முகப்பு

dimanche 26 décembre 2010

ஏணி


ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித்து தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால் தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.






படிக்கட்டு


சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.




முடியாது.


பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.

samedi 25 décembre 2010

நத்தார் தின வாழ்த்துக்கள்...


உங்கள் அனைவருக்கும் குழந்தை ஜேசுவின் இனியதும் இன்பமும் சந்தோசமும் சமாதானமும் அமைதியும் நிறைந்த நத்தார் தின வாழ்த்துக்கள்...

jeudi 23 décembre 2010

கருவறை


முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:-

மகனே!

நீ இருக்க

ஒரு கருவறை இருந்தது

என் வயிற்றில்.......

நான் இருக்க ஒரு

இருட்டறை கூடவா இல்லை

உன் வீட்டில்........

மகஜர்


மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மாபரனுக்கு

யான் எழுதும் மகஜர்

மகஜர் எழுதவெனப் பேனாவை எடுத்தேன்

எதை எழுதுவேன் எனும் சிந்தையில் ஆழ்ந்தேன்

காதைப் பிளக்கும் குண்டு மழையைப் பற்றியா?

கோரத் தாண்டவமாடும் இயற்கை அனர்த்தம் பற்றியா?

தொடர்ந்துகொண்டே செல்லும் படுகொலைகளையா?

நீண்டு செல்லும் காணாமலாக்கப்பட்டோர் பட்டியலையா?

எதைப்பற்றித் தான் எழுதுவேன்?



உறவுகளைப் பிரிந்து அவ தைப்படும் உள்ளங்களையா?

பொருளாதாரத் தடைபற்றியா?

பொருட்களின் விலையேற்றம் பற்றியா?

அலரி விதைக்குப் பலியாகிய கொடுமையையா?

அழிவுப் பாதையில் செல்லும் கல்வி நிலை பற்றியா?

முடக்கப்படும் உரிமைக்குரல்கள் பற்றியா?

மறைமுகமான அச்சுறுத்தல் பற்றியா?

மொத்தத்தில் தொலைந்து போகும் மனிதத்தையா?

எதை எழுதுவேன் என் மாபரனுக்கு




மார்கழிக் குளிரில் மாட்டுத்தொழுவத்திலே

மாமரி மடியினிலே மங்கையர் வயிற்றினிலே

மன்னவன் பிறந்திட்டான்

மண்ணில் வேந்தனாய் மக்கள் மத்தியில்

மானிடர் பாவம் போக்க மமதையை மறந்திட

மலர்ந்திடும் சமாதானத்தை தந்திடவே

மன்னவன் பிறந்திட்டான்

மணம் வீசும் தூபத்துடன் மன்னர்கள் சூழ்ந்திடவே

மண்ணுலகில் ஒளி பிறந்திடவே

மானிடர் அனைவரும் சந்தோசத்தில் திழைத்திடவே

மன்னவன் பிறந்திட்டான்

மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியொன்றாம்

மண்ணின் வேந்தன் விண்ணில் ராஜன்

மனுக்குலத்தை மீட்டெடுக்க மாபரன் இயேசு பாலன்

மாமரி மடியில் பிறந்திட்டான்

இல்லத்தரசி


என்னவளே

உன்னை நான் பார்க்க நினைக்கையில்

பகலாய்...

உன்னுடன் பேச நினைக்கையில்

நிலவாய்...

உன்னுடன் உறங்க நினைக்கையில்

கனவாய்.....

உன்னை நான் தொட நினைக்கையில்

தென்றலாக மாறுகிறாய்

என் காலமெல்லாம் நீ

வருவாயா?

 

