முகப்பு

vendredi 19 juillet 2013

சுவர்க்கமாகும்.





நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.
சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.

ஓய்வு பெறுவீர்கள்.



ஆழ்ந்து சுவாசியுங்கள்… உற்சாகமாக நடக்கப்பழகுங்கள்… எளிமையாக சாப்பிடுங்கள்… அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்… ஆழமாக சிந்தியுங்கள்.. உண்மையாக நடந்து கொள்ளுங்கள் இப்படி செய்தால் உங்கள் உணர்ச்சிகள் இயற்கை நிலையடைந்து நீங்கள் பூரண ஓய்வு பெறுவீர்கள்.

lundi 20 mai 2013

புரிந்து கொண்டால்

 
 
குற்றம் கண்டு பிடிக்காதீர்கள் எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் உங்களுக்கு நண்பர்களே இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் உங்களுக்கு சகிப்புத் தன்மை வந்துவிடும். 

தவறு,

 
 
புகழ்வதால் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வருமென பெற்றோர் நினைப்பது தவறு, நல்லது செய்யக் கற்றுக் கொடுத்தால் அதன் மூலம் தன்னம்பிக்கை தானாக வளரும்.
திறமைகளை வளர்த்துக்கொள்வதாலும், விஷயங்களை கற்றுக்கொள்வதாலும்தான் ஒருவருக்கு தன்னம்பிக்கை பிறக்கிறதே தவிர வெறுமனே பாராட்டடை அள்ளி வீசுவதால் அல்ல


கொடுங்கள்.

 
 
ரொட்டித் துண்டுதானே என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள், ஒரு ரொட்டித் துண்டு உருவானதற்கு பின்னே எவ்வளவோ உழைப்பும் வியர்வையும் இருக்கிறது. ஆகவே உணவை விழுங்காதீர்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். 

அநீதியாகும்.

 
 
வருமானத்திற்கு மீறி வாழ்க்கை நடத்த வேண்டாம், அது உங்கள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நீங்கள் இழைக்கிற பெரிய அநீதியாகும்.

mercredi 15 mai 2013

வளர்ச்சியடையாதவன்.

 
 
முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்துதான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள்.
 வாழ்க்கை முழுவதும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன், தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்.

நமக்கு வேண்டும்.

 

 
கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவைத் திறப்பார். இலட்சியத்திற்காக உழைக்கும் ஒருவனை யாரும் வென்றுவிட முடியாது. தட்டாமல் கதவு திறப்பதில்லை தட்டிக்கொண்டே இருக்கும் பிடிவாதம்தான் நமக்கு வேண்டும்.

மனிதனாக

 
 
அடித்த புயலில் போட்ட தோட்டமே நாசமாகிவிட்டதென ஒருவன் அழுதான், அப்போது வழியால் வந்த முதியவர் சொன்னார் இல்லை மகனே.. கடவுள் உன்னை மனிதனாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
எதிர்ப்புக்களும் சோதனைகளும் இல்லாமல் எவரும் பலமும் ஆற்றலும் பெற்றது கிடையாது.
 துயரமே இல்லாமல் கடவுள் உலகத்தைப் படைத்திருக்க முடியும். ஆனால் அப்படிப் படைத்திருந்தால் மனிதன் வெறும் இயந்திரமாகவே இருந்திருப்பானே தவிர மனிதனாக இருந்திருக்கமாட்டான்.

நோய்க்கும்

 
 
அழிந்து போகும் செல்வத்தையே பலர் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இந்த உலகில் இருக்கின்றன என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். வெறியோடு பணத்தைச் சேர்த்து வரியைக்கட்டி, அந்தக் கவலையால் நோய்க்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

சோர்வு தானாகப் பறக்கும்.

 
 
படித்தும், கேட்டும் மகிழ்ந்த நல்ல விடயங்களை குறிப்பாக எழுதி வையுங்கள், மனம் சோர்வாக இருக்கும்போது அதை மறுபடியும் எடுத்துப் படியுங்கள் சோர்வு தானாகப் பறக்கும்.

