வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் வாழ்க்கை நாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்ததல்ல, எவ்வளவு உயர்வாக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. saveiour@gmail.com
vendredi 30 mai 2014
மாற்றுத்திறனாளி
கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..
காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...
வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது..
குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..
கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்
காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...
வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது..
குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..
கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்
திருமணப் பொருத்தம்
திருமணப் பொருத்தம்
இன்று திருமணம் என்ற உடன் பல இடங்களில் பொருத்தம் பார்ப்பது மிக அவசியம் என்று ஆகிவிட்டது அப்படி இருக்க என் சாதம் தோஷம் அவர் ஜாதகம் தோஷம் இல்லை எப்படி திருமணம் செய்வது என்று அனைவரும் குழம்பி கொண்டு வாழ்கிறார்கள் ஆனால் உண்மையில் பொருத்தம் என்பது அந்த காலத்தில் இல்லவே இல்லை இன்றுதான் இப்படி பத்து பொருத்தம் வேண்டும் பத்தில் ஆறு இருந்தால் பொருந்தும் என்று சொல்கிறார்கள் இதில் மிக முக்கியமாய் இரண்டு பொருத்தம் வேண்டும் அது மாங்கல்யம் அல்லது யோனி இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் பண்ண கூடாது அது சரி இல்லாதவர்கள் வாழ்வில் இனிக்கத்தான் செய்கிறார்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் இயற்க்கையாக திருமண தோஷம் இருப்பின் அவர்கள் என்னதான் பொருத்தம் பார்த்து ச்திருமணம் செய்தாலும் அத்திருமணம் தோற்றுத்தான் போகும் அப்படி இருக்கையில் இந்த பொருத்தம் எப்படி பொருந்தும் யோசிக்கவேண்டிய விசியமே ஆம் அப்படி பொருத்தம் இல்லாமல் எப்படி அந்த காலத்தில் ஜாதகத்தை இணைத்து இருப்பார்கள் ஆமா நாம் பொருத்தம் பார்க்கிறோம் என்று மற்றவர் போல இல்லாமல் அவருகளுடைய ஜாதகத்தில் ப்ராப்தம் என்னும் பொருத்தம் அமைய வேண்டும் ஆம் அப்போருதம் இல்லையேல் திருமண நிகழ்வே நடக்காது ஒருவருடன்
ப்ராப்தம் என்பது இறைவன் வகுத்த ஒன்று அதை யாராலும் தடுக்க முடியாது பிரிக்க முடியாது ஆம் ஒரு பெண் ஜாதகத்தில் லகனத்தின் அதிபதி மற்றும் அவற்றின் சாரம் கொண்ட கிரகமும் இராசியின் அதிபதி அந்த கிரகத்தின் சாரம் அமைப்பை கொண்ட கிரகமும் ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதியின் அமைப்பை அல்லது அந்த ஜாதகரின் தசா புத்திகளின் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் அல்லது ராசிநாதனின் தொடபுகளை பெற்று வலுவாக அமர்ந்து இருந்தால் அவர்கள் மனமொத்த தம்பதியினர் அதனால் இன்று அவ்வாறு பொருத்தம் பார்ப்பது இல்லை காரணம் இன்றைய சோதிடர்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும் என்று கூட இருக்கலாம்
ஆம் ஒரு பெண் ஜாகத்தின் அமைப்பை நன்றாக ஆராய வேண்டும் அந்த பெண் அமைப்பு என்றும் கெட கூடாது அப்படி கேட்டு இருந்தால் இந்த ஆணின் அமைப்பும் கேட்டு விடும் அதாவது சக்தி இல்லையேல் அதனுள் சிவமும் இல்லாமல் போகும் ஒரு பெண்ணின் அமைப்பு அந்த சாதகரை திருமணம் செய்தால்அந்த குடும்பம் விருத்தி அடையும் அமைப்பு இருக்கவேண்டும் இல்லாத யோகத்தை கூட ஒரு சக்தி என்னும் பெண் வந்தால் தானாக வந்து விடும் அந்த சக்தியை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்
பெண் என்பவர் மண்ணுடன் ஒப்பிடுவார்கள் ஆண் என்பவர் விதையுடன் ஒப்பிடுவார்கள் மண்ணில் எந்த விதை வேண்டுமானாலும் விதைக்க முடியும் ஆனால் விதை நன்றாக அமைய வேண்டுமே அப்படி ஆணின் பங்கும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது அவ்வாறு பெண் என்னும் மண் அமைப்பை பெற்று இருப்பதால் அவர்கள் எவ்வித விதை விதைத்தாலும் அந்த விதை நன்றாக வளர அந்த மண்ணின் அமைப்பும் கேட்டு இருக்க கூடாது இப்படி காரகதுவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஏனோ தானோ என்று திருமணம் செய்தாலோ நான் பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தேன் என்றாலும் பின்பு இல்லற வாழ்க்கை வினாகி போகும்
