முகப்பு

jeudi 14 août 2014

ss


ss


ss


ss


ss


mardi 12 août 2014

வாழ்க்கை


நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
அது தான் வாழ்க்கை...!(3.2.2012)

உன் வாழ்க்கை



சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

தத்துக்கிளி



தத்துக்கிளி எல்லாவற்றையும் தொட்டுப்பார்க்கும் எதிலும் முழுமையாக ஈடுபடாது. எல்லாவற்றுக்கும் பயந்து ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவி எதையுமே செய்யாதிருக்கும் தத்துக்கிளி போல வாழக்கூடாது. ஏனென்றால் கஷ்டங்களை கண்டு ஒதுங்குவதால் உங்களால் எதையுமே சாதிக்க இயலாது.

நிதி



ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று நிதி திரட்டாதே தான் ஏன் ஏழையாக இருக்கிறேன் என்ற இரகசியத்தை கண்டு பிடிக்கத் தெரியாத ஏழைக்கு நீ எவ்வளவு உதவி செய்தாலும் அவன் இறுதிவரை ஏழையாகவே இருப்பான். பலர் வெளிநாடு வந்தும் கடனாளியாக இருப்பது போல..

வீரமும் விவேகமும்.


என்ன செய்ய முடியும் என்பதை அறிவதைவிட நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை அறிவதே முக்கியம். வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமும்.

lundi 4 août 2014

செயற்படுங்கள்

 
 
 
நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா.. அப்படியானால் நேரத்தை வீணடிக்காதீர்கள் ஏனென்றால் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எழுந்து செயற்படுங்கள், நோக்கத்துடன் செயற்படுங்கள்.
 
 
 உங்களுக்குப் பின்னால் கடந்த காலத்தின் கீழ்ப்பாகமற்ற பாதாளம் இருக்கிறது, முன்னால் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் எதிர்காலம் இருக்கிறது.. எதை வைத்து இந்த வாழ்வை கவலையாக்குகிறாய் முட்டாள் மனிதனே..
 
 
 நலமின்றி சந்தோஷம் சாத்தியமில்லை.. நம் வாழ்வின் ஆரோக்கியத்தின் ஆயுள் அதையே பொறுத்தது, சந்தோஷம் மனதில் இருந்தே வருகிறது.
 
 
 இந்த வாழ்வில் மன்னிக்க ஏதாவது இருந்தால் உடனே மன்னியுங்கள், மன்னிக்காமல் போவதைவிட மெதுவாகவேனும் மன்னிப்பது நல்லது. 

நேரம் நிற்காது

 
 
 
 
வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே..
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது..
வாழ்க்கை இருண்டது சிக்கலானது என்றாலும் கலங்காதே..
நேரம் நிற்காது உன் துக்கத்திற்காக தாமதியாது..
இன்றைய கசப்பு நாளை கடந்த காலமாகிவிடும்..
அழாதே.. புதிய நம்பிக்கை.. புதிய கனவுகள்.. புதிய முகங்கள்..
இன்னும் பிறக்காத வருடங்களில் அனுபவிக்காத சந்தோஷங்கள் உள்ளன..

dimanche 6 juillet 2014

சந்தேகிக்கும் பழக்கமாகும்”



வெற்றியின் பாதையில் உள்ள தடைகளில் மிகவும் பெரிய தடைக்கல், ” சந்தேகிக்கும் பழக்கமாகும்” சந்தேகம் எப்போதும் அமைதியைக் குலைக்கிறது.

வெளியே தேடுவது பயனற்றது.


ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷத்தைத் தருகிறது.

நம்மில் நாம் திருப்தி காணாவிட்டால் அதை வெளியே தேடுவது பயனற்றது.

வாழும்போதே முழுமையாக வாழ்ந்துவிடுங்கள், எத்தனை வருடங்கள் வாழ்ந்தீர்கள் என்பதில்லை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களைத்தவிர வேறு யாருக்குமே உங்களுக்கான அமைதியைத் தரமுடியாது.
விரோதியை இன்னமும் மறக்காதவர்கள் வாழ்வின் சந்தோஷத்தை இழக்கிறார்கள்.

முக்கியம்.



நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உடையவராக இருந்தாலும் அன்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை.
நீங்கள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, உங்களிடம் இப்போது என்ன இருக்கிறது என்பதே முக்கியம்.

mercredi 4 juin 2014

உளம் கனிந்த வாழ்த்துக்கள்...!



உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த வாழ்த்துக்கள்...!