பயனைக் கொடுத்தது.

 
 
ஓர் எழுத்தாளன் தன் எழுத்துக்களில் நம்பிக்கை இல்லாமல் எழுதுவதில் பெரும்பகுதியை குப்பைக் கூடையில் கசக்கி எறிந்தான், ஒரு நாள் அவன் வறுமையால் இறந்துவிட்டான். அவனுடைய கடசங்கிய கடதாசிகளை சேகரித்து வைத்த பெண் அதை நூலாக்கி பெரும் பணக்காரியானாள். நம்பிக்கை இல்லாதவனுக்கு எழுதியும் கிடைக்காத பயன் நம்பிக்கை உள்ளவளுக்கோ எழுதாமலே பயனைக் கொடுத்தது.
 
 
உன்னையே நீயறிவாய் என்று கிரேக்கர் சொன்னார்கள்..
உன்னையே நீ ஆள்வாய் என்றார்கள் ரோமானியர்கள்..
உன்னை நீ சிறப்பாக்கிக் கொள் என்றார்கள் சீனர்கள்..
நான் என்பதை அழித்துக் கொள் என்றது பௌத்தம்..
பிரபஞ்சத்தோடு உன்னை ஐக்கியப்படுத்து என்றது இந்து மதம்..
சேவைக்கு உன்னை அர்ப்பணி என்றது இஸ்லாம்..
சமாதானத்தையே கொள்கையாக கொள் என்கிறது நவீன உலகு..
ஆனால் கடவுள் சொல்கிறார்..
என் மீது நம்பிக்கை வை.. என்னை விட்டு நீ எதையும் செய்ய முடியாது..
 கடவுளின் துணையுடன் நம்மால் எதையும் செய்ய முடியும்.

jeudi 9 mai 2013

 
 
சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.
ஒரு மனிதனிடம...் என்னென்ன சொத்து இருக்கிறது என்பது சந்தோஷமல்ல அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷமாகும்.
பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
 

முயற்சியில்லாத மனிதன்.

 
 
ஒருவர் செய்த தியாகம், தளராத முயற்சிகள், விடாது பற்றிக் கொண்ட நம்பிக்கைகள், தங்கள் இதயக்கனவை நிறைவேற்ற கடந்த இருளான வழிகள், வலிகள் போன்றவற்றை பார்க்காது அவருடைய வெற்றியை மட்டுமே பார்க்கிறது உலகம். அதுபோல தனக்கும் அதிர்ஷ்டம் வராதா என்று கிரகத்தை பார்க்கிறான் முயற்சியில்லாத மனிதன்.

தாமதமாகிவிடலாம்.

 
 
மன்னியுங்கள், மறந்துவிடுங்கள், உங்கள் தவறுகளை மற்றவர்கள் எப்படி மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களை மன்னியுங்கள். பொறுமையோடும் புரிதலோடும் இருங்கள் விரோதம் பாராட்டவோ பழிவாங்கவோ நேரமில்லை வாழ்க்கை குறுகியது.
வாழ்க்கை குறுகியது, நம் பகைமையை தொந்தரவுகளை மறக்க வேண்டும். இன்னும் காலம் இருக்கும்போதே மறக்க, மன்னிக்க வேண்டும். சண்டையை நிறுத்த காத்திருக்காதீர்கள். அன்பான வார்த்தையை சொல்ல அன்பான செயலை செய்ய காத்திருக்காதீர்கள். காலம் குறுகியது நாளை மிகவும் தாமதமாகிவிடலாம்.

சந்தோஷத்தை இழந்துவிடாதே.

 
 
உனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழந்துவிடாதே.. ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்த வளைவு.
 ஒவ்வொரு வருடமாக வாழ்வை வாழ்..
எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன் இரு
இலட்சியத்தை விட்டு விலகாதே
பயணம் கரடு முரடாக அல்லது வழுவழுப்பாக இருக்கட்டும்
நீ மட்டும் சந்தோஷத்தை இழந்துவிடாதே.

அளக்கப்படுகிறது.