காதல்



காற்று வந்தால் தலை சாயும் நாணல்

காதல் வந்தால் தலை சாயும் நாணம்

ஒருவர் மட்டும் படிப்பது தான் வேதம்

இருவரும் சேர்ந்து படிப்பது தான் காதல்

மழை வரும் முன் வானத்தை மூடும் மேகம்

காதல் வந்து மனத்தை மூடும் மோகம்

அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம்

அச்சத்தால் அஞ்சி சிவக்கும் கன்னம்

உயிரே


உயிரே

உன்னோடு நானில்லை

உன் நினைவோடு நானுண்டு

உன் கண்களில் நானில்லை

என் கனவுகளில் நீயுண்டு

நீ உயிர் வாழும் வரை

உன் உறவு வேரொருவனோடு

நான் உயிர் வாழும் வரை

என் உறவு உன்னோடு

lundi 20 décembre 2010

தெரியாது


ஒருவனுடைய செருப்பு அறுந்துவிட்டது. அவன் அதை மறைக்க ஓர் உயாயம் செய்தான். அறுந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டே, டே..! உன்னை விடமாட்டேன்டா ! என்றபடி வேகமாக ஓடினான். அவன் யாரை விரட்டுகிறான் என்பதைப் பார்க்க சிலர் அவன் பின்னால் ஓடினார்கள். அவர்கள் பின்னால் ஓடாவிட்டால் நம்மைக் குறை நினைப்பார்களே என்று எஞ்சியவரும் ஓடினார்கள். கடைசியில் செருப்பு அறுந்தவனுக்குப் பின்னால் ஊரே ஓடியது. இப்படி ஏன் ஓடுகிறோமெனத் தெரியாது செருப்பறுந்தவனுக்கு பின்னால் ஓடும் கூட்டமே நம்மில் அதிகம்.






கல்வியின் அடிப்படை


குரங்கு தன் குட்டியை மடியில் காவிச் செல்லும். மடியை விட்டு இறங்கிய குட்டி தாயின் செயல்களை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய் பாயும் போது சரியாகப் பாய்ந்து அதன் வயிற்றைப் பற்ற வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் குரங்கு குட்டியை மறுபடியும் வயிற்றில் ஏற அனுமதிக்காது. கவனத்தை குலையாமல் வைத்திருப்பதுதான் கல்வியின் அடிப்படை என்பது குரங்குகள் சொல்லும் உண்மையாகும்.

நிகழ்ந்தது என்ன என்னுள்?

மின்னலாய் வந்தவள் நீதானே..

மீளாமல் தவிக்கிறேன் உன்னாலே.

மறந்தேன்..என்னை

 உன் நினைவில் மிதந்தேன்.





உயிரை


என் உள்ளத்து உணர்வுகளை

தொலைத்தேன் .....உருவம்

தெரிந்த போது என் உயிரையே

தொலைக்க துடிக்கிறேன் ..

jeudi 16 décembre 2010

பிறப்பாயோ இயேசு பாலா


பிறப்பாயோ இயேசு பாலா

வார்த்தையுமே மனுவுருவாய் - வாழ்வின்
இருளகற்றும் ஒளிப்பிளம்பாய்
அருள் மழை பொழியும் இறைமகனாய் - மானிடர்
இடர் நீக்கும் அருட்பொழிவாய்
பொங்கும் மனம் அமைதிபெற
கொதிக்கும் உள்ளம் குளிரடைய
கதிரவனாய் கார்முகிலாய்
அருள்பொழியும் அருளூற்றாய்
அவதரித்தார் இவ்வுலகில் கிறிஸ்து என்னும் யேசுபாலன்

போரினாலே புலம் பெயர்ந்து - வாழ்வில்
போற்றிச் சேர்த்த பொருழிழந்து
அசைந்தாடிய அங்கமிழந்து
அங்கவீனராய் அவலமுற்று
அகதிகளாய் அநாதைகளாய் - எம்மண்ணில்
அவலத்தோடு அமைதியிழந்து
வரட்சியுற்ற உள்ளங்களில் பிறப்பாயோ இயேசு பாலா?

உடலிழந்து உறவிழந்து
உண்மையிலே உயிர் இழந்து
உலகமயமாக்கலிலே உண்மை வாழ்வின் பொருளிழந்து
நாகரீகமென்னும் நாமத்திலே நாளுக்கு நாள்
நன்மை தரும் உண்மைகளை பொய்மையினால் அலங்கரித்து
நடைப்பிணமாய் நலமிழந்து வாழுகின்ற எம் மண்ணில்
நலமிகவே பொழிந்து நீயும் பிறப்பாயோ இயேசு பாலா?


யாவருமே சோதரராய் -மண்ணில்
யார் குலமும் ஓர் குலமாய்
ஓர் உலகம் ஓர் குடும்பம் ஆகிடவே
ஒற்றுமையின் கூரையின் கீழ் வாழ்ந்திடவே
வேற்றுமைகள் இல்லை எம்மில் -இனியும்
வேதனையின் நாமம் இல்லை
ஒருமித்து மகிழ்வுறவே, ஒன்றித்து வாழ்ந்திடவே
ஒற்றுமையின் ஒன்றிப்பால் - உலகில்
இறையாட்சி மலர்ந்திடவே
வந்துநீயும் பிறப்பாயோ இயேசு பாலா

நன்றி.....

கவிதை


கவிதை என்பது
எந்த எழுத்து
போனாலும்
கரு இருப்பதே
கவிதை
க போனால் விதை
வி போனால் கதை
தை போனால் கவி

துயற்கொள்ள ஆளுன்டோ


இனிமையாக முடிந்துவிட்டால்

இனைந்து மகிழ ஆள் உண்டு

துன்பமென்று மாறி

துக்கமென்று முடிந்துவிட்டால்

துயற்கொள்ள ஆளுன்டோ ???

mardi 14 décembre 2010

பொருள்.


பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.

சும்மா இருப்பவன்


பிணங்கள் நீரில் தாழ்ந்துவிடும், ஆனால் உயிருடன் இருப்பவன் நீந்திக் கரைசேருவான். போராடுபவனே கரை சேர முடியும் என்பது இதன் அர்த்தமாகும், பிணம்போல சும்மா இருப்பவன் பிணம்போல தாழ்ந்து போக வேண்டியதுதான்.

lundi 13 décembre 2010

வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.


மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டுமாயின் அன்பு உன் அன்னை, அறிவு உன் தந்தை, அறம் உன் சகோதரன், பொறுமை உன் மனைவி, பண்பு உன் மகள், ஆண்மை உன் மகன் என்று கருதி, இவைகளை ஒரு குடும்பமாக உருவமைத்து, இந்தக் குடும்பத்துடன் ஒன்றுபட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

vendredi 10 décembre 2010

ராசி


முழு மனதோடு நம்புகிற ஒரு காரியத்தை துணிந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறுக்குவழி தெரிந்தால் மட்டுமே ஜெயிக்கலாம் என்ற எண்ணம் தப்பானது.
நேர்மையா தொழில் செய்தால் எல்லா ராசியும் நல்ல ராசிதான்.

முயற்சி


முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

தரம்


அரசியலுக்குப் பின்னால் கொள்கை இருக்கணும்,

கடமைக்குப் பின்னால் நேர்மை இருக்கணும்,

பணத்துக்குப் பின்னால் உழைப்பு இருக்கணும்,

அப்போதுதான் எதிலுமே தரம் இருக்கும்.

jeudi 9 décembre 2010

ஒரு நாள்


வளரும்போது அழுத்தங்கள்
வருவதைத் தவிர்க்க முடியாது,
ஆனால் முயற்சியில் தொடர்ந்து
திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள்
அழுத்தங்கள் தோற்றுப்போகும்.

mercredi 8 décembre 2010

அவள்


காதலின் சின்னம் என்ன என

கேட்டேன் அவளிடம்

கல்லறை என்றள் அவள்

கல்லறைக்கு வழி என்ன எனக்

கேட்டேன் அவளிடம்

என்னை காதலித்துபார்

என்றள் அவள்

அன்பே


என்னுள் நீ

வந்தவுடன் உணர்ந்துவிட்டேன்....

இத்தனை அழகு மிகுந்ததாக

இயற்கை இருந்தாலும்

என்றாவது ஒருநாள்

இயற்கையின் அழகு கூட மாறலாம்....

உலகத்தில் மட்டுமல்ல....

உள்ளத்திலும் என்றும்

மாறாத அழகி

அன்பே    நீ! 
 
மட்டும்தான்.......

போராடு


வளரும்போது அழுத்தங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் முயற்சியில் தொடர்ந்து திருத்தங்கள் இருந்தால் ஒரு நாள் அழுத்தங்கள் தோற்றுப்போகும்.
பலத்தை வைத்து பலவீனமானவர்களை தாக்கினால் அதற்க்குப்பேர் வெற்றி இல்லை பொறுக்கித்தனம். பலவீனமான மக்களுக்காகப் போராடுவதுதான் உண்மையான பலம்.

mardi 7 décembre 2010

சிந்திக்க தெரிந்த மனிதன்


சிந்திக்க தெரிந்த மனிதன்... என்றும் சிறந்தவழிஇலேயே நடப்பான்!!!!!!!

lundi 29 novembre 2010

நிலவே


தேய்ந்து விடுவோம் என்று
தெரிந்தும்
தேயும் வரை
மின்னுகிறாயே நிலவே
நீ
பெண்களின் பிரதிபலிப்பு

samedi 27 novembre 2010

வீரமறவர்களே


பிறந்த மண்ணை பாதுகாத்த

வீரமறவர்களே.. புனிதர்களே

இத்தினத்தில்

உங்களை நினைத்து

பாமாலையாக புகழ்ந்து

போற்றித் துதித்து

பணிகிறேன் உங்கள்

பாத சுவடுகளை...

கலங்கிய விழிகளுடன்

இரு கை குவித்து

வணங்குகிறேன்

vendredi 26 novembre 2010

மாவீரர்களுக்கு


தேசிய எழுச்சி…

வானத்தில் இருந்து வான்படை மலர்மாரி பொழிய

ஆகாயத்தைப் பார்த்து சிரித்த சிரிப்பு..

