட்சத்திரம். சம்கார நட்சத்திரம். என்னதான் அதிகார பலம், பண பலம் வந்து ஒரு பக்கம் மோதினாலும் இறுதியில் நீதி ஜெயிக்கும். அதனை இந்த 2011ல் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அது கொஞ்சம் காலம் கடந்து நடக்கும், ஆனால் நடக்கும்.
அதற்கடுத்ததாக மழை போன்றதெல்லாம் வழக்கம் போல இருக்கும். பருவம் தவறிய மழைதான் இருக்கும். மகசூல் ஒரு பக்கம் அதிகரித்தல், இன்னொரு பக்கத்தில் இயற்கை சீற்றங்களால் மகசூல் அழிவது போன்றதெல்லாம் இருக்கும். கார்த்திகை போனால் கடும் மழை இல்லை என்றெல்லாம் சொல்வார்களே, அதெல்லாம் போய், மார்கழியிலும் கடும் மழை பொழியும்.
இதுபோன்ற பழமொழிகள் ஏன் பொய்த்துப் போகிறது?
காலப் போக்கில் கிரகங்களுடைய அமைப்புகள், சுழற்சிகள் எல்லாமே மாறி வருகின்றன. அது மாற மாற இயல்பாகவே இதுபோன்ற மாற்றங்கள் வரும். இது இல்லாமல், மக்கள், ஆள்பவர்கள், உலகெங்கிலும் நாட்டை ஆள்பவர்கள் ஆகிய காரணிகள், தனி மனித ஒழுக்கம் இதையெல்லாம் சார்ந்து ஒவ்வொரு மழை தவறும் என்று சொல்வார்கள். மன்னன் அதவறினால் ஒரு மழை தவறும் என்று சொல்வார்கள். மழை பொய்க்கும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மழை அதிகம் பொழிந்து கெடுக்கும். காய்ந்து கெடுத்தது, பேய்ந்து கெடுக்கிறது என்று சொல்வார்களே அதுபோல நடக்கும்.
மனசாட்சிக்கு குறைவான சம்பவங்கள், பதவியில் இருப்பவர்கள் அந்தப் பதவியை தவறாக பயன்படுத்துவது – யாராக இருந்தாலும் – அதனால்தான் சில விஷயங்களை நாம் பார்த்து செய்ய வேண்டும். நீதித்துறை என்று சொன்னேனே அதற்காகச் சொல்கிறேன். இதுபோன்று இந்த வருடம் முன்னும் பின்னுமாக இருக்கும்.
மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி இருக்கும். உலகெங்கிலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி இருக்கும். கெட்டப் பழக்கங்களில் இருந்து தாண்டி வெளிவருவார்கள். அதற்கடுத்து, போராட்டங்கள் வெடிக்கும். ஏனென்றால், விசாகத்தில் வருடம் பிறப்பதால் எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், ஊர்வலம் போன்றெல்லாம் இருக்கும்.
அதன்பிறகு, ஒடுக்கப்பட்டாகிவிட்டது என்று கூறப்படும் இயக்கங்களெல்லாம் மீண்டும் உயிர்த்தெழும். சில விஷயங்கள் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால் விசாகம் இதுபோன்று மாற்றி மாற்றி அமைக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!
தித்திக்கும் இந்நாளில் இன்புறுவோம் நட்போடு.!!
சுயநலம் இல்லாத பொதுநலம் கொண்டிடுவோம்.!!
சுற்றம் போற்ற சுகமாய் வாழ்ந்திடுவோம்>!!
நட்புக்கடலில் ஒன்றாக முக்குளிப்போம்.!!
எல்லோரும் புத்தாண்டில் வளம்பெற வாழ்த்திடுவோம்!!
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!!!
vendredi 31 décembre 2010
mardi 28 décembre 2010
நட்பு
நீயில்லை என்றால்
நானில்லை என்பதல்ல நட்பு
யாருமில்லை என்றாலும்
நானிருக்கிறேன் உனக்காக என்பதுவே நட்பு...
மதிப்பு
உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது
lundi 27 décembre 2010
வாழ......