 
 
ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.

இன்னொரு பிறவி

 
 
இந்தப்பிறவியில் நம்மை நேசிப்பவரை அறிந்து அன்பு செய்யாவிட்டால் நமக்கு இன்னொரு பிறவி இருந்து என்ன பயன் ? 

இதயத்தில்

 
 
இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது. 

சந்தோஷங்கள் மாறுவதில்லை.

 
கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்க...ள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.
வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.
 

உண்மை உங்களுக்கு

 
 
கோழைகள் இறப்பதற்கு முன்பே பல தடவைகள் இறந்துவிடுகிறார்கள் ஆனால் வீரன் ஒருதடவைதான் இறக்கிறான். மரணம் ஒரு தேவையான முடிவுதான் எப்போது வரவேண்டுமோ அப்போது வந்துவிடும். அந்த அழைப்பு ஒன்றுமட்டுமே நிராகரிக்க முடியாத அழைப்பாகும்.
கால வெளியில் ஒரு கண...த்திற்கும் குறைவானது நம் வாழ்க்கை. அது பசுமையானது, வசந்தமானது, மிக சுருக்கமானது, ஒரு நாள் கல்லை உதைத்தவுடன் அதன் அடியில் இருந்து பறக்கும் பூச்சி போல பறந்துவிடும்.
உலகில் உயிருடன் வலம்வரும் அனைவரும் பூமிக்கு அடியில் உறங்குவோருடன் ஒப்பிட்டால் மிகவும் ஒரு சிலர்தான். இயற்கையின் போதனையை அமைதியாகக் கேட்டால் இந்த உண்மை உங்களுக்கு அழகாக விளங்கும்.
 

mercredi 8 mai 2013

நிச்சயமானது, நம்பகமானது

 
 
வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்பதைவிட நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்தவர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறு செய்யாமல் இருப்பவர்கள் துன்பங்களில் சிக்குப்படமாட்டார்கள். நிச்சயமற்ற இந்த உலகில் மனித அனுவம் என்ற கடந்த காலச் சரித்திரமே நமக்கு தெரிந்தவற்றிலேயே நிச்சயமானது, நம்பகமானது

திரும்பப் பெற முடியாது.

 
 
எய்த அம்பு.. வீணாகக் கழித்த காலம்.. தப்பான சொற்கள் ஆகிய மூன்றும் திரும்பி வர முடியாதவை. இவை மூன்றும்; அம்பு போன்றவை, எய்துவிட்டால் திரும்பப் பெற முடியாது. 

சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்

 
 
வாழ்க்கை என்பது கோடுகளால் கட்டங்கள் போடப்பட்ட மாயப் பெட்டி ஒன்றுக்குள் ஓடுவதைப் போன்றது. நடு வழியில் சரியான பாதை எதுவென்று தெரியாத குழப்பம் ஏற்படும். அதைப்பார்த்து பயணத்தை நிறுத்திவிடாதே.. தொடர்ந்து நட ஒரு கட்டத்தில் சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்..

தீமை தரும் வார்த்தை



 
 
உங்களைப் பார்த்தால் முதுமையாக இருக்கிறது.. அடடா நோயாளியாக மாறிவிட்டீர்கள் என்று மோசமான கருத்துக்களை மற்றவர்களை நோக்கி துப்பக்கூடாது. குப்பைத் தொட்டிக்குள் போடும் அருவருப்பான வார்த்தைகளை மற்றவரை நோக்கி உழிழக்கூடாது. அப்படிச் செய்தால் பாதிக்கப்படுபவரை விட உங்கள் மனமே அழுக்குக் கூடையாகும்.
 மற்றவர்களை நோக்கி தகாத தூஷண வார்த்தைகளை சொல்லித் திட்டிய எவரும் தன்னளவில் நலமாக இருந்தாக சரித்திரம் கிடையாது. ஆகவே நல்ல வார்த்தைகளை பேசுங்கள் நீங்கள் நல்லவர்களாக மாறுவீர்கள். நாகாஸ்திரம் என்பது நாக்கில் இருந்து வரும் நஞ்சு தடவிய வார்த்தைகளே என்பதை உணர வேண்டும்.
 தீமை தரும் வார்த்தைகளை ஒரு காலமும் உணர்ச்சி வசப்பட்டு சொல்லக்கூடாது, சொன்னால் இதயத்தின் ஆழத்தில் விழுந்து அது தீமைகளை விளைவிக்கும்.

