முகப்பு

vendredi 10 décembre 2010

தரம்


அரசியலுக்குப் பின்னால் கொள்கை இருக்கணும்,

கடமைக்குப் பின்னால் நேர்மை இருக்கணும்,

பணத்துக்குப் பின்னால் உழைப்பு இருக்கணும்,

அப்போதுதான் எதிலுமே தரம் இருக்கும்.

jeudi 9 décembre 2010

ஒரு நாள்


வளரும்போது அழுத்தங்கள்
வருவதைத் தவிர்க்க முடியாது,
ஆனால் முயற்சியில் தொடர்ந்து
திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள்
அழுத்தங்கள் தோற்றுப்போகும்.

mercredi 8 décembre 2010

அவள்


காதலின் சின்னம் என்ன என

கேட்டேன் அவளிடம்

கல்லறை என்றள் அவள்

கல்லறைக்கு வழி என்ன எனக்

கேட்டேன் அவளிடம்

என்னை காதலித்துபார்

என்றள் அவள்

அன்பே


என்னுள் நீ

வந்தவுடன் உணர்ந்துவிட்டேன்....

இத்தனை அழகு மிகுந்ததாக

இயற்கை இருந்தாலும்

என்றாவது ஒருநாள்

இயற்கையின் அழகு கூட மாறலாம்....

உலகத்தில் மட்டுமல்ல....

உள்ளத்திலும் என்றும்

மாறாத அழகி

அன்பே    நீ! 
 
மட்டும்தான்.......

போராடு


வளரும்போது அழுத்தங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் முயற்சியில் தொடர்ந்து திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள் அழுத்தங்கள் தோற்றுப்போகும்.
பலத்தை வைத்து பலவீனமானவர்களை தாக்கினால் அதற்க்குப்பேர் வெற்றி இல்லை பொறுக்கித்தனம். பலவீனமான மக்களுக்காகப் போராடுவதுதான் உண்மையான பலம்.

mardi 7 décembre 2010

சிந்திக்க தெரிந்த மனிதன்


சிந்திக்க தெரிந்த மனிதன்... என்றும் சிறந்தவழிஇலேயே நடப்பான்!!!!!!!

lundi 29 novembre 2010

நிலவே


தேய்ந்து விடுவோம் என்று
தெரிந்தும்
தேயும் வரை
மின்னுகிறாயே நிலவே
நீ
பெண்களின் பிரதிபலிப்பு

samedi 27 novembre 2010

வீரமறவர்களே


பிறந்த மண்ணை பாதுகாத்த

வீரமறவர்களே.. புனிதர்களே

இத்தினத்தில்

உங்களை நினைத்து

பாமாலையாக புகழ்ந்து

போற்றித் துதித்து

பணிகிறேன் உங்கள்

பாத சுவடுகளை...

கலங்கிய விழிகளுடன்

இரு கை குவித்து

வணங்குகிறேன்

vendredi 26 novembre 2010

மாவீரர்களுக்கு


தேசிய எழுச்சி…

வானத்தில் இருந்து வான்படை மலர்மாரி பொழிய

ஆகாயத்தைப் பார்த்து சிரித்த சிரிப்பு..

ஆலயங்களில் மணியோசை…

தீபங்களின் ஊர்கோலம்..

மரணித்தவனை மரியாதைப்படுத்திய இனம்

இதுபோல உலகில் எங்காவது உண்டா..

என்று மனம் கேட்கும்..

இன்று…

நாம் பிறந்த மண்ணில் நமது மாவீரர்களுக்கு

ஒரு விளக்கு வைக்கத் தடையா… ?????

mardi 23 novembre 2010


காதல் ஒரு காற்று

ஆம்!

காற்றிலே தென்றல் உண்டு

காதல் ஒரு காவியம்

ஆம்!

காவியத்திலே தியாகங்கள் உண்டு

காதல் ஒரு கற்பு

ஆம்!

கற்பிலே ஒழுக்கங்கள் உண்டு

dimanche 21 novembre 2010

முத்து


கிளைகள் எங்கு வேண்டுமானாலும் விரிந்து பரந்து நீண்டு செல்லலாம் ஆனால் வேர் புறப்பட்ட இடத்தில்தான் இருக்க வேண்டும்.

சாதாரண புழுவுக்கு சிறகு கிடைத்துவிட்டால் அது பட்டாம்பூச்சி ஆகிவிடுவதை புழுவாய் துடிக்கும் மனிதன் உணர்வதே இல்லை.