கற்றுக் கொடுத்தாய்
மலர்களுக்கு மணம் வீச
பறவைகளுக்கு
சிறகை விரிக்க
மேகங்களுக்கு
வான் மழை பொழிய
மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவில்லையே
மனித நேயத்துடன் வாழ......
நம்பிக்கை
கண்ணீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்ணீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!
dimanche 26 décembre 2010
காலம் கடந்தே
வாழ்க்கையை எதிர் காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும் பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.
வாழ்க்கையை எதிர் காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும் பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.
வாழ்வு வாழ்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளின் மணி நேரத்தின் சதையில் இருக்கிறது என்பதை காலம் கடந்தே அறிகிறோம்.
ஏணி
ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித்து தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால் தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.
படிக்கட்டு
சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.
முடியாது.
பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
samedi 25 décembre 2010
நத்தார் தின வாழ்த்துக்கள்...
உங்கள் அனைவருக்கும் குழந்தை ஜேசுவின் இனியதும் இன்பமும் சந்தோசமும் சமாதானமும் அமைதியும் நிறைந்த நத்தார் தின வாழ்த்துக்கள்...
jeudi 23 décembre 2010
கருவறை
முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:-
மகனே!
நீ இருக்க
ஒரு கருவறை இருந்தது
என் வயிற்றில்.......
நான் இருக்க ஒரு
இருட்டறை கூடவா இல்லை
உன் வீட்டில்........
மகஜர்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மாபரனுக்கு
யான் எழுதும் மகஜர்
மகஜர் எழுதவெனப் பேனாவை எடுத்தேன்
எதை எழுதுவேன் எனும் சிந்தையில் ஆழ்ந்தேன்
காதைப் பிளக்கும் குண்டு மழையைப் பற்றியா?
கோரத் தாண்டவமாடும் இயற்கை அனர்த்தம் பற்றியா?
தொடர்ந்துகொண்டே செல்லும் படுகொலைகளையா?
நீண்டு செல்லும் காணாமலாக்கப்பட்டோர் பட்டியலையா?
எதைப்பற்றித் தான் எழுதுவேன்?
உறவுகளைப் பிரிந்து அவ தைப்படும் உள்ளங்களையா?
பொருளாதாரத் தடைபற்றியா?
பொருட்களின் விலையேற்றம் பற்றியா?
அலரி விதைக்குப் பலியாகிய கொடுமையையா?
அழிவுப் பாதையில் செல்லும் கல்வி நிலை பற்றியா?
முடக்கப்படும் உரிமைக்குரல்கள் பற்றியா?
மறைமுகமான அச்சுறுத்தல் பற்றியா?
மொத்தத்தில் தொலைந்து போகும் மனிதத்தையா?
எதை எழுதுவேன் என் மாபரனுக்கு
மார்கழிக் குளிரில் மாட்டுத்தொழுவத்திலே
மாமரி மடியினிலே மங்கையர் வயிற்றினிலே
மன்னவன் பிறந்திட்டான்
மண்ணில் வேந்தனாய் மக்கள் மத்தியில்
மானிடர் பாவம் போக்க மமதையை மறந்திட
மலர்ந்திடும் சமாதானத்தை தந்திடவே
மன்னவன் பிறந்திட்டான்
மணம் வீசும் தூபத்துடன் மன்னர்கள் சூழ்ந்திடவே
மண்ணுலகில் ஒளி பிறந்திடவே
மானிடர் அனைவரும் சந்தோசத்தில் திழைத்திடவே
மன்னவன் பிறந்திட்டான்
மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியொன்றாம்
மண்ணின் வேந்தன் விண்ணில் ராஜன்
மனுக்குலத்தை மீட்டெடுக்க மாபரன் இயேசு பாலன்
மாமரி மடியில் பிறந்திட்டான்
இல்லத்தரசி
என்னவளே
உன்னை நான் பார்க்க நினைக்கையில்
பகலாய்...
உன்னுடன் பேச நினைக்கையில்
நிலவாய்...
உன்னுடன் உறங்க நினைக்கையில்
கனவாய்.....
உன்னை நான் தொட நினைக்கையில்
தென்றலாக மாறுகிறாய்
என் காலமெல்லாம் நீ
வருவாயா?