ஆலயங்களில் மணியோசை…

தீபங்களின் ஊர்கோலம்..

மரணித்தவனை மரியாதைப்படுத்திய இனம்

இதுபோல உலகில் எங்காவது உண்டா..

என்று மனம் கேட்கும்..

இன்று…

நாம் பிறந்த மண்ணில் நமது மாவீரர்களுக்கு

ஒரு விளக்கு வைக்கத் தடையா… ?????

mardi 23 novembre 2010


காதல் ஒரு காற்று

ஆம்!

காற்றிலே தென்றல் உண்டு

காதல் ஒரு காவியம்

ஆம்!

காவியத்திலே தியாகங்கள் உண்டு

காதல் ஒரு கற்பு

ஆம்!

கற்பிலே ஒழுக்கங்கள் உண்டு

dimanche 21 novembre 2010

முத்து


கிளைகள் எங்கு வேண்டுமானாலும் விரிந்து பரந்து நீண்டு செல்லலாம் ஆனால் வேர் புறப்பட்ட இடத்தில்தான் இருக்க வேண்டும்.

சாதாரண புழுவுக்கு சிறகு கிடைத்துவிட்டால் அது பட்டாம்பூச்சி ஆகிவிடுவதை புழுவாய் துடிக்கும் மனிதன் உணர்வதே இல்லை.

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது.
விடிந்தால் பட்டியை திறந்துவிட்டும் இருண்டால் பட்டிக்குள் போட்டு மூடும் ஆடு, மாடுகள் போல பெண்களை நடாத்தினால் அந்தக் குடும்பம் தோல்வியடையும்.
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

vendredi 19 novembre 2010

முன்னோர்


நமது முன்னோர்கள் நமக்கு நல்ல பெயரைத் தேடித்தந்தார்கள், ஆனால் நமக்கு கௌரவத்தைத் தருவது நமது நற்பண்புகள் மட்டும்தான். பண்பற்ற ஒருவன் முன்னோர் தேடிய பெருமையால் எதையும் செய்ய முடியாது.
சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.

mercredi 17 novembre 2010

வரவே வராது.


நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.
நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.

நம்பிக்கை

வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.
எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.
திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !


dimanche 14 novembre 2010

நட்பினை


"கற்பனைகளினால் நமது கனவுகள் மாறுகின்றது"

"நான் மாறலாம், ஏன் நீயும் மாறலாம்"

"இறைவன் நினைத்தாலும் மாறாதது, மாற்ற முடியாதது, நம் நட்பினை" !

"பூவின் வாசம் இந்த உலகில், ஒரு நாள் மட்டுமே வீசும்"

"ஆனால், நாம் இறந்தாலும் நம் நட்பின் வாசம், இந்த உலகில் என்றும் வீசும்" !!

நீதி



சிறு நீரோடைகள் ஒன்றிணைந்து நதியாகும், அதுபோலத்தான் பலருடைய சுய பரித்தியாகங்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை துடிப்புடன் இயங்க வைக்கும்.
நல்ல மனிதர்கள் பொதுவாக தீமைகளுக்கு துதி பாடும் சமுதாயத்தை நம்பி வாழ்வதில்லை அதேபோல தீயவரைப் போற்றும் சமுதாயம் இரகசியமாக நல்லவர்களையே நம்பியிருப்பது தீயவருக்குத் தெரிவதுமில்லை.
உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்கு அநீதி நிகழும்போது உறங்கிக் கொண்டிருந்தால் சந்தேகமில்லை அடுத்து வரப்போவது உங்களுக்குத்தான்.



vendredi 12 novembre 2010

நன்றி மறந்த ......


ஒருவர் தனக்கு என்ன உரிமை வேண்டுமென போராடுகிறாரோ அதே உரிமையை மற்றவர்களுக்கும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும், அதுவே சுதந்திரத்திற்கான நாகரிகமாகும்.
ஒரு மரத்தில் தங்குவதும் பின் அதன் கிளையை உடைப்பதும் நன்றி மறந்த செலாகும்

நீ


உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து உன்னை மதிப்பிடுகிறாய் ஆனால் மற்றவர்கள் நீ செய்ததை வைத்து உன்னை மதிப்பிடுகிறார்கள்.
ஒரு மனிதனுடைய கால்கள் நாட்டில் ஊன்றியிருக்க வேண்டும் ஆனால் கண்கள் உலகத்தை ஆராய வேண்டும்.

தேனீ

தேனீயைப் பாராட்டுகிறோம் அதன் சுறுசுறுப்பிற்காக மட்டுமல்ல அதன் சுறுசுறுப்பு பிறருக்கும் பயன்படுவதால்தான்.