திருமணத்தில் முக்கியமாக காதல் திருமணம் இன்று சில காதல் மற்றும் திருமணம் பணம் வசதி மற்றும் வேலை படிப்பு இப்படியே தகுதிகள் அடிப்படையிலே அமைகிறது அப்படி அமைகிற திருமணம் எவ்விதத்திலும் மனோ திருப்தியை தராது அதனால் துக்கமும் தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புக உண்டாகும் மனமொத்த தம்பதி இல்லாத சூழ்நிலையில் வேற்று ஒருவரை தேர்ந்து எடுத்து மறைமுக வாழ்கையை நடத்த வேண்டி வந்து விடும் அவ்வாறான பொருள் பணம் வீடு வசதியை பார்த்து திருமணமும் இக்கட்டான சூழ்நிலையில் நம்மை நிறுத்தி விடும் என்பது பலரும் அனுபவித்த உண்மையே
ஆம் ஒரு திருமணம் வைபோகம் என்பது இன்று காதல் திருமணம் என்றால் கூட அங்கும் பொருத்தம் என்கிற சாதகத்தை தூக்கி கொண்டு அலைகிறார்கள் அப்படி பொருத்தம் பார்க்க முனைந்து விட்டல் அந்த காதல் அமைப்பு துண்டித்து விடுகிறது அதனால் அங்கு காதல் திருமணம் என்னும் நிலை மாறி விடுகிறது அதலால் காதலரை தேர்ந்து எடுக்கும் முன்பே பொருத்தம் பார்த்து காதலிப்பதும் எவ்விதத்திலும் சாத்தியம் ஆகாது அதனால் அவரவர் அமைப்பை அறிந்து கொண்டு அதன் சூச்சமா அமைப்பின் படி நடத்தி கொள்வதே சாத்தியம் இல்லையென்றாலும் அந்த திருமணத்தால் பதிப்பே வரும்
சாதக பொருத்தம் சரியாக இந்த ஜாதகத்தோடு பொருந்தி வரவேண்டும் என்று பார்த்தல் எப்படி முடியும் ஒரே அமைப்பு உடைய ஒருவருடைய சாதகம் போல இன்னொருவர் சாதகம் இருக்காது ஒவ்வொருவருடைய பிறப்பும் ஒவ்வோரு நோக்கத்திற்காக அமைக்க பட்ட ஒன்று ஒவ்வொரு ஆன்மாவும் வெவ்வேறு செயலுக்க படைக்க பட்ட ஒன்று அப்படி இருக்கையில் எப்படி ஒரே அமைப்பு உடைய ஜாதகம் அமையும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் தோஷ அமைப்பு என்பது மட்டும் அல்லாமால் ப்ராப்தம் என்னும் அமைப்பையும் சரி வர ஆராய்ந்து அந்த கிரக சாராம்சம் சரி வர பொருந்தி அமைந்தால் அந்த சாதகர் இல்லறத்தில் நல்லறம் காண்பார்கள்
மன்னிப்பு
எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.
கிழவர் சொன்னார்,
வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார்.
செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம்.
அதே இடம். இது எப்படி சாத்தியம்? கிழவர் சொன்னார்,
“அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.
செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம்.
அதே இடம். இது எப்படி சாத்தியம்? கிழவர் சொன்னார்,
“அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.
பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.
mardi 27 mai 2014
வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.
கோழைகள் மரணத்திற்கு முன் பல தடவைகள் இறக்கிறார்கள், வீரன் ஒரு தடவை மட்டுமே இறக்கிறான்.
குறையற்ற முழுமையான அன்பு அச்சத்தை வெளியே தள்ளுகிறது.
பகவத் கீதை சொல்கிறது : உன்னாலேயே உன்னை உயர்வாக்கிக்கொள்ள முடியும், உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே.. ஏனெனில் நீதான் உனது சொந்த நண்பன், அதுபோல நீயே உனது விரோதி.
கன்பூசியஸ் சொன்னார் : தன்னால் செய்யக்கூடிய மிகமிகச் சிறந்த போதனை எதுவென்றால்… ” உங்களது எண்ணங்களில் தீமை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் ” என் றபோதனையாகவே இருக்குமென்றார்.
mercredi 14 mai 2014
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி ?
வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.
வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.
கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.
அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.
வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?
1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.
3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்
4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.
5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.
சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.
Inscription à :
Articles (Atom)



