காதல்
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
ஒருவர் மட்டும் படிப்பது தான் வேதம்
இருவரும் சேர்ந்து படிப்பது தான் காதல்
மழை வரும் முன் வானத்தை மூடும் மேகம்
காதல் வந்து மனத்தை மூடும் மோகம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம்
அச்சத்தால் அஞ்சி சிவக்கும் கன்னம்
உயிரே
உயிரே
உன்னோடு நானில்லை
உன் நினைவோடு நானுண்டு
உன் கண்களில் நானில்லை
என் கனவுகளில் நீயுண்டு
நீ உயிர் வாழும் வரை
உன் உறவு வேரொருவனோடு
நான் உயிர் வாழும் வரை
என் உறவு உன்னோடு
lundi 20 décembre 2010
தெரியாது
ஒருவனுடைய செருப்பு அறுந்துவிட்டது. அவன் அதை மறைக்க ஓர் உயாயம் செய்தான். அறுந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டே, டே..! உன்னை விடமாட்டேன்டா ! என்றபடி வேகமாக ஓடினான். அவன் யாரை விரட்டுகிறான் என்பதைப் பார்க்க சிலர் அவன் பின்னால் ஓடினார்கள். அவர்கள் பின்னால் ஓடாவிட்டால் நம்மைக் குறை நினைப்பார்களே என்று எஞ்சியவரும் ஓடினார்கள். கடைசியில் செருப்பு அறுந்தவனுக்குப் பின்னால் ஊரே ஓடியது. இப்படி ஏன் ஓடுகிறோமெனத் தெரியாது செருப்பறுந்தவனுக்கு பின்னால் ஓடும் கூட்டமே நம்மில் அதிகம்.
கல்வியின் அடிப்படை
குரங்கு தன் குட்டியை மடியில் காவிச் செல்லும். மடியை விட்டு இறங்கிய குட்டி தாயின் செயல்களை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய் பாயும் போது சரியாகப் பாய்ந்து அதன் வயிற்றைப் பற்ற வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் குரங்கு குட்டியை மறுபடியும் வயிற்றில் ஏற அனுமதிக்காது. கவனத்தை குலையாமல் வைத்திருப்பதுதான் கல்வியின் அடிப்படை என்பது குரங்குகள் சொல்லும் உண்மையாகும்.
jeudi 16 décembre 2010
பிறப்பாயோ இயேசு பாலா
பிறப்பாயோ இயேசு பாலா
வார்த்தையுமே மனுவுருவாய் - வாழ்வின்
இருளகற்றும் ஒளிப்பிளம்பாய்
அருள் மழை பொழியும் இறைமகனாய் - மானிடர்
இடர் நீக்கும் அருட்பொழிவாய்
பொங்கும் மனம் அமைதிபெற
கொதிக்கும் உள்ளம் குளிரடைய
கதிரவனாய் கார்முகிலாய்
அருள்பொழியும் அருளூற்றாய்
அவதரித்தார் இவ்வுலகில் கிறிஸ்து என்னும் யேசுபாலன்
போரினாலே புலம் பெயர்ந்து - வாழ்வில்
போற்றிச் சேர்த்த பொருழிழந்து
அசைந்தாடிய அங்கமிழந்து
அங்கவீனராய் அவலமுற்று
அகதிகளாய் அநாதைகளாய் - எம்மண்ணில்
அவலத்தோடு அமைதியிழந்து
வரட்சியுற்ற உள்ளங்களில் பிறப்பாயோ இயேசு பாலா?
உடலிழந்து உறவிழந்து
உண்மையிலே உயிர் இழந்து
உலகமயமாக்கலிலே உண்மை வாழ்வின் பொருளிழந்து
நாகரீகமென்னும் நாமத்திலே நாளுக்கு நாள்
நன்மை தரும் உண்மைகளை பொய்மையினால் அலங்கரித்து
நடைப்பிணமாய் நலமிழந்து வாழுகின்ற எம் மண்ணில்
நலமிகவே பொழிந்து நீயும் பிறப்பாயோ இயேசு பாலா?