வெற்றிகரமான வாழ்க்கை

 
 
நல்ல பெயர்கள் நம்முடைய வாழ்க்கையை வழி நடாத்துகின்றன.. மக்கள் திலகம் என்ற பெயர் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராக்கியது, நடிகர் திலகம் என்ற பெயர் சிவாஜியை ஆசிய – ஆபிரிக்க சிறந்த நடிகராக்கியது. காந்தி என்ற பெயர் காந்தம் போல மக்களை கவர்ந்து இந்திய சு...தந்திரத்தையே பெற்றுக் கொடுத்தது..

கம்பன் என்ற பெயருக்குள் கம்பராமாயணமே இருக்கிறது..
வள்ளுவன் என்ற பெயருக்குள் திருக்குறளே இருக்கிறது..
இளங்கோவடிகள் என்ற பெயரில் சிலப்பதிகாரம் இருக்கிறது..
ஒளவை என்ற பெயருக்குள் பெண் அறிஞர் இருக்கிறார்..
பிரபாகரன் என்ற பெயருக்குள் உலகப் புகழ்பெற்ற தன்மான வீரன் இருக்கிறான்..
இவைகள் வெறும் பெயர்கள் அல்ல வெற்றிகரமான வாழ்க்கை


மன வளர்ச்சியை பாதிக்கும்.

 
 
குறை கூறுதல், கேலி செய்தல், குழந்தைகளை அதட்டுதல், குட்டுதல், அவர்களுக்கு மதிப்பளிக்காதிருத்தல் போன்ற கொடுஞ் செயல்களை செய்ய வேண்டாம் அது குழந்தைகளின் மன வளர்ச்சியை பாதிக்கும்.

mardi 7 mai 2013

குறை

 
 
ஒருவரிடம் எந்தக் குறையைக் காண்கிறீர்களோ, அந்தக் குறை உங்களிடம் இல்லையா என்று சோதித்துப் பாருங்கள். அப்போது உங்களிடம் உள்ள குறைகள் என்னவென்பது உங்களுக்கு தானாகவே விளங்கிவிடும்.

mercredi 1 mai 2013

அன்பு


 
எல்லோரையும் மனம் கனிந்து வாழ்த்த வேண்டும். மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும். அன்பு இல்லையெனில் வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.

உணர்வே

 
 
நம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியும், அவர்களுடைய குற்றம் குறைகளை பட்டியல் போடுவோம் ஆனால் நம்மிடம் உள்ள குறைகளைப்பற்றிய உணர்வே நம்மிடம் இருப்பதில்லை.

சிந்திக்கப் பழக வேண்டும்.

 
 
ரயில் தண்டவாளத்தில் சிக்குப்பட்டுவிட்டான் ஒருவன். நள்ளிரவு நேரம்..! காப்பாற்ற எவரும் வரவில்லை. தூரத்தே ரயில் வண்டி வருகிறது. மரணம் ஏறத்தாழ நிச்சயமாகிவிட்டது. என்ன செய்யலாம்.. பாக்கட்டை பார்த்தான் சிகரட் கொழுத்தும் லைட்டர் மட்டும் இருந்தது. ...அதை கொழுத்தி கையில் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினான்… யாரோ நிற்பது தெரிந்து ரயில் நின்றது. சிகரட் பற்ற மட்டும் பயன்படும் என்ற லைட்டரின் பாவனையை மாற்றி சிந்தித்த காரணத்தால் அவன் உயிர் தப்பியது. ஆகவே எப்போதும் மாற்றி சிந்திக்கப் பழக வேண்டும்.

