முகப்பு

vendredi 5 novembre 2010

தீபமேற்று..

தீயவனை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது தீபாவளி என்கிறாயே.. தீபாவளி கொண்டாடப்படும் நாடுகளின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் நரகாசுரனைவிட நல்லவர்களா இருக்கிறார்கள் என்று என்றாவது உன் நெஞ்சைத் தொட்டு கேட்டிருப்பாயா.. நரகாசுரனை கொன்ற கடவுளுக்கு நன்றி சொல்ல ஆலயம் ஓடுகிறாயா .. ஓடு.. அதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கடவுள் மக்களை காப்பாற்றவா நரகாசுரனை கொன்றார் ? இல்லை.. தேவர்களைக் காக்கவே கொன்றார்… அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்காக போராடிய கடவுள்.. என்றாவது மக்கள் பக்கம் நின்றதாக அறிந்திருந்தால் ஓடிப்போ தீபமேற்று..

தண்ணீர்

தண்ணீருக்கு ஒரு தன்மை உண்டு, அது யாருடன் சேருகிறதோ அதுவாக மாறும். சந்தனத்துடன் சேர்ந்தால் திலகமாகும், மண்ணுடன் கலந்தால் சேறாகும். இதுபோலவே பிள்ளைகளின் நடத்தையும் அவர்கள் யாருடன் சேர்ந்துள்ளனர் என்பதே தீர்மானமாகும்


mercredi 3 novembre 2010

பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்

பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்


1) பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர்.

2)காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.

3)பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்

அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.

4)பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _ நேரு.

5)பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது _ லார்ட் பைரன்.

6)பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.


7)பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _ ஷேக்ஸ்பியர்.

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.

9)எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _ மகாபாரதம்

10) தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்


11)பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் _ தேசிக விநாயகம் பிள்ளை.

12)ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் _பெஸ்லிங்

mardi 2 novembre 2010

பொருள்


பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.

எப்போது அவளுக்காக.....???


பிறந்தது முதல்


பெற்றோருக்காக

திருமணம் முதல்

கணவருக்காக

தாய்மை முதல்

பிள்ளைகளுக்காக

எப்போது அவளுக்காக.....???

மழை


மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்தேன் 'குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே' என்றான் ஆண்ணன் 'எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே' என்றாள் அக்கா 'சளி பிடிச்சிக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு' என்றார் அப்பா தன் முந்தானையால் என் தலையை துவட்டிக்கொண்டே திட்டினாள் அம்மா என்னையல்லா மழையை !

அனுபவியுங்கள்.

 
 
அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.


ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.

இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்

ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.

உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்

ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.

எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.

ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்

ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்

ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.

ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.

ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.

காலத்தின் அரும

     
     காலத்தின் அரும


    01 வருடம் – தோல்வியடைந்த மாணவனுக்குத் தெரியும்.

    01 மாதம் – குறை பிறசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.

    01 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.

    01 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு

       பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.

   01 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.

  01 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.

  01 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப்     போனவனுக்குத் தெரியும்.

lundi 1 novembre 2010

வாழ்க்கை

வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது". இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.


மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!

உ...ழைத்துக் கொண்டிருங்கள்!!!

நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.

dimanche 31 octobre 2010

பூக்களே...

பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய்
பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து
நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று
நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.


12 உயர்ந்த செல்வங்கள்


உலகத்தில் 12 உயர்ந்த செல்வங்கள் இருக்கின்றன,
அவற்றில் 11 பணமே அல்ல. அவையாவன
01. நேர்மறையான மனோபாவம்
02. உடல் ஆரோக்கியம்
03. மனித உறவுகளில் சமாதானம்
04. பயத்தில் இருந்து விடுதலை.
05. எதிர்கால சாதனை குறித்த நம்பிக்கை
06. விசுவாசத்திற்கான ஆற்றல்
07. தனது ஆசீர்வாதங்களை பகிர தயாராக இருப்பது
08. அன்போடு செய்யும் வேலை
09. எல்லாவற்றிலும் திறந்த மனம்
10. சுய கட்டுப்பாடு
11. மக்களை புரிந்து கொள்ளும் திறன்
12. பணம்.