யாவருமே சோதரராய் -மண்ணில்
யார் குலமும் ஓர் குலமாய்
ஓர் உலகம் ஓர் குடும்பம் ஆகிடவே
ஒற்றுமையின் கூரையின் கீழ் வாழ்ந்திடவே
வேற்றுமைகள் இல்லை எம்மில் -இனியும்
வேதனையின் நாமம் இல்லை
ஒருமித்து மகிழ்வுறவே, ஒன்றித்து வாழ்ந்திடவே
ஒற்றுமையின் ஒன்றிப்பால் - உலகில்
இறையாட்சி மலர்ந்திடவே
வந்துநீயும் பிறப்பாயோ இயேசு பாலா
நன்றி.....
துயற்கொள்ள ஆளுன்டோ
இனிமையாக முடிந்துவிட்டால்
இனைந்து மகிழ ஆள் உண்டு
துன்பமென்று மாறி
துக்கமென்று முடிந்துவிட்டால்
துயற்கொள்ள ஆளுன்டோ ???
mardi 14 décembre 2010
பொருள்.
பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.
சும்மா இருப்பவன்
பிணங்கள் நீரில் தாழ்ந்துவிடும், ஆனால் உயிருடன் இருப்பவன் நீந்திக் கரைசேருவான். போராடுபவனே கரை சேர முடியும் என்பது இதன் அர்த்தமாகும், பிணம்போல சும்மா இருப்பவன் பிணம்போல தாழ்ந்து போக வேண்டியதுதான்.
lundi 13 décembre 2010
வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டுமாயின் அன்பு உன் அன்னை, அறிவு உன் தந்தை, அறம் உன் சகோதரன், பொறுமை உன் மனைவி, பண்பு உன் மகள், ஆண்மை உன் மகன் என்று கருதி, இவைகளை ஒரு குடும்பமாக உருவமைத்து, இந்தக் குடும்பத்துடன் ஒன்றுபட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
vendredi 10 décembre 2010
ராசி
முழு மனதோடு நம்புகிற ஒரு காரியத்தை துணிந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறுக்குவழி தெரிந்தால் மட்டுமே ஜெயிக்கலாம் என்ற எண்ணம் தப்பானது.
நேர்மையா தொழில் செய்தால் எல்லா ராசியும் நல்ல ராசிதான்.
முயற்சி
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.
தரம்
அரசியலுக்குப் பின்னால் கொள்கை இருக்கணும்,
கடமைக்குப் பின்னால் நேர்மை இருக்கணும்,
பணத்துக்குப் பின்னால் உழைப்பு இருக்கணும்,
அப்போதுதான் எதிலுமே தரம் இருக்கும்.
jeudi 9 décembre 2010
ஒரு நாள்
வளரும்போது அழுத்தங்கள்
வருவதைத் தவிர்க்க முடியாது,
ஆனால் முயற்சியில் தொடர்ந்து
திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள்
அழுத்தங்கள் தோற்றுப்போகும்.
mercredi 8 décembre 2010
அவள்
காதலின் சின்னம் என்ன என
கேட்டேன் அவளிடம்
கல்லறை என்றள் அவள்
கல்லறைக்கு வழி என்ன எனக்
கேட்டேன் அவளிடம்
என்னை காதலித்துபார்
என்றள் அவள்
அன்பே
என்னுள் நீ
வந்தவுடன் உணர்ந்துவிட்டேன்....
இத்தனை அழகு மிகுந்ததாக
இயற்கை இருந்தாலும்
என்றாவது ஒருநாள்
இயற்கையின் அழகு கூட மாறலாம்....
உலகத்தில் மட்டுமல்ல....
உள்ளத்திலும் என்றும்
மாறாத அழகி
அன்பே நீ!
மட்டும்தான்.......
போராடு
வளரும்போது அழுத்தங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் முயற்சியில் தொடர்ந்து திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள் அழுத்தங்கள் தோற்றுப்போகும்.
பலத்தை வைத்து பலவீனமானவர்களை தாக்கினால் அதற்க்குப்பேர் வெற்றி இல்லை பொறுக்கித்தனம். பலவீனமான மக்களுக்காகப் போராடுவதுதான் உண்மையான பலம்.
mardi 7 décembre 2010
Inscription à :
Articles (Atom)