மலர்த்தோட்டமாக மாறும்

 
 
அன்பைக் கொடுத்தவர்கள் தோற்றதில்லை,
ஆறுதலைக் கொடுத்தவர்கள் இழந்ததில்லை,
மன்னிப்பைக் கொடுத்தவர்கள் துன்புற்றதில்லை,
புரிந்து கொண்டவர்கள் சண்டையிட்டதில்லை,
நேசித்தவர்கள் நஷ்டப்பட்டதில்லை.
இதைத் தொடர்ந்து சொன்னால் ஆறுதல், நேசம், புரிதல், மன்னிப்பு, அமைதி, அன்பு, மனத்தெளிவு, நம்பிக்கை ஆகிய வளமைகள் நம்மிடம் சேரும்.
நல்ல மன உணர்வுகள் என்ற வளமைகள் மலர்ந்தால் நாம் வாழும் இடம் மலர்த்தோட்டமாக மாறும்.

அவர்களின் ஊதியத்தை கொடுத்திடுங்கள்…

 
 
ஏழை உழைப்பாளர்கள் உழைத்துகொண்டே தான்
இருக்கிறார்கள்…
ஆனால்
ஊதியம் மட்டும் மிஞ்சுவதேயில்ல…!
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தது உடல்
அதில் மிஞ்சும் காசுக்கு
...தேய்ந்த உடலை தேத்தக் கூட முடிவதில்லை..!
உழைப்பாளர்களை காணும்போது உற்று கவனியுங்கள்…
அவர்கள் உடலின் ஒவ்வொரு
எலும்பிலும் ஏக்கம் தெரியும்…
எத்தனை உழைத்தபோதும் இந்த
எலும்பு மட்டுமே மிஞ்சுகிறது; என,
உழைப்பவர்களுக்கு அவர்கள்
வியர்வை உலர்ந்து விடுவதற்குள்
அவர்களின் ஊதியத்தை கொடுத்திடுங்கள்…

 

lundi 15 avril 2013

நல்லதையே நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

 
 
நமது நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள்.அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள்.

நமது பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒர...ு ராசிபலன் வைத்திருக்கிறார்கள்.

1. ஞாயிறு-நாய் படாத பாடு:

சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் அதனை கடுமையாக அடித்துப் போட்டாலோ சீக்கிரத்திலேயே இறந்துவிடும்.ஆனால் நாய்கள் அப்படியில்லை.நான்கு கால்களையும் இழந்த நாய் கூட ஊர்ந்து சென்றாவது தன் உணவைத் தேடிக்கொள்ளும்.

அடிப்பட்டு முகத்தையே இழந்த நாய்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.அதாவது நாய்களுக்கு அடிப்பட்டாலோ அல்லது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவைகள் சீக்கிரத்தில் சாவதில்லை.

“நாய் பட்ட பாடு” என்றால் அவை சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்பப்படுவதுதான்.”நாய் படாத பாடு” என்றால் அவைகள் பட்ட துன்பங்களையும் தாண்டியது.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் ஒரு காரியத்தை தொடங்கினால் குறிப்பாக திருமணம் செய்துகொண்டால் “நாய் படாத பாடு” என்பது ஐதீகம்.

2. திங்கட்கிழமை:

திங்கட்கிழமை பொதுவாக நல்ல நாளும் இல்லை கெட்ட நாளும் இல்லை.சுபமுகூர்த்த நாளாக இருந்தால் நல்ல நாள்.அவ்வளவுதான்.இது நமக்கு அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

3. செவ்வாய்-வெறும் வாய்:

செவ்வாய் கிழமைகளில் முதன்முதலில் ஒரு கரியத்தைத் துவக்கினால் அந்த காரியத்தால் நமக்கு எந்த அனுகூலமும் இல்லை.குறிப்பாக தொழில் தொடங்கவே கூடாது.

4. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது:

அதாவது புதன் கிழமையை வீணடிக்கக் கூடாது.நல்ல காரியங்களை புதன் கிழமைகளில் துணிந்து செய்யலாம்.