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது.
விடிந்தால் பட்டியை திறந்துவிட்டும் இருண்டால் பட்டிக்குள் போட்டு மூடும் ஆடு, மாடுகள் போல பெண்களை நடாத்தினால் அந்தக் குடும்பம் தோல்வியடையும்.
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

vendredi 19 novembre 2010

முன்னோர்


நமது முன்னோர்கள் நமக்கு நல்ல பெயரைத் தேடித்தந்தார்கள், ஆனால் நமக்கு கௌரவத்தைத் தருவது நமது நற்பண்புகள் மட்டும்தான். பண்பற்ற ஒருவன் முன்னோர் தேடிய பெருமையால் எதையும் செய்ய முடியாது.
சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.

mercredi 17 novembre 2010

வரவே வராது.


நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.
நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.

நம்பிக்கை

வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.
எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.
திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !


dimanche 14 novembre 2010

நட்பினை


"கற்பனைகளினால் நமது கனவுகள் மாறுகின்றது"

"நான் மாறலாம், ஏன் நீயும் மாறலாம்"

"இறைவன் நினைத்தாலும் மாறாதது, மாற்ற முடியாதது, நம் நட்பினை" !

"பூவின் வாசம் இந்த உலகில், ஒரு நாள் மட்டுமே வீசும்"

"ஆனால், நாம் இறந்தாலும் நம் நட்பின் வாசம், இந்த உலகில் என்றும் வீசும்" !!

நீதி



சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.
நல்ல மனிதர்கள் பொதுவாக தீமைகளுக்கு துதி பாடும் சமுதாயத்தை நம்பி வாழ்வதில்லை அதேபோல தீயவரைப் போற்றும் சமுதாயம் இரகசியமாக நல்லவர்களையே நம்பியிருப்பது தீயவருக்குத் தெரிவதுமில்லை.
உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்கு அநீதி நிகழும்போது உறங்கிக் கொண்டிருந்தால் சந்தேகமில்லை அடுத்து வரப்போவது உங்களுக்குத்தான்.



vendredi 12 novembre 2010

நன்றி மறந்த ......


ஒருவர் தனக்கு என்ன உரிமை வேண்டுமென போராடுகிறாரோ அதே உரிமையை மற்றவர்களுக்கும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும், அதுவே சுதந்திரத்திற்கான நாகரிகமாகும்.
ஒரு மரத்தில் தங்குவதும் பின் அதன் கிளையை உடைப்பதும் நன்றி மறந்த செலாகும்

நீ


உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து உன்னை மதிப்பிடுகிறாய் ஆனால் மற்றவர்கள் நீ செய்ததை வைத்து உன்னை மதிப்பிடுகிறார்கள்.
ஒரு மனிதனுடைய கால்கள் நாட்டில் ஊன்றியிருக்க வேண்டும் ஆனால் கண்கள் உலகத்தை ஆராய வேண்டும்.

தேனீ

தேனீயைப் பாராட்டுகிறோம் அதன் சுறுசுறுப்பிற்காக மட்டுமல்ல அதன் சுறுசுறுப்பு பிறருக்கும் பயன்படுவதால்தான்.

நீ சாகும்போது பணக்காரனாக இருப்பதற்காக இப்போது வறுமையில் இருப்பது பைத்தியக்காரத்தனம்.
துன்பம் என்ற பறவைகள் உங்கள் தலைக்குமேல் பறப்பதைத் தவிர்க்க முடியாது ஆனால் அது உங்கள் தலையில் கூடுகட்டுவதை தடுக்க முடியும்.

இறந்தவர்களுக்காக படும் துயரம் பைத்தியக்காரத்தனமானது. அது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சுமை, இறந்தவர்களுக்கு அது தெரியாது.

lundi 8 novembre 2010

புவி

இப்போது நாம் இங்கே ( இப்புவியில் ) இருப்பதே ஒரு பாக்கியம்தான், இதைப் புரியாமல் ஏழரைச்சனி, அட்டமத்துசனி என்று அபாக்கியவான்களாகி அழவேண்டாம். பூமியில் வாழாதவனுக்கு ஏது ஏழரைச்சனி, அட்டமத்துச் சனி.

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு சம்பவமும் நாம் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது எண்ணங்கள் எதிர்மறையானால் பயன்களும் எதிர்மறையாகும்.
உன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொறிக்குள் சிக்குப்படாதே, மற்றவர் ஒப்பிட்டால் அதற்குள் சிக்குப்படாதே.