யாழ். சித்தர் யோகர் சுவாமி



யாழ். சித்தர் யோகர் சுவாமிகளை பார்க்கவும், தனது எதிர்காலம் பற்றிக் கேட்கவும் ஒருவர் போயிருந்தார். அவருக்கு பதில் சொன்ன சுவாமிகள் – எல்லாம் முடிந்துவிட்டது போ ! – என்று கூறி அனுப்பிவிட்டார். ஆம் ! எல்லாமே எழுதி முடிக்கப்பட்ட கணக்குகள்தான் அவை சாஸ்திரமும், சோதிடமும் பார்த்தாற் போல மாறப்போவதில்லை. சகல கணக்குகளும் முடிந்துவிட்டது, விடை வரும் பார்த்துக்கொள் என்பது சுவாமிகளின் கருத்து. எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரியாமல் கூத்தடிக்கும் மனிதர்களை பார்த்து சித்தர்கள் சிரித்தார்கள்.

என் மனசு


ஆகாயப் பட்டுடுத்தி


அசத்தலாய் நட்சத்திர

ஆபரணம் அணிந்து

சந்திரனை முழுமதியாய் கொண்ட

பட்டொளி வீசி நீ

நடந்து வருகையில்

வேகமாய் கரைந்து போனதடி

என் மனசு

மலர்


அன்பே நிலவை நேசிக்கிறேன்


நீ நிலவோடு வாழ்வதால்

நான் மலர்களை முத்தமிடுகிறேன்

நீ நித்தம் சூடிக்கொள்வதால்

நான் தென்றலை சுவாசிக்கிறேன்

தினம் உன்னை தீண்டிச் செல்வதால்

நான் பனித்துளிகளை ஆதரிக்கிறேன்

உன் கண்களில்

பிரசவம் செய்வதால்.

முத்தம்......

முத்தம்......


பத்துமாத பந்தம் அதைப் பக்குவமாய் காத்து

மொத்தமாகச் சேர்த்து முத்து முத்தாய் கோர்த்து

பெத்த நேரம் அணைத்து சொத்தையோரம் பார்த்து

கொத்து கொத்தாய் அன்னை நித்தம் தருவாள் முத்தம்

vendredi 29 octobre 2010

முழுமை

உள்ளத்தால் உண்மையாக இருந்தால் அது உண்மை !


உடம்பால் உண்மையாக இருந்தால் அது மெய்ம்மை !

வாயால் உண்மையாக இருந்தால் அது வாய்மை !

இந்த மூன்றுமே சேர்ந்தால் அதுவே முழுமை !

அம்மா

கருவினில் தாங்கி


உருவாகி உயிர் பெற

உழைத்தவள் அம்மா.

உயிர் எழுத்தின்

உண்மைப் பொருள் அம்மா

அம்மா

அருவரி குழந்தை கூட ..அழகாய் சொல்லும் ஒரு வரி கவிதை .. அம்மா

jeudi 28 octobre 2010

நட்பு

நேற்றைய நினைத்தால்
கவலை பிறக்கும்
இன்றைய நினைத்தால்
இன்பம் சுரக்கும்
நாளைய நினைத்தால்
நடுக்கம் கொடுக்கும்
நேற்றைய இறப்பையும்
நாளைய பிறப்பையும் விட
நமக்குத் தேவையெல்லாம்
நட்பு வாழ்க்கை தானே.....

சிறப்பு

நண்பா


நீ தூங்குவது தவறில்லை

எப்போது எழுந்திருக்கிறாய்

என்பதே முக்கியம்

என்ன வாழ்க்கை வாழ்ந்தாய்

என்பதல்ல உயர்வு

எப்படி வாழ்ந்தாய்

என்பதே சிறப்பு