5. வியாழன்-விருந்து என்று கூட மருந்து சாப்பிடக் கூடாது:

வியாழனில் வைத்தியம் பார்த்தால் அந்த நோய் குணமாவது கடினம் என்பது ஐதீகம்.

6. மங்கள வெள்ளி:

வெள்ளிக் கிழமைகளில் செய்யும் காரியம் மங்களகரமாக முடியும்.கடுமையான வேலைகள் கூட எளிமையாக முடியும்.விடியாத காரியம் கூட விடியும்.

7. சனி போனால் தனியாக போகாது:

சனிக் கிழமைகளில் யாரேனும் இறந்தால் விரைவிலையே அவரின் குடும்பத்தில் வேறு ஒருவர் இறப்பார்.இவ்வாறாக ஒரு நம்பிக்கை உண்டு.சனிக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கிளம்பி சென்றால் விபத்துகள் ஏற்படலாம்.




இவ்வாறாக ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ராசிபலன் உள்ளது.இவைகள் முன்னோர்களின் ஐதீகங்கள்.ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாட்களை வீணடிக்காதீர்கள்.

"நலிந்தவனுக்கு நாள் கிழமை கிடையாது" என்பது பழமொழி.நலிந்தவன் என்பவன் இறைவனுக்கு முன் தன்னையே வெறுமையாக்கிக் கொள்பவன்.இறை நம்பிக்கை இருந்தால் எந்நாளையும் நல்ல நாளாக மாற்றலாம்.

நல்லவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளே.நாம் ஒரு செயலை செய்யும்போது நல்லதையே நினைத்து செய்யும்போது நல்லதே நடக்கும்.ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரமாகவே இருக்கும்.

நல்லதையே நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

 

மூத்த குடி

 
 
கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.


கண்களை பத்திரமா பார்த்துக்கோ

 
 
 
ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.

அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .

அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .

... ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .

அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ?

அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
" என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ "


vendredi 12 avril 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
 
நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்குகொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! -


lundi 8 avril 2013

யோகி.

 
 
தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
...பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.
 

பழமொழி

 
 
பழமொழி

ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும்.
அதாவது நம் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை க...ொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால் அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.
 

நாளை சந்திப்போம்

 
 
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளாய்
இருந்தால் மண்ணில் வீழ்ந்து மடிவதை எண்ணி
வருந்தலாம்................
ஆனால்
விருட்சத்திலிருந்து விழும் முற்றிய விதைகள் நாம்...
மூடி வைத்தாலும் மண்ணை முட்டி முளைப்போம்
இன்று பிரிந்தாலும்...... நாளை சந்திப்போம்......


உரிமை!!

உரிமை!!
மலரிடம் சொன்னது முள்
பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய…
எனக்கு மட்டுமே
உரிமை உண்டு
உன்னை காக்க…! 

mercredi 3 avril 2013

முத்தம்..!!

 
இயற்கை எனக்கென எழுதிய நிலையான சொத்து
அம்மா..!!
அம்மா எனக்கென எழுதிய உயிருள்ள உணர்வு
முத்தம்..!!


காத்திருக்கும்!

 
 
கொண்டு செல்ல
எதுவும் இல்லை
உலகில்...
கொடுத்து செல்ல
எல்லாம் உள்ளது
உடலில்.
... காலம் காத்திருப்பதில்லை
ஆனால் நம்மை
நேசிக்கும் உண்மையான
இதயம் நமக்காக
நிச்சயம் காத்திருக்கும்!

 

பூவாக மலர

 
 
பூவாக மலர
வாய்ப்புக்கள்
இருக்கும் போது
ரோஜாவாக மலருங்கள்
எருக்கம் பூவாக அல்ல


கண்களுக்கு...

 

 
மெளனமாக தான்
அழுகின்றேன்
ஆனாலும்,
எப்படியோ தெரிந்துவிடுகிறது !
என்
கண்களுக்கு...


ஜெயித்து விடலாம்

 
 
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.


கண்ணீரை ஏற்படுத்தும்

 
 
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.