நீ சாகும்போது பணக்காரனாக இருப்பதற்காக இப்போது வறுமையில் இருப்பது பைத்தியக்காரத்தனம்.
துன்பம் என்ற பறவைகள் உங்கள் தலைக்குமேல் பறப்பதைத் தவிர்க்க முடியாது ஆனால் அது உங்கள் தலையில் கூடுகட்டுவதை தடுக்க முடியும்.

இறந்தவர்களுக்காக படும் துயரம் பைத்தியக்காரத்தனமானது. அது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சுமை, இறந்தவர்களுக்கு அது தெரியாது.

lundi 8 novembre 2010

புவி

இப்போது நாம் இங்கே ( இப்புவியில் ) இருப்பதே ஒரு பாக்கியம்தான், இதைப் புரியாமல் ஏழரைச்சனி, அட்டமத்துசனி என்று அபாக்கியவான்களாகி அழவேண்டாம். பூமியில் வாழாதவனுக்கு ஏது ஏழரைச்சனி, அட்டமத்துச் சனி.

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு சம்பவமும் நாம் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது எண்ணங்கள் எதிர்மறையானால் பயன்களும் எதிர்மறையாகும்.
உன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொறிக்குள் சிக்குப்படாதே, மற்றவர் ஒப்பிட்டால் அதற்குள் சிக்குப்படாதே.

vendredi 5 novembre 2010

தீபமேற்று..

தீயவனை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது தீபாவளி என்கிறாயே.. தீபாவளி கொண்டாடப்படும் நாடுகளின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் நரகாசுரனைவிட நல்லவர்களா இருக்கிறார்கள் என்று என்றாவது உன் நெஞ்சைத் தொட்டு கேட்டிருப்பாயா.. நரகாசுரனை கொன்ற கடவுளுக்கு நன்றி சொல்ல ஆலயம் ஓடுகிறாயா .. ஓடு.. அதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கடவுள் மக்களை காப்பாற்றவா நரகாசுரனை கொன்றார் ? இல்லை.. தேவர்களைக் காக்கவே கொன்றார்… அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்காக போராடிய கடவுள்.. என்றாவது மக்கள் பக்கம் நின்றதாக அறிந்திருந்தால் ஓடிப்போ தீபமேற்று..

தண்ணீர்

தண்ணீருக்கு ஒரு தன்மை உண்டு, அது யாருடன் சேருகிறதோ அதுவாக மாறும். சந்தனத்துடன் சேர்ந்தால் திலகமாகும், மண்ணுடன் கலந்தால் சேறாகும். இதுபோலவே பிள்ளைகளின் நடத்தையும் அவர்கள் யாருடன் சேர்ந்துள்ளனர் என்பதே தீர்மானமாகும்


mercredi 3 novembre 2010

பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்

பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்


1) பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர்.

2)காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.

3)பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்

அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.

4)பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _ நேரு.

5)பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது _ லார்ட் பைரன்.

6)பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.


7)பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _ ஷேக்ஸ்பியர்.

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.

9)எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _ மகாபாரதம்

10) தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்


11)பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் _ தேசிக விநாயகம் பிள்ளை.

12)ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் _பெஸ்லிங்

mardi 2 novembre 2010

பொருள்


பல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள், ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்.

எப்போது அவளுக்காக.....???


பிறந்தது முதல்


பெற்றோருக்காக

திருமணம் முதல்

கணவருக்காக

தாய்மை முதல்

பிள்ளைகளுக்காக

எப்போது அவளுக்காக.....???

மழை


மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்தேன் 'குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே' என்றான் ஆண்ணன் 'எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே' என்றாள் அக்கா 'சளி பிடிச்சிக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு' என்றார் அப்பா தன் முந்தானையால் என் தலையை துவட்டிக்கொண்டே திட்டினாள் அம்மா என்னையல்லா மழையை !

அனுபவியுங்கள்.

 
 
அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.


ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.

இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்

ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.

உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்

ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.

எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.

ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்

ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்

ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.

ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.

ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.

காலத்தின் அரும

     
     காலத்தின் அரும


    01 வருடம் – தோல்வியடைந்த மாணவனுக்குத் தெரியும்.

    01 மாதம் – குறை பிறசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.

    01 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.

    01 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு

       பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.

   01 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.

  01 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.

  01 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப்     போனவனுக்குத் தெரியும்.

lundi 1 novembre 2010

வாழ்க்கை

வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது". இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.


மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!

உ...ழைத்துக் கொண்டிருங்கள்!!!

நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.